Skip to Content

09. தொலைந்த பொருள்

தொலைந்த பொருள்

கர்மயோகி

  • நாம் வளர்க்கும் நாய் நம்மீது பாசமாக இருப்பதைப்போல நாம் பயன்படுத்தும் பொருள்கள் நம் மீது பாசமாக இருக்கின்றன.
    • பாசம் உள்ளவை, நம்மை விட்டுப் போகா.
    • பயன்படுத்துவது பாசத்தைக் காட்டும்.
    • உபயோகத்தைப் பொருள்கள் கவனமாகக் கருதுகின்றன.
    • பயன்படுத்தாவிட்டால் கவனம் குறைந்துவிடும்.
    • கவனம் குறைந்தால் ஒரு நேரம் மறந்துவிடும்.
    • மறந்த நேரம் பொருள் தொலையும்.
    • தொலைவது மறதியைக் காட்டும்.
    • தொலைவதன் தத்துவத்தில் இது ஓர் அம்சம்.
    • தொலைவதற்குக் காரணங்கள் பல.
    • முடிவில்லாமல் காரணங்களைக் கூறலாம்.
    • எந்தப் பொருளும் அனந்தம்.
    • அது எல்லாப் பொருள்களுடனும் தொடர்பு கொண்டது.
    • அதற்கு உலகிலுள்ள எல்லா அம்சங்களும் உண்டு.
    • அதைத் திருப்பிப்பெற எந்த அம்சத்திற்குரிய முறையும் பயன்படும்.
    • மனம் அதிக மகிழ்ச்சியால் ஒரு விஷயத்தில் திளைத்தால், மற்றது மறந்துபோகும்.
      அதிக சோகத்தாலும் அது நிகழும்.
      மன வளர்ச்சியால் நாம் நம் நிலையை விட்டகன்றால் பழைய நிலைக்குள்ளவை மறந்துபோகும்.
      நிலைமை மாறி நாம் செய்யும் செயல்கள் ஒரு பொருளுக்கு எதிரானால், அப்பொருள் நம்மை விட்டு விலகும்.
      அது கோபத்தால் விலகுவது.
      சுத்தத்தை அதிகப்படுத்தினால், அசுத்தமானபொருள் தொலையும்.
      அசுத்தம் அதிகமானால், சுத்தமானபொருள் தொலையும்.
      உயர்வாகக் கருதிய பொருளை மட்டமாகக் கருதினால் அது விலகும்.
      ஒரு நேரம் கோபத்தில் ஒரு பொருளைத் தூர எறிந்தால், நேரம் வரும்பொழுது அது திடீரென மறையும்.
      ஒரு பொருளுக்கு நேர் எதிரான பொருளை அதிகமாகப் பாராட்டினால் அப்பொருள் நம்மை விட்டுப் போக முடிவு செய்யும்.
      வயதாவதாலோ, திறமை குறைவதாலோ, பொதுவாகக் கவனம் குறைந்தால் அடிக்கடி பொருள் தொலையும்.
      உயர்ந்தவன் தாழ்ந்ததின் மீது ஆசைப்பட்டால், உயர்ந்தது விலகும்.
      செய்ய வேண்டிய கடமையை இடம் மாற்றி தகுதியற்றவர்க்குச் செய்தால், தகுதியுள்ளவர் விலகுவார், அல்லது தகுதியற்றவர் விலகுவார், அல்லது தகுதி நிரந்தரமாக விலகும். தொலைவதின் காரணங்கள் பல.
      அதே போல் மீண்டும் பெறும்வழிகளும் பல.
      காரணமறிந்து, காரணத்தை மாற்றி, தொலைந்த பொருளைப் பெறுவது எளிய வழி.
      எதையும் நேரெதிராகச் செய்பவர் செய்யும் எல்லா வேலைகட்கும் எதிரான பலனிருக்கும்.
      இடம், பொருள், காலம், காரணம், சம்பந்தப்பட்டவர், குறிப்பிட்ட எண்ணங்கள், பொதுவான நிலை, ஆகிய எதிலும் மீண்டும் பெறும் வழிகள் பிறக்க முடியும்.
      வழி எதுவானாலும் பொருள் கிடைக்கும்.
      செய்வது முழுமையாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

      எந்தப் பொருளுக்கும் நம் மனத்தில் ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் இடம் உண்டு.
      அங்கிருந்து அன்னையை அழைத்தால் பொருள் கிடைக்கும்.
      பொதுவாக நேரமே சரியில்லையெனில், நேரம் மாறும் வரை காத்து இருப்பது அவசியம்.
      ஆழ்ந்து அன்னையை அழைத்தால் நேரம் மாறும்.
      சரியில்லாத நேரம் ஆழ்ந்து அழைப்பது சிரமம்.
      சிரமம் மாறி அழைத்தால் நேரம் மாறும்.
      பொருள் மீது அன்னை உருவம் கற்பனையில் தெளிவாகத் தெரிந்தால், பொருள் எங்கிருந்தாலும் புறப்பட்டு நம்மை நாடிவரும்.
      அன்னையை நினைத்தால் பொருளை மறந்ததைப் பொருள் மறந்து மன்னிக்கும், திரும்பிவரும்.
      அடுத்தவர் பொருள் தொலைய விரும்பினால், நம் பொருள் தொலையும்.
      பொறாமையால் கெடுதல் செய்வதுபோல் பிரியத்தாலும் கெடுதல் செய்யலாம்.
      திருட்டுப் பொருள் கையில் வந்தால், உள்ள பொருள் தொலையும்.
      திருட ஆசைப்பட்டால், திருடனுக்குக் கூடிவரும்.
      நல்லவன் திருட ஆசைப்பட்டால், உள்ளது போகும்.
      பாக்கியான காணிக்கை திருட்டுப் பொருள்.
      அன்னையின் பொருளை நாம் அனுபவிக்க நினைப்பது திருட்டு.
      சொன்ன காணிக்கையை மறுப்பது பெருந்திருட்டு.
      பொருள் தொலைந்ததற்கு நாம் செய்த தவறு நினைவு வாராது.
      வந்தால் பொருட்படுத்தமாட்டோம்.
      அந்த நிலையில் பொருள் கிடைக்கும்வரை அழைப்பைத் தொடர்ந்தால், நாளதிகமாகும், ஆனால் கிடைக்கும்.
      தொலைந்த பெரிய பொருள் கிடைத்தால் சிறிய பொருளும் கிடைக்கும்.
      பெரியது கிடைத்தால், சிறியது தொலையும்.
      சிறியது தொலைந்தால், தொடர்ந்து பெரியது தொலையும்.
      அளவோடு திறமையுள்ளவர்க்கு ஒன்று கிடைத்தால், அடுத்தது போகும்.
      அளவுகடந்த திறமையுள்ளவர்க்கு ஒன்று வந்தால், அடுத்தது வரும்.
      பிரார்த்தனையால் தொலைந்த எதையும் பெறலாம் என அகந்தையான நினைவு எழுந்தால் பொருள் தொலையும்.
      அந்த நேரம் பிரார்த்தனை எளிதில் பக்காது.
      கர்வமழிந்தால் பொருள் கிடைக்கும்.
      அடிக்கடி பொருள்களைத் தொலைப்பவர் மீது பாசம் ஏற்பட்டால் நம் பொருள் தொலையும்.
      பொருள் தொலைவதற்குக் காரணம் unconsciousness மறதி.
      அன்னை மறந்தால், பல பொருள்கள் ஒரே சமயத்தில் தொலையும்.
      தொலைந்த பொருள் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையையே கைவிடும் அளவுக்கு அன்னையை மட்டும் நம்பி, பிரார்த்தனையை மறந்தால், பொருள் திரும்பிவரும்.
      ஆழ்ந்த தியானத்தில் பொருள் உள்ள இடம் கண்ணுக்குத் தெரியும்.
      கண்ணுக்குத் தெரியாவிட்டால், கை தானே அங்குப் போகும்.
      வேலை செய்யப் பிரியப்படாதவரை வேலை செய்யச் சொல்க் கட்டாயப்படுத்தினால் அவர் செய்த வேலைகள் கெட்டுப்போகும், அப்பொருள்கள் தொலையும்.
      நன்றியுள்ள நல்லவருக்கு ஒரு நல்லது செய்தால், நன்றி மறந்ததால் தொலைந்த பொருள் நம்மை நாடிவரும்.
      ஒருவருக்குச் செய்த நல்லது அனைவருக்கும் செய்த நல்லதாகும்.
      மனம் ஒரு விஷயத்தில் மாற வேண்டி ஒரு பொருள் தொலைந்தால், அது மாறும்வரை பொருள் கிடைக்காது.
      ஒழுங்கில்லாத இடத்தில் தொலைந்த பொருள் ஒழுங்கு ஏற்படும்வரை கிடைக்காது.
      தொலைந்த பொருளை அன்பாக அழைத்தால் குரல் கேட்டுத் திரும்பிவரும்.
      தொலைந்த பொருளைச் சேர்ந்த பொருள்களை அடுக்கி வைத்து, இல்லாத பொருளுக்கு இடம் ஏற்படுத்தினால், அவ்விடத்திற்கு அப்பொருள் தானேவரும்.
      உரிய இடம் குரல் கொடுத்து அழைக்கும்.
      கிடைக்கவில்லை என்பது இல்லை.
      போதுமான முயற்சி அக்கரையில்லை என்பதுண்டு.
      தொலைக்கும் பழக்கம் தொலைவது நல்லது.
      எல்லாம் சரியாக இருந்து ஒரு முக்கியக் குறையிருந்தால் தொலைந்த பொருள் தொலைந்த இடத்திற்கோ, அல்லது அதற்குப் புதிய நிலையில் உரிய இடத்திற்கோ நம் பிரார்த்தனையால் போய்ச் சேரும்.
      அது கிடைத்தது நமக்குத் தெரியாது.
      அதற்குரிய உபயோகம் எழும்நேரம் அங்கே அப்பொருள் காத்து இருக்கும்.
      பிரார்த்தனை பிரச்சினையைத் தீர்த்தாலும், நம் குறை அது தீர்ந்ததை அறிவதைத் தடுக்கும்.
      அந்தநேரம் பொருள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், கிடைத்தது போன்ற உணர்வு எழுந்து மன நிறைவு பெறும்.
      T.V.போட்டபொழுது தொலைந்த பொருள் கிடைக்கும் நேரம் ஒருவர் T.V. போடுவதைக் காணலாம்.
      தொலைந்த செயலுடன் தொடர்புள்ள செயலுக்கு அச்சக்தியுண்டு.
      "இப்பொருள் தொலையக்கூடாது. அவசியம் கிடைக்க வேண்டும்'' என்று ஒருவர் அழுத்தம்திருத்தமாக, ஆணித்தரமாக நினைத்தால், அவர் நினைக்கும் நேரம் அது கிடைக்கும்.
      நினைத்ததைச் சொன்னால் பலிக்கும்.
      நினைத்ததைச் சொல்ல அனுமதியற்றவர் சொன்னால் சொன்னதால் பலிக்காது.
      அப்பொருளின் பெயரைச் சீட்டில் எழுதி அன்னை படம் முன்னால் வைத்தால், அது பொருள் கிடைக்க வழி செய்யும்.
      பொருளோடு எந்தத் தொடர்பு கொண்டாலும் பொருள் திரும்ப வரும். அத்தொடர்பு அன்னை மூலமிருந்தால் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
      உள்ளம் உருகினால் பொருள் திரும்ப வரும்.

*****



book | by Dr. Radut