07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டானால் முகத்தில் அழகு உண்டாகும்.
- ஆத்மாவில் அதிர்ஷ்டம் உண்டானால் மனத்தில் அன்னை நினைவு எழும்.
- ஓடும் ஆற்று நீருக்கும் தொடக்கமாக ஓர் ஊற்று இருக்கும்.
- அன்பர்கள் மட்டும் வாழும் ஊரில் ஓடும் ஆறு ஜீவநதியாகும்.
- சினம் தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளும்.
- சினத்திற்கும் தண்டனையில்லை என்பது அன்னைச் சூழல்.
- கோபத்திற்கு கண்ணில்லை.
- கோபமும் பிரியமாகும் அன்னைநினைவு.
- கேடு தானாகவே தேடி வரும்.
- அன்னையை நோக்கிச் சென்றால் கேடு தானாக வெளியேறும்.
தொடரும்....
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் தீர்ந்தபின், ஆர்வத்தை உற்பத்தி செய்வது பெரும்பாடு. மனம் மறந்துவிடும். வற்புறுத்தினால், "வற்புறுத்துவது தவறு'' என்று மனம் பதில் சொல்லும். அல்லது "புரியவில்லை'' என்று சொல்லும். ஆர்வம் தீர்ந்தால் செய்வதொன்றில்லை. மனம் வற்புறுத்த அனுமதிக்காது. |
*****
- Login to post comments