08.லைப் டிவைன் - கருத்து
லைப் டிவைன் - கருத்து
A new consciousness of intuition or overmind begins to form in place of the mental consciousness.
மனத்தில் ஞானம் உதயமாகி, தெய்வஜீவியம் சேரும் நிலை எழுகிறது.
- சத்தியஜீவியம் புவிக்கு வந்தபொழுது முதலில் மனத்தைத் தீண்டுகிறது. ஏனெனில், மனமே அதிக விழிப்புடையது. உடல் இருண்டிருப்பதால் உடலோ, உணர்வோ சத்தியஜீவியத்தை ஏற்க முடிவதில்லை.
- யோகி மேலே சென்று (ascent) சத்தியஜீவியத்தைத் தொட்டபின், அது புவிக்கு வரும் (descent). அப்படி வரும்பொழுது மனத்தைத் தீண்டி, மனத்தைவிட உயர்ந்த ஜீவியத்தை - யோகி, தெய்வத்திற்குரியவற்றை - ஏற்படுத்தும்.
- Overmind என்பது தெய்வங்கள் - விஷ்ணு, சிவன், இந்திரன், காளி, சரஸ்வதி - வாழும் இடம். Intuition ஞானம் என்பது யோகிக்குரிய நிலை.
- உடலால் உழைப்பவன் படித்தால், மனம் தெளிவடைகிறது; உடலில் உள்ள அணுக்களில் மனம் உதயமாகும். அதுபோல் சத்திய ஜீவியத்தை நோக்கி மனம் உயர்ந்தால், மனத்தில் சத்தியஜீவியம் உதயமாகும். அதன்முன் தெய்வஜீவியமும், ஞானமும் உதயமாகும்.
- மனித நிலை,
- ஒரு பிரச்சினை வந்தவுடன் மனம் யோசனை செய்வது மனித நிலை.
- ஆசையோ, கோபமோ எழுவது விலங்கு நிலை.
- ஆசை, கோபம் போன்ற உணர்வுகள் எழாமல், யோசனையும் பிறக்காவிட்டால், அது ஜடத்திற்குரிய நிலை.
- மௌனம் தானே குடிகொள்வது முனிவர் நிலை.
- பிரச்சினை மனத்தில் காட்சியாக எழுவது ரிஷியின் நிலை.
- உடனே யோசனையுமின்றி, பிரச்சினை முழுவதும் புரிவது யோகி நிலை.
- புரியும் அவசியமுமில்லாமல் தெரிவது தெய்வ நிலை.
- புரியாமல், தெரியாமல் பிரச்சினையுடன் இரண்டறக் கலந்து திளைப்பது சத்தியஜீவிய நிலை.
- சத்தியஜீவியத்தைக் கடந்த நிலைகள் ஆனந்தம், ஜீவியம், சத், பிரம்மமாகும்.
- எந்த உயர்ந்த நிலையையும் நிஷ்டையில் ஒரு க்ஷணம் எட்ட மனிதனால் முடியும்.
- பெற்றதை நிரந்தரமாக அனுபவிக்க அனுபவம் (experience) சித்தியாக மாறவேண்டும்.
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
உள்ளே போவதைவிட உள்ளே அன்னையைத் தேடுவது நன்று. ஆன்மா அன்னையை உள்ளே தேடுவது ஆனந்தம் (bliss). அறிவாலும், செயலாலும் அன்னையை புறத்தில் தேடுவது சிருஷ்டியின் ஆனந்தமாகும் (delight).
சிருஷ்டியின் ஆனந்தம்.
*****
- Login to post comments
Comments
08. லைப் டிவைன் - கருத்து
08. லைப் டிவைன் - கருத்து
Point 5 - Sub Point 6 - . ‘‘உடனே - உடனே
08. லைப் டிவைன் - கருத்து
08. லைப் டிவைன் - கருத்து