06.சாவித்ரி
சாவித்ரி
P.53 Too seldom is the shadow of what must come.
எதிர்கால நிகழ்ச்சிகள் எட்டிப்பார்க்கும் நிழல்.
. இரகஸ்ய உணர்வு க்ஷணத்தில் பெறும் ரூபம்.
. புலப்படாதது தரும் அதிர்ச்சியான புத்துணர்வு.
. பதிலிறுக்கப் பலரில்லை.
. பிரபஞ்சத்தை இயக்கும் பிரம்மாண்டமான உறுதி.
. புலனறியும் புது ரூபம்.
. உலகை அறியும் உள்ளுணர்வு.
. நமது எல்லையான கூட்டமான வட்டம்.
. பார்த்து, தொட்டு, நினைத்து யூகிப்பது.
. அரூபியின் ஜோதி அரிதாக மலரும்.
. தீர்க்கதரிசனம் விழித்தெழுந்தது.
. புறம் நமது புலன்.
. அழிந்துபோன காலம் ஆதரவான பின்னணி.
. ஆத்மா மனத்துள் சிறைப்பட்டுள்ளது; நாம் நம் செயலின் அடிமை.
. பார்வையின் திரையை விலக்கி விவேகத்தின் சூரியஜோதியை எட்டமுடியும்.
. விலங்கு மனத்தின் விபரீத வாரிசு.
. மனிதன் இயற்கையின் இரும்புக்கரங்களின் குழவி.
. நகரும் மணித்துளியின் நளின வாழ்வு.
. குறுகிய நியாயம் குலவும் நிகழ்காலம்.
. பேயான கடந்தகாலம் பெயர்ந்துவரும் நினைவு.
. எதிர்காலம் ஏகவேகமாக விலகுகிறது.
. காண்பது கற்பனைக்குரிய உடை, முகமன்று.
. நிலையற்ற சிறுசக்தி நிலையான ஆயுதம்.
. எதிரான சந்தர்ப்பத்தின் பலனைக் காக்கிறான்.
. உழலும் அறியாமை அறிவுக்குத் துணை.
. செய்ததின் பலனைச் செறிவாகச் சேர்ப்பது.
. எண்ணத்தின் பலனை எடைபோட்டுப் பார்க்கிறான்.
. என்ன பலன் வரும், எப்பொழுது வரும் என அவன் அறியான்.
. முடிவாகப் பிழைப்பானாஎனவும் அறியமாட்டான்.
. மறைந்த விலங்கென மறைவானா எனவும் தெரியாது.
. அரசாண்ட இடத்திலேயே அழிவானா?
. வாழ்வின் கருத்து அவன் அறியாதது.
. அழியாத சிகரத்தின் அமரர்கள்;
. காலத்தையும், இடத்தையும் கடந்த வாழ்வு;
. சிந்தனையிலிருந்து விடுபட்ட வாழ்வின் தலைவர்கள்.
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
மாயை வரையறுக்கிறது; மனம் துண்டாடுகிறது; அறியாமை அறிவைவிட்டு விலகி ஒருமைப்படுகிறது. அகந்தை சேகரம் செய்கிறது. அகந்தை ஒரு பிறப்புக்குரியது. மற்றவை பொதுவான சக்திகள். பிறவி முடிந்தாலும் தொடரும்.
மாயையும், மனமும், ஞானமும் அகந்தையைக்கடந்த
அதிகாரமுள்ளவை.
- Login to post comments