06.பிரெஞ்சு தத்துவ மேதை
பிரெஞ்சு தத்துவ மேதை
வால்டேர் என்பவர் புரட்சிகர்த்தா. அவருடைய எழுத்து பிரான்சில் புரட்சியை ஏற்படுத்தியது. "நீங்கள் இறைவனிடம் என்ன கேட்பீர்கள்?'' என்று நண்பர்கள் அவரைக் கேட்டபொழுது,
"என் விரோதிகளை நான் சமாளித்துக்கொள்கிறேன்.
என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்''
என அவர் பதிலிறுத்தார்.
- நண்பர்கள் துரோகம் செய்வார்கள் என இதற்குப் பொருளில்லை.
- நண்பர்களை நாம் ஏற்கிறோம், ஆதரிக்கிறோம். எதற்காக நாம் அவர்களை ஆதரிக்கின்றோமோ, அது நமக்குத் துன்பமாய் முடியும்.
- மகன் செய்வதை விட்டுக்கொடுக்க முடியாது என்றால் மகன், குடும்பம் அழியும் காரியங்களைச் செய்வான். மகனை விடமுடியவில்லை என்றால் குடும்பம் அழியும். அதுபோன்றவர்கள் நண்பர்கள்.
- பூரண யோகத்தை ஒருவர் மேற்கொண்டால் அவர் செய்வனவற்றிற்கெல்லாம் எதிராக ஒருவர் evil persona அவரை வந்தடைவார் என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.
- அப்படி ஒரு நண்பரில்லாவிட்டால் அது நம்முள்ளேயே இருக்கும். அதிலிருந்து தப்ப முடியாது. திருவுருமாற்றத்தை ஏற்காவிட்டால் நாமே நம்மை அழித்துவிடுவோம்.
*******
- Login to post comments
Comments
06.பிரெஞ்சு தத்துவ மேதை