Skip to Content

பகுதி 17

  1. தகப்பனார், மகன் பிளவு ஏற்பட்டு மீண்டும் கூடி வாழும்பொழுது புது மார்க்கட் நிலவரம் சாதகமாக இருந்தால் மற்றவரைப்போல இவர்கள் அவ்வாய்ப்பைப் பயன்படுத்த முடியாது.
  2. இன்ஜினீயரிங் காலேஜில், வீட்டார் எதிர்ப்பை மீறி சேர்ந்து வேறு உதவியால் படிப்பு முடிந்து முன்னுக்கு வருபவன் குடும்பத்திற்குப் பலன் வேண்டும் என்று முயன்றால் ஒவ்வொரு முயற்சியும் வெட்டிக்கொண்டு போகும். அன்று எதிர்த்த மனப்பான்மை இன்று ஆதாயத்திற்காக இல்லாமல், அன்பிற்காக மாறினால் வாழ்வு வழிவிடும்.
  3. சிக்கல்

குடும்பம் என்றால் சிக்கல். அறிவில்லாமல் ஏற்பட்ட சிக்கல், ஆத்திரப்பட்டு எழுந்த சிக்கல், பொறாமையால் உள்ள சிக்கல் என தாமே ஏற்பட்டவை, நாமே ஏற்படுத்தியவை என சிக்கலில்லாத குடும்பம் குறைவு. அவை முன்னேறும். மனம் உண்மையை ஏற்றுச் சிக்கலை அவிழ்த்தால் முன்னுக்கு வரலாம். சிக்கலேயில்லாவிட்டாலும் (lower consciousness) தாழ்ந்த ஜீவியமுடையவர் முன்னேற முயன்றால் சிக்கல் உடனே எழும். அவை ஜீவியம் உயராமல் உடையாது.

இந்தக் குடும்பம் தாழ்ந்த ஜீவியமுடையது. தாம் அப்படி இருப்பதாக அறியாதது. குடும்பம் வெளிப்படையாக "நாம் மட்டமானவர்'' எனப் புரிந்து மாறினால் பலன் உண்டு. அதைத் தாயார் ஓரளவுதான் சரிக்கட்டலாம். முழுவதும் ஈடு செய்ய முடியாது. அதை ஏற்பது உண்மை. தம் சமர்ப்பணத்தால் குடும்பத்தினர் தாழ்ந்த பழக்கங்கள், நோக்கங்கள், தாழ்ந்த இலட்சியங்கள் - ஆக தாழ்ந்த ஜீவியத்தை - ஆகியவற்றை முழுவதும் ஈடு செய்வது முடியாது, செய்யக் கூடாது.

சிக்கலை அவிழ்ப்பது கீழிருந்து மேலே வருவது. அது பிரச்சினையைத் தீர்ப்பதுபோல். positiveஆக நினைத்தால் வாய்ப்பை ஏற்று அனுபவிப்பதாகும். அதைக் கருதுவது சிறந்தது. பாஸிட்டிவ்,

நெகட்டிவ் இரண்டுக்கும் மேலானது அன்னை வாழ்வு. அது சுயமான நல்லது, self-existent good. அதற்குரிய உணர்வு,

பொருள்கட்கும் விஷயத்திற்கும் உள்ள ரஸா'

அன்னையை மனிதன் நெருங்குவதும், அதை அன்னை ஏற்கும் வகையும்,

  • அன்னையை அறிந்து அவர் சூழல் நம்மைத் தொட்டவுடன் மனக்கவலை, கிலேசம் பறந்து போகும். பிரச்சினைகள் அப்படியே இருக்கும்.
  • பிரார்த்தனை செய்தாலும், செய்யாவிட்டாலும் உடல் உபாதை, குடும்பக் கஷ்டம், கடன் பளு, சில்லரைப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாய் விலகும்.
  • பெரிய தீராத பிரச்சினைகட்கு வழி பிறக்கும்.
  • அவை எதிர்பாராமல் தீரும்.
  • நமது சில்லரை ஆசைகள், தேவைகள் பூர்த்தியாகும்.
  • மறந்துபோன ஆசைகள் பூர்த்தியாகும்.
  • நாமேயறியாமல் நம் மனதிலிருந்த ஆசைகள் அபரிமிதமாக நம் முயற்சியின்றி பூர்த்தியாகும்.
  • நம் உலகிலில்லாத வாய்ப்புகள் உற்பத்தியாகும்.
  • உலகிலில்லாதது நமக்கு வரும்.
  • வருவது போகாது, பெறுவது நம்மைப் பொருத்தது.
  • நம் அகந்தையை வற்புறுத்தினால் முதலில் வாய்ப்பு போகும். பிறகு போன பிரச்சினைகள் வரும்.
  • முடிவில் அனைத்தும் போகும்.
  • அகந்தையை விலக்கினால், விலக்கும் அளவுக்குச் சமர்ப்பணம் பலிக்கும்.

  • சமர்ப்பணம், சரணாகதியாகும்.
  • சரணாகதி பூர்த்தியாகும் நேரம், ரஸா எழும்.
  • ஆரம்பத்தில் அகந்தை அகன்று சமர்ப்பணம் செயல்பட்டால் இத்தனையும் முதல் நாளே ஒரு விஷயத்தில் நடைபெறும். அவை தொடர்வது அரிது, தொடரக்கூடாது என்ற சட்டமில்லை.

தாயார் இத்தனையையும் பல அளவுகளில் பார்த்தவர். படிப்பால் அறிந்தவர். தாம் பெண்ணானதால் இந்தச் சமூகத்தில் தம் power, authority அதிகாரத்தைச் செலுத்தமுடியாது. ஆணாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தக் கூடாது. அவர் யோகத்தை மேற்கொண்டவர் இல்லை. என்றாலும், யோகம் அவரை அழைக்கிறது. தாயாருக்குக் குடும்பம் முக்கியம். யோகத்தில் குடும்பம் யோகத்தின் பகுதி, அதற்குட்பட்டது. புறத்தில் குடும்பப் பாசத்தால், அகத்தில் பாசத்தாலும் பாதிக்கப்பட்டவர் தாயார். அவர் நிலை,

  • தெரிந்ததைப் பின்பற்றும் சூழல்லை.
  • தெரிந்ததைப் பின்பற்ற சூழல் அனுமதித்தாலும் மனம் இடம் தரவில்லை.
  • மனத்தைக் கடக்கும் பாங்கை அன்னை அளித்தபின் மனத்தைவிட முடியாத மனநிலை.
  • சமர்ப்பணமே முழுவதும் பலிக்கவில்லை.
  • சரணாகதிக்கு ஆத்ம பக்குவம் இருந்தாலும் மனம் வாழ்வை நாடுகிறது.
  • ரஸா' கதவைத் தட்டினாலும் ருசி பின்னிழுக்கிறது.
  • மனம் பலனைக் கருதுகிறது, ரஸாவை நாடவில்லை.
  • அன்னையைவிட மனிதர்கள் முக்கியமாக இருக்கிறது. அகந்தையைவிட்டு நகர முடியவில்லை.
  • அதிர்ஷ்டம் புரிகிறது, அருள் புரியவில்லை. அருள் உள்ளே வாராமல் அதிர்ஷ்டம் பலிக்காது என்று தெரியவில்லை. பேரருள்

காத்திருந்தாலும் மனம் அருளை நாடாமல் அதிர்ஷ்டத்தைக் கருதுகிறது.

புற நிகழ்ச்சிகள் மனத்தைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் நடக்கின்றன. ஒவ்வொரு முறையும் விஷயம் அன்னையா, வாழ்வா என்ற நிலைக்கு வந்தால், மனம் வாழ்வை (அகந்தை) நாடுவது தெளிவாகத் தெரிகிறது.

நாம் அருளை ஏற்கத் தயார் செய்யவும் தேவையில்லை,

ஏற்றால் போதும் என்ற நிலையில் தாயார் தம் மனம் குடும்பத்தை நாடுவதைக் கண்டார்.

குடும்பத்தை நாடினால் அது இறங்கு முகம், உள்ளது போகும், வந்தது பலிக்காது, இல்லாத பிரச்சினைகள் எழும், அவை வளரும். அன்னையை நாடுவது ஏறு முகம், இல்லாதது வந்தபடியிருக்கும், வந்தது பலிக்கும், பிரச்சினைகள் எழா, வாய்ப்பு வளரும் என்று தெரிந்தாலும், தாயார் மனம் மனித மனமாக இருக்கிறது.

அன்னையையறியாத திறமைசாலிகட்கு வாழ்வில் இவை இதே வரிசையில் நடக்கின்றன. அவர் அன்னையை ஏற்றால் அளவு பெருகும். வாழ்வில் பெருகும் செல்வம், நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும். பெரும்பாலும் கெட்டது அதிகமாக இருக்கும். கெட்டது குறைவாக இருந்தாலும், நாளடைவில் வாழ்வில் நல்லது கெட்டதாக மாறும். மாறியது அப்படியே நிலைக்கும்.

சிருஷ்டி என்பது நல்லதைக் கெட்டதாக மாற்றிய அமைப்பு. கெட்டது மீண்டும் நல்லதாவது பரிணாமம். கெட்டது மீண்டும் சீரழிந்து தீமையாகிறது. இது The Life Divineபடி தத்துவம். பிரம்மம் தன்னுள் மறைவது ஒளி, இருளாவது. அதுவே நல்லது, கெட்டதாவது. இது சிருஷ்டிக்கு அவசியம். கெட்டது தீமையாவது அவசியமில்லை என்றாலும், நாளடைவில் தீமையாவது இயல்பு.

  • நாம் நல்லவராக இருக்கிறோமா, கெட்டவராக இருக்கிறோமா என்பது கேள்வியில்லை.

  • நாம் மாறப் பிரியப்படுகிறோமா, இல்லையா என்பதே கேள்வி.
  • மாறுவது என்பது அஞ்ஞானத்தினின்று ஞானமாக எழுவது.
  • நாம் பிரியப்பட்டால் அதே நேரம் அது பூர்த்தியாகும்.
  • மாற மனம் தயங்குவது அஞ்ஞானம் ருசிப்பதாகும்.
  • குடும்பம், பாசம், கடமை என்பவற்றின் பெயரால் நாம் அஞ்ஞானத்தை ரசிக்கிறோம்.
  • அஞ்ஞானத்தை ரசிப்பவன் ஞானத்தை ரசிக்க விரும்புவது மாற்றம், திருவுருமாற்றம், ரஸாவை அறிவது.
  • இதில் புரியக் கூடியது ஒன்றுமில்லை, செய்யக்கூடியதே அனைத்தும்.
  • ஞானம் வேண்டுமா, வேண்டாமா என்பதே கேள்வி.
  • அதிர்ஷ்டம் வேண்டுமா, தரித்திரம் ருசியாக இருக்கிறதா என்பதே அது.
  • அதிர்ஷ்டம் வேண்டுமானால், அருள் வரும்.
  • அருளை வரவேற்றால் அது பேரருளாகும்.
  • அதிர்ஷ்டமிருக்கிறது பேரருள் பெற, ஆசையிருக்கிறது தரித்திரமாக வாழ என நம் நாட்டுப் பழமொழியை மாற்றி எழுதலாம்.

சமர்ப்பணம் பலிக்கவில்லை, நகரவில்லை என நாம் பார்க்கிறோம். சமர்ப்பணம் செய்யவேண்டும் என நினைத்தால், சமர்ப்பணமாகவில்லை எனக் கூறுவது சரியா? குழந்தை பள்ளிக்குப் போகவில்லை என நாம் கூறினால், என்ன அர்த்தம்? தானே குழந்தை பள்ளிக்குப் போகிறேன் என்று சொல்லுமா? சொல்லாது. குழந்தை போகக் கூடாது என்றிருப்பதை மாற்றி நாம் வற்புறுத்தி பள்ளிக்கு அனுப்பாவிட்டால் போகாது. குழந்தை பள்ளிக்குப் போகக் கூடாது என நம்மைப் பற்றியிருப்பதைப்போல் நாம் சமர்ப்பணம் வேண்டாம் என வாழ்வைப் பற்றியுள்ளோம். நாம் என்பது நம் மனம். மனத்தில் ஞானம், உறுதி (knowledge,will) என்று இரு பகுதிகளுண்டு. உறுதி வாழ்வைப் பற்றியுள்ளது. அதன் பிடியைத் தளர்த்தி விடுவிக்க

வேண்டும். ஞானம், வாழ்வு சரி என்று நினைப்பதையும் மாற்றி சமர்ப்பணம் வேண்டும் எனக் கூறவேண்டும்.

  • நாம் வாழ்வை விடுவதும், வாழ்வை விடவேண்டும் என அறிவதும் முதல் செய்ய வேண்டியது.
  • வாழ்வை விட்டகன்ற மனம் சமர்ப்பணத்தை நாடுவது அடுத்தது.

முதல் செய்யவேண்டியதைச் செய்யாமல் இரண்டாவதைச் செய்வது பலன் தாராது. தாயாருக்கு தம் கணவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது முக்கியம். "நான் மனைவி, மனைவிக்குரிய இலட்சணம் அது'' என நினைக்கிறார். அதுவரை கணவர் நினைப்பதே நடக்கும். தாயார் நினைப்பது நடக்காது.

  • எவரிடம் அதிகாரம் இருக்கிறதோ அவரிஷ்டம் பூர்த்தியாகும்.
  • அப்படியானால் இந்த அதிர்ஷ்டம் வர இந்த வீட்டில் மனைவி கணவனை அதிகாரம் செய்யவேண்டும் என்று புரிந்து கொள்ளலாமா?

அது சரியில்லை. மனைவிக்கு அதிர்ஷ்டம் புரிகிறது. கணவர் அதிர்ஷ்டத்தைப் புரிந்து ஏற்றால் மனைவிக்குப் பணிவதாக அர்த்தமில்லை. அறிவை ஏற்பதாக அர்த்தம். கணவரும், குழந்தைகளும் குடும்பத்திற்கு வந்துள்ள வாய்ப்பை அறியவேண்டும், ஏற்கவேண்டும். விஷயம் தடம் மாறிப்போனால் project இதே இடத்தில் நின்றுவிடும். இதற்குத் தாயார் என்ன செய்ய முடியும்? அதிர்ஷ்டத்தைக் கணவர் ஏற்றால், என் சொற்படி நடக்கவேண்டும்' என மனைவி நினைத்தால் அது தடையாகும், அகங்காரமாகும். தாயாருக்கு ego இல்லை என்றால், அதிர்ஷ்டம் அகந்தையைவிட முக்கியமானால் கணவரும், குடும்பமும் அதிர்ஷ்டத்தை ஏற்கும். இங்கும் இரண்டு நிலைகள் உள்ளன.

  • அனைவரும் சேர்ந்து விபரமாகப் பேசி விஷயத்தை அறிந்து ஏற்றுக்கொண்டால் விஷயம் நகரும்.

  • எவரும் எதையும் கருதாமலிருந்தால், மனைவியே தன் முயற்சியால் குடும்பம் நகர முயல்வது சிரமம். குடும்பத்திற்கு இல்லாத ஆர்வத்தை தாயாரே கொடுப்பதாகப் பொருள்.
  • அப்படிச் செய்வது குடும்ப பாரத்தை தாயார் ஏற்பதாகும், இது சிரமம்.
  • குடும்பம் அதிர்ஷ்டத்தையும், தாயாரையும் ஏற்பது சுலபம்.
  • தாயாரே குடும்பத்தை ஏற்க அவர் அன்னையை நாடி அன்னைமூலம் குடும்பத்தை ஏற்பது ஏற்கனவே சொன்னது போல், தகப்பனாரே பையன் பரீட்சைக்குப் படிப்பதாக முடியும்.அது தலைகீழாக நடப்பதாகும்.

எண்ணமாக நாம் அறிவது உடல் urge வேகமாக எழுகிறது. இதற்கு சூட்சுமப் பகுதியுண்டு. subtle physical urge, வேகம் உணர்வில் வெளிப்படுவது sensation. இதற்கும் சூட்சுமப் பகுதியுண்டு. அது subtle vital sensation.அதுவே நெஞ்சில் வெளிப்படும். அது emotion. அதன் சூட்சுமப் பகுதி subtle emotional impulse. முடிவாக எண்ணமாகவும், சூட்சுமமான எண்ணமாகவும் மனத்தில் தெரியும். நாம் நினைப்பது gross thought. ஜடமான எண்ணம். சாப்பிடவேண்டும் என்பது ஜடமான எண்ணம். அது எழுமுன் மனத்தில் impulseஆகவும் subtle impulseஆக தோன்றும். சமர்ப்பணம் அங்கு ஆரம்பித்து உடலில் சூட்சும வேகத்தில் முடிவது பூர்த்தியாகும்.

Mind

Vital

Body

Gross thought

ஜடமான எண்ணம்

Gross sensation

ஜடமான உணர்வு

Gross urge

ஜட வேகம்

Subtle thought

சூட்சுமமான எண்ணம்

Subtle sensation

சூட்சுமமான உணர்வு

Subtle urge

சூட்சுமமான வேகம்

Subtle impulse of thought

சூட்சுமமான உந்தன் எண்ணம்

Subtle impulse of sensation

சூட்சுமமான உணர்வின் உந்தல்

Subtle impulse of urge

சூட்சுமமான வேகத்தின் உந்தல்

சாப்பிடப் போகவேண்டும் என்ற எண்ணம் 9 கட்டங்களுக்கு முன் எழுகிறது. சமர்ப்பணத்தை மேற்கொண்டு அதை ஒவ்வொரு கட்டமாக உயர்த்திப்போய் கடைசி கட்டத்தை அடையலாம். சமர்ப்பணம் எந்தக் கட்டத்தில் பலித்தாலும் அதற்குரிய பலன் உண்டு. கடைசி கட்டத்தில் பலித்தால் முழுப் பலனுண்டு. சமர்ப்பணம் பழக்கமானால் நாம் எந்தக் கட்டத்திலிருக்கிறோம் என அறியலாம். உஷாராக இருந்தால் எண்ணம் உணர்வாகும்முன் வேகமாகும் நிலையிலேயே, அதற்குமுன் சூட்சும உந்துதலாகும் நிலையிலேயே அதைப் பிரித்துச் சமர்ப்பணம் செய்யலாம்.

  • எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்யச் சொல்லும்,
  • உணர்ச்சியைச் சமர்ப்பணம் செய்ய, சொல்லற்ற உணர்வும்,
  • வேகத்தைச் சமர்ப்பணம் செய்ய சொல்லற்ற உணர்வற்ற வேகமும்,
  • அவற்றை சூட்சுமத்தில் சமர்ப்பணம் செய்ய அந்த அந்த நிலைக்கேற்ற சூட்சுமமும் தேவை.
  • ஆர்வம் (பக்தி) உள்ளவர் ஆர்வத்தை இதே நிலைகளில் சமர்ப்பணம் செய்வது எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்வதைவிடச் சிறப்பு.
  • நோக்கத்தைச் சமர்ப்பணம் செய்வது அதனினும் உயர்வு.
  • ஜீவனின் நோக்கத்தைச் (motive) சமர்ப்பணம் செய்வது முடிவானது.
  • அங்கும் ஜடம், சூட்சுமம், உந்துதல் (impulse) என்ற பிரிவுகள் உள.
  • ஆதி, அந்த உந்துதல். அது எழும்பொழுது செய்யும் சமர்ப்பணம், சரணாகதிக்கு முன் கட்டம். அவருக்குச் சரணாகதி முடியும்.

தாயாருக்கு இவையெல்லாம் படிப்பால் தெரியும். முடியாது. குடும்பம் என்றவுடன் பாசமும், கணவருக்குப் பணியவேண்டும் என்பதும் எழுவதால் இந்த நிலைகளை அவரால் செயல்படுத்த முடியாது. இவையெல்லாம் முடியவேண்டும். இந்த 9 கட்டங்களில் முதற்கட்டம் அனைவருக்கும் பலித்தால் குடும்பத்திற்கு வந்த அத்தனை வாய்ப்புகளும் பூர்த்தியாகும். தாயாரே செய்வதானால்

9ஆம் கட்டத்தில் செய்யவேண்டும். அது மிகக் கடினம். அப்படி ஒருவரே செய்தால்,

அனைவரும் எதிராக நடந்து தாயார் செய்வதை அழிக்க முயல்வர்.

100க்கு மேலான கடன்காரர் நெருக்குபவருக்கு 100க்கு மேலான உறவினர்களும், நண்பர்களும் தொடர்ந்து உதவி மேல் உதவி செய்கிறார்கள். இந்த நெருக்கடியான நிலையில் அவருக்குப் பெருந் தொகை சாங்ஷனாகி பாங்கில் அவர் vaultஇல் உள்ளது. சாவி அவர் கையில். சர்க்காருக்கு அது சம்பந்தமாகக் கட்டவேண்டிய தொகையுண்டு. சர்க்கார் அத்தொகையைக் கட்டிவிட்டு பாங்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள் என்கிறது. பாங்க் பணத்தை எடுத்து அதிலிருந்து கட்ட அனுமதியில்லை. பாங்க்கே அப்பணத்தை சர்க்காருக்குக் கட்டிவிட்டு மீதியை இவருக்குத் தரலாம்.

  • உள்ளது பெரிய நெடுநாள் சிக்கல்.
  • திடீரென வந்தது மிகப் பெரிய உதவி.
  • தடை அர்த்தமற்றது.

இந்த நேரம் தடையை விலக்க அன்னை வழி செய்வார்களா? இரு வகைகளில் வழி செய்வார். நமக்கு என்ன தடை இன்று இருக்கிறதோ, இதே தடையை இன்று நாம் மற்றொருவர் விஷயத்தில் செய்வோம். அல்லது ஏற்கனவே செய்திருப்போம். அது இல்லாமல் இது வாராது. அது போனால் இத்தடை விலகும். சர்க்காரில் இதுபோன்ற சட்டங்களுண்டு. சர்க்கார் உத்தியோகஸ்தர் எலக்ஷனில் நிற்க வேலையை ராஜினாமா செய்யவேண்டும். எலக்ஷனில் ஜெயித்தபின் பதவியை ஏற்க ராஜினாமா செய்யவேண்டும் என்று சட்டமில்லை. வீடு மாற்றும்பொழுது அட்வான்ஸ் தர இதுபோன்ற சிரமம் வரும். இருக்கும் வீட்டு அட்வான்ஸ் திரும்பிவர ஒரு மாதம் ஆகும் என்றால் புது வீட்டுக்காரர் சிலர் பொறுத்திருப்பார்கள், சிலர் இருக்கமாட்டார்கள். ஒரு இக்கட்டான நிலையிது. பாங்கில் பணமுள்ளவர் தம் வாழ்வில் அதுபோன்று நடந்திருந்தால் அதை

இன்று மனதால் மாற்றினால், சர்க்கார் தடை விலகி பாங்க் பணம் கைக்கு வரும்.

  • நமக்கு அர்த்தமற்றதாகத் தோன்றும் தடை வாழ்வுக்கு அர்த்தமுள்ளது.
  • அந்த அர்த்தம் புரிபவன் சாதிப்பான். அது அர்த்தபுஷ்டியுள்ள அர்த்தம்.
  • Correspondence தொடர்பின் முக்கியத்தை ஏற்பவர் தொடர்ந்து சாதிப்பார்.

வாழ்வில் சாதிக்கத் தேவையானவை ஏராளம். அவற்றுள் முக்கியமானவை நம்பிக்கை, கவனம் observation, தொடர்பு correspondence, ஆகும். correspondenceஆக உள்ளது எது எனத் தெரியாத நேரம் உண்டு. தெரியாவிட்டாலும் அப்படி ஒரு தொடர்பு இருப்பதாக ஏற்றுக்கொண்டு அது போகவேண்டும் எனப் பிரார்த்தனை செய்தால் தடை விலகும். ஆழ்ந்த பிரார்த்தனை நம்மை அறியாமல் தடையை விலக்கிப் பிரச்சினையைத் தீர்க்கும். Self-awareness என்பதே யோகம். இங்கு நம் குறைகள் நமக்குத் தெரிவது self-awareness. அதை ஏற்பது சாதனைக்கு வழி செய்யும். உள்ளதில் பெரிய தைரியம் தம் குறையை ஏற்பது. அதனால் தைரியம் இங்கு சாதிக்கும். தைரியலக்ஷ்மியை மற்ற 7 இலட்சுமிகளும் தேடி வருகிறார்கள் என்பது புராணம். புராணம் புராதனமானது. புராதனம் விவேகம் நிறைந்தது.

சாவித்திரிக்கு அவளுள் உள்ள மனம், Man of sorrows சோக தேவதை, Mother of Might , பலத்தின் தெய்வம் எனப் பலர் உள்ளிருந்து எழுந்து வந்து, "நானே உன் ஆத்மா'' என்றபொழுது அவை தன் ஆத்மாயில்லை, ஆத்மாவின் பகுதி என்ற தெளிவு இருந்ததால், அவற்றையெல்லாம் கடந்து அவளால் எமனைத் தொடர முடிந்தது. எமன் கூறும் வாதங்கள் நம் மனம் கூறும் வாதங்கள். அவற்றை சாவித்திரியால் கடக்க முடிந்ததால் எமனை வெல்ல

முடிந்தது. எமனிடமிருந்து சத்தியவானை மீட்டபின் இறைவன் சாவித்திரிக்கு மோட்சம், சொர்க்கம் தர விரும்புகிறார். இறைவனே தருவது அருள். அதை எப்படி மறுப்பது? இறைவன் நமக்குள்ள ஆசையைப் பூர்த்தி செய்ய விரும்புவதால்,

சாவித்திரி அதையும் மறுக்கிறாள்.

சாவித்திரி அவதாரம் பலிக்கிறது. நாம் அன்னையைக் கண்டபின் நிமிஷத்திற்கொருதரம் எழுவது என்ன?

அன்னையைவிட்டு அகலும் வாழ்க்கை சந்தர்ப்பம்.

அதை ஏற்காதவரில்லை. ஏற்பவருக்கு அருள் அத்துடன் முடிகிறது. கடைசிவரை ஏற்க மறுப்பவருக்கு அருள் காத்திருக்கிறது. Ascent of Truth என அன்னை எழுதிய கதையும் அதையே கூறுகிறது. முடிவு என்பதை 10 பேரில் இருவர் கண்டபின், மலை உச்சிக்கு வருகின்றனர். அதுவரை பெரும்பாடு. அது முடிவன்று. அங்கிருந்து பள்ளத்தில் குதிக்கவேண்டும். அதை ஏற்பவருக்கு அன்னையுண்டு.

பம்பாயில் ஒரு வழக்குண்டு. எந்த நாட்டில் உள்ள பொருள் வேண்டுமானாலும், கறந்த பால் பகலில், இரவில் எப்பொழுது வேண்டுமானாலும், எந்த ஊர் வடாம் வேண்டுமானாலும் பம்பாயில் கிடைக்கும். விலை என்ன எனக் கேட்காமல் கொடுப்பவருக்குக் கிடைக்கும். பிரபஞ்சத்தில் ஒரு காரியம் உண்டு எனில் அதைப் புரிந்துகொள்ளும் அறிவு நம் மனத்திற்குண்டு என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். நாம் - அன்னையிடம் வந்தவர் - அதைக் கீழ்க்கண்டவாறு அறியவேண்டும்.

உலகில் ஒரு பொருள் உண்டு எனில் அது அன்பர்க்குக் கிடைக்கும். செல்வம், பதவி, திறமை, செல்வாக்கு, பணம், அந்தஸ்து, எதுவானாலும் அது அன்பர்க்குண்டு. நமது முயற்சியை முழுவதும் தீர்ப்பவருக்கு அது நிச்சயம் உண்டு.

மக்களை எத்தனை வகைகளாகவும் பிரிக்கலாம். இது நாமறிந்ததே. மீண்டும் கூறினால் மிகையாகாது.

  1. தூய்மையான நல்லெண்ணமுள்ள பரந்த மனம்.
  2. அறிவுள்ள உயர்ந்த உள்ளம்.
  3. அற்புதமான திறமை நிறைந்த நல்ல மனிதர்.
  4. பிறருக்குச் செய்யும் உதவியை இறைவனின் சேவையாக ஏற்ற அகந்தையற்ற உயர்ந்த ஆத்மா.
  5. பரநலமில்லாவிட்டாலும், சுயநலமற்றவர்.
  6. சொந்தமாக உழைப்பவர். உற்றார், நண்பருக்குகந்தவர்.
  7. தவறற்ற சுயநலம்.
  8. வெறும் திறமையுள்ள சுயநலம்.
  9. பிறரை நஷ்டப்படுத்திப் பெறும் சுயநலம்.
  10. 10 பிறரை நஷ்டப்படுத்தி இன்பம் பெறுபவர்.
  11. யாருக்காவது தொந்தரவு கொடுப்பது இன்பம் என நினைப்பவர்.
  12. ஏதாவது வேலை கெட்டுப்போனால் சந்தோஷப்படுபவர்.
  13. புதுப் புதுப் பொய் சொல்வதில் சந்தோஷப்படுபவர்.
  14. யாராவது வசமாக மாட்டிக்கொண்டால் ஏமாற்றக் காத்து இருப்பவர்.
  15. அப்படிக் கொள்ளையடித்தபின் தம்மால் அடுத்தவருக்கு - நஷ்டப்பட்டவருக்கு - நல்லது, இலாபம் எனப் பேசக் கற்றுக் கொண்டவர்.
  16. தெண்ட சோறு.
  17. தெண்ட சோறு என்பதை இலட்சியமாகக்கொண்டு கனவு காண்பவர்.
  18. எதைத் தொட்டாலும் கரியாக்குபவர்.

  1. கரியானபிறகு பிறரை அதற்குக் காரணம் காட்டுபவர்.
  2. மண்ணாங்கட்டி - சொரணையற்ற மண்ணாங்கட்டி.

இந்த 20 நிலைகளும் மனிதனை முழுமையாக விவரிக்காது. சுமார் 20 தலைப்புகளில் - திறமை, அன்பு, கருணை, தூய்மை, ஞானம், ...... - ஒவ்வொரு தலைப்பின்கீழ் 20 நிலைகளாக மனிதனை 400, 500 வகைகளாகப் பிரிக்கலாம்.

  • நமக்கு மனிதனோ, உலகமோ முக்கியமில்லை.
  • நமக்கு நாம் முக்கியம், நம் நிலை முக்கியம்.
  • எந்த நிலையிலிருக்கிறோம் என்பது பொருட்டன்று.
  • அதை ஏற்க மனம் சம்மதிக்குமா?
  • அதை உண்மையாக மனம் கணிக்குமா?
  • அதிலிருந்து ஒரு நிலை உயர மனம் விழையுமா?

என்பதே கேள்வி. அதைச் செய்ய முயல்பவர்க்கு முன்னேற்றம் முடிவற்றது. அதை மிகச் சுருக்கமாகச் செய்யும் வழி மிகக் கடினமானது. நாம் எந்த நிலையிலிருந்தாலும் அதற்குரிய எண்ணங்கள் ஆயிரமாயிரமாக மனத்தில் எழும், எழுந்தபடியிருக்கும். நாம் அவ்வெண்ணங்களைச் சிந்திக்கும்வரை அதே நிலையில் இருப்போம். அவற்றை ஏற்க மறுத்தால், அதைவிட்டு உயருவோம். அவை 407ஆம் பக்கத்தில் கூறிய 9 நிலைகளில் எழும். எந்த நிலையை மறுத்தாலும் அடுத்த நிலையில் எண்ணம் எழும். கடைசி கட்டமானது,subtle physical உடலின் சூட்சும வேகமாக எழும். அந்த நிலையில் எண்ணத்தை மறுத்தால் சமர்ப்பணம் செய்யலாம். சமர்ப்பணம் அடுத்த கட்டத்திற்கு நம்மை உயர்த்தும். அப்படி உயருவதற்கு முடிவில்லை. நாமே ஏற்படுத்துவதே முடிவு. தாயார் The Life Divineஐப் பற்றி அடிக்கடி சொல்வதால் அனைவரும் அதன் முக்கியத்துவத்தை அறிவர். அவர் கூறியவை,

  • அன்பர்கள் அன்னை, பகவானை ஏற்கும் அளவுக்கு அவர்கள் காரியம் பலிக்கும்.
  • ஏற்பது என்பது அவர்கள் முறைகளைக் கடைப்பிடிப்பது.
  • அது பெரிய விஷயம் என்றாலும், அதற்குரிய மனமாற்றம் அதை நிறைவு செய்யும்.
  • மனம் ஏற்று மாறுவதற்கு அடுத்த கட்டம் மனம் புரிந்து மாறுவது. புரிவது எனில் 1) பலனுண்டு எனப் புரிவது, 2) நல்லது எனப் புரிவது, 3) எதனால் அந்த நல்லது வருகிறது என்ற விளக்கத்தின் அடிப்படைத் தத்துவம் புரிய The Life Divine படிக்க வேண்டும். உணர்வு, உடல் புரிவது மேற்கொண்ட நிலைகள்.

இதுபோல் தாயார் அடிக்கடி பேசுவதாலும், நேரம் வரும்பொழுது The Life Divine விளக்கங்களைக் கூறுவதும் கணவர், பிள்ளைகள் மனத்திலுள்ளதால் அனைவரும் அதைப் படிக்க விரும்பினர். முரண்பாடு, உடன்பாடு என்பதை ஏற்க, சிரமப்பட்ட விஷயத்தில், அதை அப்படி ஏற்கவேண்டும் என்பதைவிட அது எப்படி உடன்பாடாக இருக்கிறது என்ற விளக்கம் அனைவருக்கும் மன நிறைவும், ஆச்சரியமும் கொடுத்தது. கசப்பான விஷயத்தை இனிப்பான அவசியமாக The Life Divine விளக்குவது அந்த நேரம் கண்ட அனுபவம். அதிலிருந்து The Life Divineனினுடைய முக்கியத்துவம் தெரிய ஆரம்பித்தது. நூலின் முக்கிய 70 கருத்துகளை விளக்கும் உரையாடல், அதுபோன்ற மற்ற சிறு நூல்களைப் படித்துவிட்டு மூலத்தைப் படிக்க விரும்பினர். உயர்ந்த தத்துவங்களைப் படிப்பதும், அவை வாழ்வில் எப்படி நடைமுறையில் காணப்படுகிறது என்று கண்டபின்,

  • சமர்ப்பணம் வேண்டாம்.
  • நாங்களெல்லாம் நன்றாகத்தானேயிருக்கிறோம்.
  • எங்களைப் பொய்யர் என நினைத்துவிட்டீர்களா?
  • நடப்பதைப் பேசுவோம்.

போன்ற பாஷை இதன்பிறகு கேட்கவில்லை. ஏதோ அறிவில்லாமல் நாங்கள் அப்படிப் பேசினோம் என இப்பொழுதெல்லாம் நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். The Life Divine எந்த அளவு புரிகிறது என்பதைவிட ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இது நல்லது என்றாலும், காரியம் முடிய இவையெல்லாம் போதாது என்பதே விஷயம். ஒருமுறை அதுபோல் நடந்த உரையாடல்,

கணவர் : The Life Divine படித்தால் அது நம்மை அடியோடு மாற்றிவிடும்.

பெரியவன் : உயர்த்திவிடும் அப்பா.

பெண் : எப்படி?

சிறியவன் : சொல்லத் தெரியாது. அண்ணன் இப்பொழுதெல்லாம் என்னை tease பண்ணுவதில்லை

கணவர் : படித்தால் நிதானம் வருகிறது.

பெரியவன் : பகவான் நம்மை மாற்றவில்லை. நம் வாழ்க்கைக்குப் புதிய அடிப்படையிருக்கிறது எனக் கூறுவதால் நம் மனம் அறிவோடு மாறுகிறது.

கணவர் : எதைச் சொல்கிறாய்?

பெரியவன் : சுத்தம் முக்கியம் என்று செய்கிறோம். சத்திய ஜீவிய சக்தி சுத்தமான இடத்தில் வரும் என்று கூறுவதால் ஏன் முக்கியம் எனப் புரிகிறது.

பெண் : ஏன் அப்படி என்று விளக்கம் வருகிறதா?

தாயார் : அழுக்கு என்பது unorganised unconsciousness. சுத்தம் என்பது organised consciousness.

கணவர் : இப்படிப் பார்த்தால் நாம் அறிந்துகொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கும் போலிருக்கிறதே.

கணவர் : நாணயம் நல்லது என ஏற்கிறோம். ஏன் நல்லது என நமக்குத் தெரியும். தத்துவம் என்ன சொல்கிறது?

தாயார் : நாணயம் என்பது value பண்பு. Value என்பது spiritual skill ஆன்மாவின் திறமை. சத்தியஜீவியம் அதன்மூலம் அதிகமாகச் செயல்படும்.

பெரியவன் : இவையெல்லாம் புத்தகத்திலில்லை. அவர் சொல்வதிலிருந்து நாமே யோசனை செய்து கண்டுகொள்ளவேண்டும்.

சிறியவன் : இதுபோல் புரிந்தால் இடக்குக்கு வேலையில்லை.

பெண் : அன்னை பக்தர்கள் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்பதற்கு என்ன தத்துவம்?

தாயார் : பெரியவன் நேற்று அழகாகச் சொன்னான்.

கணவர் : நான் சொல்கிறேன். The more subtle the more powerful  என்று நூலில் வருகிறது. மற்றவர்கள் vitalஆல் வேலை செய்தால் நாம் psychicஆல் வேலை செய்கிறோம். அது சூட்சுமமானது, அதிகப் பலன் தருகிறது.

பெண் : இருங்கப்பா, நான் எழுதிக்கொள்கிறேன்.

கணவர் : ஏன் சூட்சுமத்திற்கு அதிக சக்தி என்றும் கூறலாம்.

பெரியவன் : சொல்லுங்க.

கணவர் : காரணம், சூட்சுமம், ஸ்தூலம் என்பது படிப்படியாக வருகிறது. ஸ்தூலம் மெதுவாக நகரும். சூட்சுமம் வேகமாக நகரும். வேகமாக நகர்ந்தால், அதிக சக்தியுண்டு. அதனால் பலன் அதிகம்.

வெளியான நூல்களை எல்லாம் படித்து இதுபோல் கம்பெனி, பாக்டரி, வீட்டு விஷயங்களில் பேசியதால் வீட்டின் நிலை மாறுகிறது.

இந்த மாற்றம் பாக்டரியில் அப்படியே தெரிவதால் அனாவசியமான பேச்சிற்கே இடமில்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. கம்பெனி வேலைகள் மும்முரமாக நடைபெறுகின்றன. எதுவானாலும் பார்ட்னர் ஒரு மணி நேரம் வீட்டிற்கு வந்து போவது ஊரிலிருந்தால் தவறாது. திறமையாகக் காரியங்கள் நடைபெறுவது கம்பெனியில் பெரிய திருப்தி, ஆச்சரியம். அடுத்த 6 மாதத்தில் 40 கோடிக்கு கட்டிடங்கள், மெஷின்கள் வரும், வேலை நடக்கும். அமைந்த கான்ட்ராக்டர்கள் நாணயஸ்தர்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. வீடு லேசாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் பலனைக் கம்பெனியில் தாயார் காண்கிறார். 3 நாட்கள் வீடு மௌனத்தால் கனத்தது. பெரியவன் internetஇல் கம்பெனி சம்பந்தமான டெக்னாலஜி எக்ஸ்பர்ட் இந்தியா வந்திருப்பதை அறிந்து அவருடன் பேசினான். அவருக்கு internetமூலம் நம் கம்பெனி தெரியும். அவர் 6 மாதத்திற்குப் பதிலாக புதிய தன்னுடைய முறையால் 3 மாதத்தில் 25 கோடியில் இரு மடங்கு உற்பத்தி செய்து தருகிறேன் என்றார். கம்பெனியில் வேலையை நிறுத்திவிட்டு எக்ஸ்பர்ட்டை அமர்த்தி வேலையை அவர் சொல்படி முடித்தனர். வீடு குதூகலமாகிவிட்டது. பாக்டரியில் ஒரே கொண்டாட்டம். பார்ட்னருக்கும், தாயாருக்கும் தவிர இம்மாற்றம் The Life Divine படிப்பதால் ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இருவரும் அதைச் சொல்லவில்லை.The Life Divine படிக்க ஆரம்பித்தபின், Synthesis of yoga,Savitri,Mother's 18 vols,13 volumes of Agenda வீட்டுக்கு வந்துவிட்டன. படிப்பது என்றால் இவற்றைப் படிப்பது என்றாகிவிட்டது. ஒரு நாள்,

பெரியவன் : அம்மா, எமன் ஏம்மா ஒளிமயமான பின்னும் குதர்க்கமாகப் பேசுகிறான்?

பெண் : சாவித்திரியின் ஆன்மாக்கள் என எழும் 7, 8 தெய்வங்கள் அவளைத் தன் இலட்சியத்திலிருந்து மாற்ற முயலவில்லையா?

கணவர் : இறைவனே சாவித்திரிக்கு, சொர்க்கத்தை அளிக்கிறாரே.

சிறியவன் : அப்போ, நாமெல்லாம் தப்பில்லை.

தாயார் : சமர்ப்பணம் பலிக்க பல ஜென்மங்களாகும். சாவித்திரி உடலை விட்டு எமனைத் தொடர்வதுபோல அது. பலித்த பின், பலிக்க ஆரம்பித்தபின், இத்தனை temptations வரும். அத்தனையும் நம் பழைய ஆசைகள், ஆழ்ந்த ஆசைகள், மனிதனாக நாமிருப்பதால் உள்ள தேவைகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய முனையும். இவற்றில் எதை ஏற்றுக்கொண்டாலும் சமர்ப்பணம் பூரணமாகப் பலிக்காது. சரணாகதி இதையும் கடந்தது. அப்படிப்பட்ட நிலையை நம் அனைவருக்கும் அன்னை தாமே அளிப்பதைப் பெற நம் பங்கு சரணாகதி. இதை எழுதும்பொழுது கரண்ட் நின்றுவிட்டது. சரணாகதி எவ்வளவு பெரியது என்பதை கரண்ட் நிற்பது காட்டுகிறது.

சிறியவன் : புரியலைம்மா.

தாயார் : அவ்வளவு பெரிய முறைக்குரிய பலன் உலகத்தைவிடப்

பெரியது. அப்பலனை அன்னை நமக்களிக்க முன்வருகிறார். அதற்குச் சமமான அகத்திண்மை சமர்ப்பணம், சரணாகதி.

கணவர் : நமக்குப் பொருத்திப் பேசு.

தாயார் : நாம் இப்பொழுது பாக்டரி, அந்தஸ்து ஆகியவைப் பற்றி நினைக்கிறோம். நம்மைப் போன்றவர்க்கு, இதுபோன்ற நிலையில்லை. எட்டாததை நமக்கு அளிக்கும்பொழுது நாம் செய்யவேண்டியது என்ன?

பெரியவன் : நன்றியுடன் பெற்று நல்லபடி அனுபவிக்கலாம்.

தாயார் : நடைமுறையில் அது பலனைமட்டும் பெறுவதாகும்.

கணவர் : அப்புறம்?

தாயார் : அன்னை நமக்குப் பலனைத் தரவில்லை, பலனை மட்டும் தரவில்லை. பலன்மூலமாக அன்னை தன்னையே நமக்குத் தருகிறார்.

கணவர் : இது எப்படிப் புரியும்?

சிறியவன் : சொன்ன பிறகு புரிகிறதா? எனக்குப் புரியவில்லை.

பெண் : பரிசு என்பது பிரியம். பரிசைப் பெற்றுப் பிரியத்தை மறக்கலாமா?

சிறியவன் : அன்னையின் பிரியம் நமக்குத் தேவைப்படவில்லை.

தாயார் : நமக்கு அன்னையின் பிரியம் தேவைப்படுவதும், அன்னை தேவைப்படுவதுமே விஷயம்.

கணவர் : குள்ளச்சாமி ஸ்ரீ அரவிந்தரை, "பெற்ற சித்தியை கைவிட்டபின் பெரிய சித்தி வரும்'' என்கிறாரே, அது போலவா?

பெரியவன் : பாக்டரியை விட்டுவிட வேண்டுமா?

தாயார் : பாக்டரி மீதுள்ள ஆசையை விடவேண்டும். பொய்க்கு மெய் மீது ஆசை வருவது யோகம்.

சிறியதுதான் பெரியது என அறிவது யோகம்.

அனைவரும் படிக்க ஆரம்பித்தபின் சந்தித்து படித்ததை விவாதிப்பதால் வீட்டின் சூழல் உயர்ந்துவிட்டது. ஏற்கனவே இருந்த மட்டமான பேச்சு, அடிப்படை சந்தேகங்கள், எதிர்மாறான பழக்கங்கள் பெரும்பாலுமில்லை. அதனால் நயமான பேச்சு, உயர்ந்த நம்பிக்கை, பாராட்டுக்குரிய பழக்கங்கள் வந்துவிட்டதாக அர்த்தமில்லை. விவாதத்தின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்தபடியிருந்தது. அதுபோன்ற ஒரு விவாதம்,

பெரியவன் : அம்மா, அகந்தை கூடாது என்கிறோம். சரணாகதி வேண்டும் என்கிறோம். யார் சரணம் செய்வது,

அகந்தையா? அதைச் சரணாகதிக்கு எதிர்பார்க்க முடியுமா?

தாயார் : அகந்தை கரையவேண்டும். சரணாகதியை செய்யவேண்டியது ஆத்மா.

சிறியவன் : ஆத்மாதான் சாட்சியாயிற்றே.

கணவர் : சைத்தியப்புருஷன்.

பெண் : சைத்தியப்புருஷனை அடையத்தானே நாம் சரணாகதியை மேற்கொள்கிறோம்.

தாயார் : சரணாகதிக்குக் கர்த்தா சைத்தியப்புருஷன் என்பது சரி.

பெரியவன் : எப்படி சைத்தியப்புருஷனை விடுவிப்பது?

தாயார் : நாம் என்பது ஆத்மா. சிருஷ்டியில் ஆத்மா, பரிணாமத்தில் சைத்தியப்புருஷன். மனிதன் மனத்தில் வாழ்பவன். அவன் மனத்தோடு ஐக்கியமாவதால் தன்னை மனம் என நினைக்கிறான்.

பெரியவன் : சிந்தித்தால் மனத்திலிருப்பதாகப் பொருள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

தாயார் : சிந்தனையை ஏற்காவிட்டால்?

பெரியவன் : நாம்' - ஆத்மா ஏற்காவிட்டாலா?

தாயார் : ஆத்மா தன்னை மனம் என நினைக்கிறது. சிந்தனையை ஏற்காவிட்டால் தன்னை மனம் என நினைக்காது.

பெரியவன் : மனம் என நினைக்காவிட்டால், ஆத்மா என அறியுமா?

தாயார் : ஆம்.

பெரியவன் : அதற்கு மௌனம் வேண்டும்.

தாயார் : மௌனத்தை நாடினால் ஆத்மா, சாட்சிப்புருஷன் தெரிவான்.

பெரியவன் : சமர்ப்பணத்தை மேற்கொண்டால் சைத்தியப்புருஷன் வெளிவருமா?

தாயார் : சமர்ப்பணம் சைத்தியப்புருஷனை வெளிக்கொண்டு வந்தால், சைத்தியப்புருஷன் சரணாகதியை மேற்கொள்வான்.

பெரியவன் : எண்ணம் சுலபமாகச் சமர்ப்பணமாகமாட்டேன் என்கிறது.

தாயார் : எண்ணம் தன்னை நம்பினால் சமர்ப்பணமாகாது. வீட்டில் திருடு போனபடியிருக்கிறது. திருடும் வேலைக்காரனை நிறுத்தினால், அடுத்தவன் திருடுகிறான். சமர்ப்பணத்தால் திருடு போன பொருள் கிடைக்கிறது. திருடு நிற்கமாட்டேன் என்றால், திருடுபவனைக் கட்டி வைத்து அடிக்காமல், திருடு நிற்காது என்ற எண்ணத்தில் நம்பிக்கையுள்ளவரை அவ்வெண்ணம் சமர்ப்பணமாகாது.

பெரியவன் : அதை நம்பாமல் எதை நம்புவது?

தாயார் : கட்டி வைத்து அடித்தால் திருடு நிற்கும், அதற்குப் பதிலாகச் சமர்ப்பணம் செய்தால் திருடு நிற்கும் என்று நம்பினால் எண்ணம் சமர்ப்பணமாகும். சமர்ப்பணம் ஆகாத எண்ணத்தின் பின்னால் சமர்ப்பணத்திற்கு ஒவ்வாத எண்ணம் ஒன்றிருக்கும். அது இல்லாவிட்டால் சமர்ப்பணம் பலிக்கும்.

கணவர் : சமர்ப்பணம் எந்தக் கட்டத்தில் தடைபட்டாலும், அங்கு ஓர் எண்ணம், உணர்ச்சி, பழக்கமிருக்கும் - சொரணை sensitivity - எனக் கூறலாமா?

தாயார் : நமக்குச் சமர்ப்பணம் வேண்டாம் என அடி மனம் கூறும்பொழுது, மேல் மனத்தால் சமர்ப்பணம் செய்ய முடியாது. உதாரணமாகப் பெண், மாமியார் வீட்டிலிருந்து வந்து 6 மாதமானபின் தாயாருக்குப் பெண் திரும்பப் போகக்கூடாது என்ற எண்ணமிருந்தால், திரும்பிப் போவதைச் சமர்ப்பணம் செய்தால் சமர்ப்பணம் எதிராகப் பலிக்கும். மேலும் இரண்டு மாதம் திரும்பப் போகமுடியாத சந்தர்ப்பங்கள் எழும். சமர்ப்பணத்திற்குத் தடையேயில்லை. நாம் மட்டுமே தடை.

இதுபோன்ற உரையாடல்களால் சமர்ப்பணம் நகரப்போவது இல்லை. அவ்வப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் மனத்தில் தெளிவுபடுவதால், வீட்டில் negative hostile வேண்டாத சூழல் கரைந்து வருகிறது. இதன் பயனை பாக்டரியிலும், வெளி விவகாரத்திலும் காண்கிறார்கள். தாயார் இந்த விளக்கத்தைப் பெரியவனுக்குக் கூறியபின், தம் சமர்ப்பணம் தடையாவது எதனால் என யோசனை செய்ததில், குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் போதும், அதைக் கடந்து அருளை நாடினால் பிள்ளைகட்கெல்லாம் திருமணம் செய்ய வேண்டுமே, அதற்கு அருளை நாடினால் சரி வருமா? ஒரு வேளை அருளை நாடினால் பிள்ளைகட்குத் திருமணமே ஆகாது போய்விடுமா என்ற பயம் அவருக்குண்டு. அவர் அறியாத விஷயம் ஒன்றுண்டு. அருளை நாடி பிள்ளைகள் தாங்களே திருமணத்தை விரும்பாவிட்டால் அது மிகப்பெரிய விஷயம். பிள்ளைகள் அன்னையின் குழந்தைகளாவர். அருளை நாடி திருமணமானால் அப்பழுக்கில்லாத இலட்சியத் திருமணமாக அவை அமையும். இது தாயார் அறியாதது. அவருக்கு முதலில் சொல்லியதைக் கேட்டுக் கொள்ளவும் முடியாது. இரண்டாவது நிலைமை இருப்பதாக அவரால் கற்பனை செய்யவும் முடியாது. திருமணம் வேண்டுமா, வேண்டாமா என யோசிப்பார். அவ்வெண்ணம் சமர்ப்பணமானால் இந்த மேற்சொன்ன இரண்டும் உயிர் பெறும். சில பிள்ளைகள் திருமணத்தை ஏற்பார்கள். மற்றவர் விலக்குவர். சமர்ப்பணம் செய்யாமல் இவை தெரிய வழியில்லை.

இந்த மாதங்களில் நடந்தவை ஏராளம். கண்ணில் பட்டவை குறைவு. அக்குறைவான நிகழ்ச்சிகளிலும் 1) வாய்ப்பு, 2) ஆபத்து, 3) வம்பு, 4) வீண் வேலை, 5) அர்த்தமற்றவை என ஏராளமானவை நடந்துவிட்டன. அவை சம்பந்தமான கருத்துகள்:

  1. வாய்ப்பை ஏற்காவிட்டால் வாழ்வு சுருங்கும். வாய்ப்பை மறுத்தால் உள்ளதும் போகும்.
  2. ஆபத்து வருமுன் ஆயிரம் வகைகளாக, ஆயிரம் நிலைகளில் காட்டியபடி இருக்கும். அவற்றை அறிந்து விலகவேண்டும். கவனிக்காவிட்டாலும் அலட்சியமாக இருந்தாலும், அதற்குரிய தவறான பலன் தவறாமல்வரும்.
  3. வம்பு நடப்பதைக் கண்டால், நம்மை நாடி வரும். மனம் வம்பை ரசித்தால், தவறாமல் வம்பு நம்மை வந்து சீண்டும். செயலும், நினைவிலும் வம்புக்கு இடம் தரமுடியாது.
  4. வீண் வேலை செய்தால் அதுவே எதிர்காலத்தில் வேலையாகும். வீண் வேலை என்பதும் ஒரு வேலை. ஆரம்பித்தால் அனந்தமாகப் பெருகும்.
  5. அர்த்தமற்றவை நம்மை அர்த்தமற்றவராக்கும்.

தாயாருக்கு மட்டும் நடந்தவை அனைத்தும் தெரியும். கணவருக்கு அவர் சம்பந்தப்பட்டவை தெரியும். பீச்சு கூட்டத்திற்கு 10 சிறுவர்களை அழைத்துப்போய் அழைத்துவருவது போன்றது வாழ்வு. மயிரிழை தவறாமல் சரியாக இல்லாவிட்டால் என்ன நடக்கும் எனக் கூறமுடியாது. செயலளவுக்கு விஷயம் வரும்வரை காத்திருக்க முடியாது. சூட்சும அறிகுறி தெரியும்பொழுதே மனத்தால் சமர்ப்பணம் செய்து காப்பாற்றுவது அவசியம். உண்மையாக ஆழ்ந்த ஒத்துழைப்பைக் கொடுத்தவர் பார்ட்னர். கம்பெனி நல்ல முறையில் நடந்துவருகிறது. எதிர்பார்த்ததைவிட ஏராளமாக வாய்ப்புகள் வந்தபடி இருப்பதாலும், எதிர்பார்த்த அளவுக்குப் பலன் வருகிறது. குடும்பத்தினர் தொந்தரவு தரவில்லை, பாஸிட்டிவ் ஒத்துழைப்பு

இல்லை என்றாலும் நெகட்டிவ் ஒத்துழைப்பைத் தவறாமல் தந்து வருகிறார்கள். குடும்பம் தாயார் மனதில் நடக்கிறது.

Punctuality:

நேரத்தில் செயல்படுதல் என்பது நாம் நம்மைக் காலத்திற்குக் கட்டுப்படுத்திக்கொள்வது. நாம் நம்மைக் காலத்திற்குக் கட்டுப்படுத்தினால் காலம் நமக்குக் கட்டுப்படும். வாழ்க்கை காலத்திற்குட்பட்டது. வாழ்க்கை ஒருவருக்குக் கட்டுப்படுவது அதிர்ஷ்டமாகும். அதிர்ஷ்டம் வரும் அறிகுறிகள் பல. அவற்றுள் ஒன்று,

நாம் நேரத்தில் செயல்படுவது.

கேட்பாரில்லாமல் வாழ்ந்தவர்க்கு punctuality சிம்மசொப்பனம். அவர்கள் நேரத்தில் செயல்பட முனைந்தால் டென்ஷன் வரும். பயித்தியம் பிடித்துவிடும். இந்த வீட்டிற்கும் punctualityக்கும் சம்பந்தமில்லை. அடிக்கடி அதைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் வாழ்வு ஏற்கனவே இருந்ததுபோலவேயிருக்கும். இப்பொழுது தீவிரமாகப் பேசுகிறார்கள். ஆனால் ஆரம்பிக்கவில்லை. அதை ஆரம்பித்துப் பின்பற்றினால் ஒரு திருப்பம் எனப் புரியும். punctuality  என்பது காலத்தை organise செய்வதாகும். காலத்தை organise செய்ய நாம் நம்மை organise செய்யவேண்டும். Organise செய்வது அரிது. அவர்கள் படும் பாடு பெரியது. இந்த நேரம் கணவருடன் பிறந்தவர் வீட்டில் ஒரு விபத்து நிகழ்ந்துவிட்டது. கணவருடைய தங்கையின் மருமகளுடைய தமக்கை வீட்டில் ரௌடிகள் புகுந்து கொள்ளையடித்துவிட்டனர். உயிருக்கு ஆபத்து, மயிரிழையில் தப்பியது. இந்த களேபரம், பீதி, அவர்கள் வீட்டிற்குப் போய் வந்தது, ஆகியவை அடங்க ஒரு வாரம், பத்து நாளாயிற்று. குடும்பத்திற்கும், இந்த அசம்பாவிதத்திற்கும் நேரடியான சம்பந்தமில்லை என்றாலும், சூட்சுமம், ஆன்மீகரீதியான இதன் அர்த்தம் புரியவேண்டும்.

  • ஒரு குடும்பம் - 100 பேர், 500 பேரானாலும் - அத்தனை பேரும் சேர்ந்திருந்தாலும் விலகியிருந்தாலும் அடிப்படையாக உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்களே. ஒருவருக்கு நடந்ததால் மற்றவர் அனைவருக்கும் அர்த்தமுண்டு. ஒரு குளத்தில் ஒரு மூலையில் மட்டும் நீர் மட்டத்தை உயர்த்த முடியாது. அது எல்லா இடங்களிலும் பரவும்.
  • நீர் மட்டம் உயருவது சில இடங்களில் சௌகரியமாகவும், மற்ற இடங்களில் பாதகமாகவுமிருக்கும்.
  • தாயார் குடும்பம் முன்னேறுவதால், அக்குடும்பத்திலுள்ள அனைவரும் (சில நூறு பேர்கள்) அதன் பலனால் பாதிக்கப்படுவார்கள்.
  • அப்பாதிப்பின் குணத்தை நாம் அறியவேண்டும். ஏனெனில் அதுவே நாளைக்கு நமக்கும் வரும். நல்ல மாறுதலுக்கும், கெட்ட மாறுதலுக்கும் சட்டம் ஒன்றே.
  • பாதிப்பின் வகை நாம் நம் குடும்பத்தில் செயல்படுவதைப் பிரதிபலிக்கும்.
  • அவை முடிவாக குணம், தரம், பண்பில் வந்து முடியும்.
  • கொள்ளையடித்த இடத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் நம் குடும்ப மனநிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இது முக்கியம். இதன்மூலம் இக்குடும்பம் மேலே போகலாமா, எந்த அளவுக்குப் போகலாம், எதற்கு மேலே போக முடியாது - போகக் கூடாது - என்பவற்றைத் துல்லியமாக அறிவது அவசியம்.
  • அவரவர் செய்வது அவரவரைப் பாதிக்கின்றது என்பது ஒரு புறம். ஒருவர் செய்வது அனைவரிலும் பிரதிபலிக்கும் என்பது அடுத்தது. இரண்டையும் அறிந்து பிரித்து, பகுத்துணர்ந்து, மேற்கொண்டு செயல்பட வழிகாட்டியாகக்கொள்வது அவசியம்எனத் தாயார் அறிவார்.

 



book | by Dr. Radut