05.அன்பர் கடிதம்
அன்பர் கடிதம்
ஓம் மதர் ஸ்ரீ அன்னை!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!
ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே!
கோடிக்கணக்கான அன்னை பக்தர்களில் நானும் ஒருத்தி. அன்னையை நான் அறிந்து 9 வருடங்கள் ஆகின்றன. இருப்பினும் கடந்த ஓராண்டாக நான் அன்னையை முழுவதுமாக உணர ஆரம்பித்தேன். எனக்காக அன்னை செய்த அற்புதங்கள் கணக்கில் அடங்காதன. அதைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் ஒரு தனி புத்தகமே போடலாம். அந்த அளவிற்கு நான் அன்னையை முழுவதுமாக அன்னையால் உணரப்பட்டேன். அதில் ஒன்று: என் மகன் B.E. இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறான். அவன் (Robo) project work IITயில் (2007 செப்டம்பர்) கலந்து கொள்ள ஆசைப்பட்டு applyபண்ணியிருந்தான். Motherஇன் அருளால் all over Indiaவில் உள்ள 211 காலேஜில் இருந்து இவன் முதலாவதாக இடம் பிடித்தான். IITயில் இருந்து அழைப்பு வந்தது, செப்டம்பர் மாதம் இவன் செய்த Wind Mill projectஐ செய்து காண்பிக்கும்படிக் கேட்டனர். ஆனால் காலேஜில் இவனுக்கு பர்மிஷன் கிடைக்கவில்லை. அது மட்டுமன்று, அன்றைய தேதியில் unit examவேறு இருந்தது. என் மகன் என்னிடம் மிகவும் வருத்தத்துடன் புலம்பினான். நான் கூறினேன், "கவலையை விடு. பொறுப்பை மதரிடம் சமர்ப்பித்துவிட்டு, Wind Mill project workஐக் கவனி'' என்றேன். மதரிடம் விடாது முறையிட்டேன். என்ன ஆச்சரியம், மறுநாள் என் மகனை டைரக்டர் அழைத்து O.D. கொடுத்து, "exam தள்ளிபோய் இருக்கிறது. இதுவரை இப்படி நடந்தது இல்லை. நீ மிகவும் lucky''என்றாராம். என் மகன் என்னிடம் மிகவும் நன்றியுடன் தெரிவித்தான். "மதருக்கு நன்றி சொல்'' என்றேன். IIT Competitionஇல் உரிய தினத்தன்று கலந்து, அதில் அவன் முதலாவதாக வெற்றி பெற்றான். IIT Certificate கிடைத்துள்ளது. இது மட்டுமன்று, அன்னை தினம் தினம் எனக்கு அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டுள்ளார்.
****
- Login to post comments