07.ஜீவியாஞ்சலி
ஜீவியாஞ்சலி
அன்னையே..... அருளே!
அரவிந்தர் அருளிய அருமை அன்னையே!
ஆழ்நிலை தியானத்தில் அறிவைச் செலுத்தி
இம்மையின் இன்னல்களை இல்லாமல் போக்க
ஈந்தனையே அன்புடன் ஓர்
உன்னத மார்க்கத்தை!
ஊமையாய் நின்று அன்னையை மௌனமாய் தியானித்தால்
எந்த நிலையில் நாம் இருந்தாலும்
ஏற்றமிகு நல்வாழ்வை எட்டலாம் என்று
ஐயமற உறுதியாக கூறினையே!
ஒளிவு மறைவற்ற உன்னத உள்ளத்தோடு
ஓங்கார சக்தியாம் அன்னையை வேண்டினால்
ஔஷதமின்றி நீண்ட பெருநல்வாழ்வை
அஃதே பெறுவோம் நாம் அனைவருமே!
- கி.முரளி
- Login to post comments