Skip to Content

10.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

எங்கள் வாழ்வில் நாங்கள் அன்னையை வழிபட ஆரம்பித்ததிலிருந்து அன்னையின் அருள் மழையைத் தொடர்ந்து பெற்று வருகிறோம். இப்பவும் எனக்குச் சமீபத்தில் ஏற்பட்ட அனுபவத்தையும், அன்னையின் அருளினால் அது குணமானதைப்பற்றியும் கூற விரும்புகிறேன்.

14.10.03 அன்று நானும், என் தோழியும் எங்கள் குடும்ப நண்பருடைய 60ஆம் கல்யாணத்திற்குச் சித்தூர் சென்றோம். அங்கு மதியம் உணவு முடித்தபின், நான் பாத்ரூம் சென்று திரும்பும் பொழுது உள்ளே தவறி விழுந்துவிட்டேன். எங்கோ அடிபட்டுவிட்டது. ஆனால் எங்கு என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் எழுந்திருக்கவும் முடியவில்லை.கதவில் இடித்து விழுந்ததால், வெளியில் எல்லோருக்கும் பெரிய சத்தம் கேட்டு கதவைத் தட்டினார்கள். கதவு உள்ளே தாழ்போட்டு இருந்ததால் வெளியிலிருந்து யாரும் உதவிக்கு உள்ளே வர முடியவில்லை. நான் "Mother, Mother'' என்று அழைத்தவுடன், நானே எழுந்து கதவை திறப்பதற்கு சக்திகொடுத்தார் அன்னை. திறந்தவுடன் என் தோழி, "என்ன ஆயிற்று?'' என்று பதற்றத்துடன் வினவினாள்.

வழக்கமாக நான் வெளியில் கிளம்பும் முன் அன்னைக்கு நமஸ்காரம் செய்துவிட்டு புஷ்பப்பிரசாதம் எடுத்துச் செல்வேன். என் பர்ஸில் Motherபுஷ்பமும், Mother photoஉம் இருந்தன. உடனே என் தோழி அவற்றை என் கைகளில் கொடுத்தாள். அப்போதுதான் எனக்குப் பின்புறத்தில்,உட்காரும் இடத்தில் அடிபட்டுவிட்டது என்று தெரிய வந்தது. என் தோழியும் அன்னை அன்பராக இருந்தமையால், உடனே புஷ்பத்தை அந்த இடத்தில் வைத்து, "ஓம் நமோ பகவதே, Mother , Mother'' என்று சொல்லிக்கொண்டே இருந்தோம். Mother's Graceஆல் நான் எழுந்து நடந்து, இருவரும் பஸ் ஏறி, சித்தூரிலிருந்து ராணிப்பேட்டை வந்து சேர்ந்தோம்.வீட்டிற்கு வந்து பார்த்தபொழுதுதான் அடிபட்ட இடம் வீங்கி, சுமார் ¾அடி நீளத்திற்கும், 4'' அகலத்திற்கும் கருரத்தம் கட்டியிருந்தது தெரிய வந்தது. உடனே என் தோழி, "Mother, Mother'' என்று சொல்லிக் கொண்டே Iodex தடவி, வெந்நீர் ஒத்தடம் கொடுத்தாள்.

மாலையில் என் கணவரிடம் எல்லா விவரங்களையும் கூறினேன்.அப்போது அவர் ஹாஸ்பிடல் போகச் சொன்னார். ஆனால் என் மனதில் அன்னையிடம் நம்பிக்கை இருப்பதினால், அன்னையின் அருளினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு, தினமும் தியான மையத்திற்குச் சென்று Motherஇடம் prayerசெய்து புஷ்பப்பிரசாதத்தை அந்த இடத்தில் வைத்து "Mother, Mother'' என்று சொல்லி மனதார வேண்டிக் கொண்டு வர நாளடைவில் அந்த அடிப்பட்ட இடம் நார்மலாகி, அடிபட்ட சுவடே தெரியாதபடி நன்கு ஆறிவிட்டது.

எல்லாம் அன்னையின் அருளினால்தான் நடந்தது. அன்னையின் அருளை என்ன என்பது! அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஸ்ரீ அன்னைக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கின்றேன். ஸ்ரீ அன்னைக்கு அநேககோடி நமஸ்காரங்கள்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் உணர்விலிருந்து விலகியதற்கு அடையாளம் ஒன்றுண்டு. நரம்பில் உணர்ச்சி தட்டுப்படாவிட்டால், மனம் விலகியது எனப் பொருள். உடலுக்கும், நரம்புக்கும், மனத்திற்கும் உணர்ச்சியுண்டு. உணர்விலிருந்து மனம் விலகுவதை, மனத்தைவிட்டு நாம் புத்தியை அடைகிறோம் என்று சொல்லலாம்.

மனம் அழிந்தால் புத்தி புறப்படும்.


 


 


 


 


 



book | by Dr. Radut