09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுக்கமாட்டானா?
இலை அறுப்பவனுக்குக் குலையைக் கொடுக்கும் மனம்.
- கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
கூத்தாடியும், கூலிக்காரனும் கூடி மகிழும் வாழ்வு.
- பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்குக் களவிலே சாவு.
பாம்பாட்டிக்கும், கள்ளனுக்கும் வாழ்வளிக்கும் பாம்பும், களவும்.
- சீலை இல்லையென சித்தி வீட்டுக்குப் போனாளாம், அவள் ஈச்சம் பாயைக் கட்டிக் கொண்டு எதிரே வந்தாளாம்.
சித்தி வீட்டு ஈச்சம் பாயும் எதிரில் வரும் சீலையாகும்.
- பள்ளத்திலே இருந்தா பெண்டாட்டி, மேட்டிலே இருந்தா அக்கா.
பள்ளமும், மேடும் பாக்கியம் தரும் நிலைகள்.
தொடரும்....
******
- Login to post comments