10. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
46. ஒரு துறையில் உள்ள வல்லுநர்களைக் கடந்த சாரமான விஷயம்.
- அன்னை ஜீவியமிருந்தால் அன்பர் பிற துறைகளில் செயல்பட்டால், அத்துறை வல்லுநர்களைக் கடந்த ஞானம் அவருக்கு எழும்.
- அன்பர் வக்கீலிடம் சென்றால், தன் வழக்கைப் பற்றி வக்கீலைவிட சட்ட நுணுக்கம் அறிவார்.
- துறை வல்லுநர் பெற்றது துறைக்குரிய ஞானம்.
- அன்பர் பெற்றது வாழ்வு ஞானம்.
- துறை வாழ்வின் பகுதி.
- வல்லுநர் பெற்றது அனுபவ ஞானம்.
- அன்பருக்குள்ளது ஆத்ம ஞானம்.
- ஆத்ம ஞானம், அனுபவ ஞானத்தைவிடப் பெரியது.
- 6 டாக்டர்கள் ஒரு இளைஞரை சோதனை செய்து T.B. எலும்புருக்கி நோய் என முடிவு செய்தனர்.
- பேஷண்ட் எக்ஸ்ரே எடுத்து, எக்ஸ்ரே எக்ஸ்பர்ட்டிடம் காட்டினார்.
- T.B. உறுதியாயிற்று.
- அன்பருக்கு விஷயம் தெரிய வந்தது.
- T.B.க்குரிய அறிகுறிகளை டாக்டர்கள் கண்டனர் - வயிற்றுப்போக்கு.
- அன்பர் ஞானம் வாழ்வின் முழுமையை அறியும். ம்
- வியாதிஸ்தர் கால்பந்து விளையாடியதைக் கண்டார்.
- T.B. என்பது தெம்பை அழிக்கும் வியாதி.
- அது இருந்தால் கால்பந்து விளையாட முடியாது.
- இந்த வியாதிஸ்தர் நண்பர்கட்கு இரகஸ்ய உறைவிடம். Conscience-keeper.
- எல்லா நண்பர்களும் இவரை உறுதியாக நம்புவதால் எல்லா இரகஸ்யங்களையும் கூறுவார்கள்.
- இரகஸ்யங்களை வெளியிட முடியாத செயல்கள் ஆபாசமானவை.
- அனைவருடைய ஆபாசமும் இவரிடம் பத்திரமாக இருந்தன.
- அவற்றின் சூட்சும மையம் வயிறு.
- அதுவே வயிற்றுப்போக்குக்குக் காரணம்.
- வியாதிஸ்தர் தாம்பரம் சானடோரியம் சென்று சோதித்தார்.
- T.B.யில்லை என பதில் வந்தது.
- 6 டாக்டருக்குப் புலப்படாத காரியம் அன்பருக்குப் புலப்பட்டது.
- அதுவே அன்னை ஜீவியம் தருவது.
- இது உள்ள அன்பருக்கு யோகம் பலிக்கும்.
- யோகத் தகுதியிருப்பதால், யோகம் செய்ய முன்வரும் வழக்கமில்லை.
- இந்த அன்பர் யோகத்தை மேற்கொண்டால், இவருக்கு யோகம் பலிக்கும்.
- துறை வல்லுநர்களைவிட அன்பருக்குப் புரிவது, அன்பர் அன்னை ஜீவியத்தை ஏற்று, ஆத்ம விளக்கம் பெற்றவர் எனக் காட்டுகிறது.
- ஆத்ம விளக்கம் யோகத் தகுதி.
- ஓட்டுப் போட உரிமையுள்ளவர் அனைவரும் M.L.A.யாக நிற்கலாம்.
நிற்பவர் அனைவரும் ஜெயிக்க முடியாது.
ஒரு கட்சி, ஒரு ஜாதி, ஒரு ஊர் ஓட்டு முழுவதும் ஒருவருக்குக் கிடைக்குமானால், அவருக்கு M.L.A. எலக்ஷனில் வெற்றி பெறும் வாய்ப்புண்டு எனக் கூறலாம்.
தொடரும்.....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் பழைய குற்றங்களை மனமாற்றமிருந்தால் மன்னிக்க முன் வருபவன், அக்குற்றங்களை எழுப்பிய தன் மனநிலை மாற வேண்டுமென நினைப்பதில்லை. குற்றத்தை மன்னிப்பவனும், மூலத்தைக் கருதுவதில்லை. |
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் உண்மையில் விஷயம் உயர்ந்தது. ஒரு நிலையிலிருக்கும் பொழுது அங்கு சாதிக்க நினைத்தால், தோற்றத்தைவிட விஷயம் முக்கியம். அஸ்திவாரம் பலப்பட தோற்றத்தைவிட விஷயம் முக்கியம். |
*****
- Login to post comments