Skip to Content

06.சாவித்ரி

சாவித்ரி

P.53 Too seldom is the shadow of what must come.

எதிர்கால நிகழ்ச்சிகள் எட்டிப்பார்க்கும் நிழல்.

. இரகஸ்ய உணர்வு க்ஷணத்தில் பெறும் ரூபம்.

. புலப்படாதது தரும் அதிர்ச்சியான புத்துணர்வு.

. பதிலிறுக்கப் பலரில்லை.

. பிரபஞ்சத்தை இயக்கும் பிரம்மாண்டமான உறுதி.

. புலனறியும் புது ரூபம்.

. உலகை அறியும் உள்ளுணர்வு.

. நமது எல்லையான கூட்டமான வட்டம்.

. பார்த்து, தொட்டு, நினைத்து யூகிப்பது.

. அரூபியின் ஜோதி அரிதாக மலரும்.

. தீர்க்கதரிசனம் விழித்தெழுந்தது.

. புறம் நமது புலன்.

. அழிந்துபோன காலம் ஆதரவான பின்னணி.

. ஆத்மா மனத்துள் சிறைப்பட்டுள்ளது; நாம் நம் செயலின் அடிமை.

. பார்வையின் திரையை விலக்கி விவேகத்தின் சூரியஜோதியை எட்டமுடியும்.

. விலங்கு மனத்தின் விபரீத வாரிசு.

. மனிதன் இயற்கையின் இரும்புக்கரங்களின் குழவி.

. நகரும் மணித்துளியின் நளின வாழ்வு.

. குறுகிய நியாயம் குலவும் நிகழ்காலம்.

. பேயான கடந்தகாலம் பெயர்ந்துவரும் நினைவு.

. எதிர்காலம் ஏகவேகமாக விலகுகிறது.

. காண்பது கற்பனைக்குரிய உடை, முகமன்று.

. நிலையற்ற சிறுசக்தி நிலையான ஆயுதம்.

. எதிரான சந்தர்ப்பத்தின் பலனைக் காக்கிறான்.

. உழலும் அறியாமை அறிவுக்குத் துணை.

. செய்ததின் பலனைச் செறிவாகச் சேர்ப்பது.

. எண்ணத்தின் பலனை எடைபோட்டுப் பார்க்கிறான்.

. என்ன பலன் வரும், எப்பொழுது வரும் என அவன் அறியான்.

. முடிவாகப் பிழைப்பானாஎனவும் அறியமாட்டான்.

. மறைந்த விலங்கென மறைவானா எனவும் தெரியாது.

. அரசாண்ட இடத்திலேயே அழிவானா?

. வாழ்வின் கருத்து அவன் அறியாதது.

. அழியாத சிகரத்தின் அமரர்கள்;

. காலத்தையும், இடத்தையும் கடந்த வாழ்வு;

. சிந்தனையிலிருந்து விடுபட்ட வாழ்வின் தலைவர்கள்.

*******
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மாயை வரையறுக்கிறது; மனம் துண்டாடுகிறது; அறியாமை அறிவைவிட்டு விலகி ஒருமைப்படுகிறது. அகந்தை சேகரம் செய்கிறது. அகந்தை ஒரு பிறப்புக்குரியது. மற்றவை பொதுவான சக்திகள். பிறவி முடிந்தாலும் தொடரும்.

மாயையும், மனமும், ஞானமும் அகந்தையைக்கடந்த

அதிகாரமுள்ளவை.


 


 



book | by Dr. Radut