07.அஜெண்டா
Agenda
The diamond light melts the hostile forces.
வைரஒளி தீயசக்திகளை அழிக்கவல்லது.
- இதுவரை 7 முறை சிருஷ்டி ஏற்பட்டு, முதல் 6 சிருஷ்டி பிரளயத்தால் அழிக்கப்பட்டது.
- இது ஏழாவது சிருஷ்டி.
- இறைவன் திருவுள்ளம் இப்பொழுது பூர்த்தியாகும்.
- முதல் சிருஷ்டியில் உற்பத்தியான 4 கடவுள்கள் இறைவனுக்கு எதிராக மாறினர். அவர்களே தீயசக்திகள் என்பவை.
- வெண்மையான ஒளி சத்புருஷனுடையது.
- தங்கநிறம் சத்தியஜீவிய ஒளி.
- வெண்மை கலந்த நீல ஒளி தெய்வலோகத்திற்குரியது.
- ஒளி என்பது ஞானம். அது சக்தி பெற்று, உயர்ந்து வைரஒளி ஆகிறது.
- சிவந்த நிறம் உடலுக்குரியது.
- ஊதா நிறம் உயிருக்குரியது.
- மஞ்சள் நிறம் மனத்திற்குரியது.
- இறைவனுக்கு எதிரான 4 அசுரர்கள்:
1 | Lord of Death | எமதர்மன். |
2 | Lord of Falsehood | பொய்யின் தெய்வம். |
3 | Lord of Darkness | இருளின் தேவதை. |
4 | Lord of Suffering | வேதனையின் தெய்வம். |
- அன்னையின் குருவான தியோன் என்பவரை அன்னை Lord of Death என்கிறார்.
- இவை 4 எனில் ஒவ்வொரு தேவதைக்கும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான பிரதிநிதிகள் உலகில் உண்டு. அவை நம்மில் பலரிடம் காணப்படும்.
- அன்னை கூறும் நால்வர் தலைவர்கள்.
- ஒளி ஞானம் தரும். அந்த ஞானத்தின் மூலம் சக்திபெற்று இவர்களையோ, இவர்கள் பிரதிநிதிகளையோ அழிக்கலாம்.
- ஒளி சிறப்புப்பெற்றால் அத்துடன் வலிமையும் வரும்.
- வைர ஒளி அங்ஙனம் வலிமை பெற்றது.
- சிலசமயங்களில் எதிரி எத்தனைத் தவறுகள் செய்தாலும், எவ்வளவு வலுவாக நாம் தாக்கினாலும், அவனை முறியடிக்க முடிவதில்லை.
- அப்படிப்பட்டவன் இதுபோன்ற தேவதையின் பிரதிநிதியாக இருப்பான்.
- இந்த சக்தி நம்மிடம் இருப்பதுண்டு.
- அதை நாம் அறிந்து, அன்னைக்குச் சரணடைந்தால், அவர் அதைக் கரைத்துவிடுவார்.
- அப்படிப்பட்டவர் அன்னைமுன் வந்தபொழுது, அவர் உடல் முழுவதும் கரைந்து, ஒளிமயமாகி, உலகம் முழுவதும் பரவியது. முடிவாக ஒரு கறுப்புப் புள்ளி மிச்சமாக இருந்தது. அதைச் சரணம் செய்வதோ, உயிர்ப்பிப்பதோ அவர் முடிவு.
****
ஸ்ரீ அரவிந்த சுடர்
பிரம்மமும், சிருஷ்டியும் ஒன்றே. நம் பார்வையில்தான் மாறுகிறது என்றறியும் நேரம் வாழ்வு பூரணம்பெறுகிறது.
சிருஷ்டியில் பிரம்மத்தைக் கண்டால் வாழ்வு பூரணமாகும்.
******
- Login to post comments
Comments
06.அஜெண்டாPoint 19 starting