10.சாவித்ரி
சாவித்ரி
P.58 Their station of inviolable might.
எதிர்க்கமுடியாத வலிமை அவர்கள் நிலைமை.
. உலகின் பரந்த கடமையைத் தாங்கிப்பிடிக்கும் ஸ்தாணு.
. அஞ்ஞானத்தைப் பிரகாசமாக்கும் ஞானம்.
. அவர் ஏக்கம் உதாசீனத்தால் பெறும் உதவி.
. அஸ்திவாரத்தை மேலே வர அழைக்கும் சிகரம்.
. சிறியதைப் பெரியதாக்க வரும் பரந்த அழைப்பு.
. விலகி நிற்பார் தரும் வீரச்செயல்.
. அமைதியை விழையும் வேகத்தின் எழுச்சி.
. சிறிய மனத்தின் குறுகிய ஆராய்ச்சி பரம்பொருளின் சக்தியைச் சந்திக்கும்.
. மரணமும், கண்ணீரும் செய்யும் கடுமையான சேவை.
. நகரத்தை ஏற்படுத்திய மேதையை ஏற்கும் மனநிலை.
. காலடி எடுத்துவைக்கும் காலனை ஏற்கும் பாங்கு.
. உலகின் நெஞ்சில் கொட்டும் தேளைப் புறக்கணிக்கும் மனம்.
. உடலையும், உயிரையும் பிளக்கும் வேதனையைப் பொருட்படுத்தாத பொருள்.
. உணர்வின் உயர்வுதாழ்வைக்கடந்த அற்புதத்தின் அன்ன நடை.
. அழியும் நன்மையில் பங்கற்ற அவர்கள்.
. ஊமையான தூய்மை தீமையில் பங்கேற்பதில்லை.
. காப்பாற்றும் வலிமையை இழக்க மறுக்கும் மக்கள்.
. இறைவனின் முரண்பாடுகளின் சத்தியத்தை உணர்ந்தவர்.
. அனைத்தையும் காணும் அற்புதப்பார்வை.
. நீண்ட, நெடிய யாத்திரையின் மெதுவான வேகம்.
. பயங்கரத்தில் எழுந்த எதிர்பாராத எழுச்சி.
. அழியாத அமரத்தின் பார்வை ஊனக்கண் பார்வையில்லை.
. மறைந்த அம்சங்களையும், திரைமறைவில் உள்ள சக்திகளையும் காணும் பார்வையது.
. இயற்கையின் போக்கையும், சட்டத்தையும் அறிவது.
. நீர்க்குமிழி வாழ்வால் பாதிக்கப்படாத பாதை.
. பயமும், பரிதாபமும் அலைக்கழிக்க முடியாத வாழ்வு.
. சிருஷ்டியின் சிக்கலை உடைக்க முன்வாராதவர்.
. உலகத்து வேதனையை அழிக்கமுயலாத அறிவு.
. காலத்துள் காலத்தைக்கடந்ததை எதிர்நோக்கும் பொறுமை.
. ஆத்மீக இரகஸ்யம் ஆபத்திற்கு உதவும்.
. பரிணாமத்தின் பாதை மெதுவாக எழும்.
. பிடிவாதமாக இயற்கை இடும் பாதை.
. தெய்வகடாட்சம் அரியாசனம் வீற்றுள்ளது.
****
ஸ்ரீ அரவிந்த சுடர் இரசித்து அனுபவிப்பது சத்தியவாழ்வுக்கும், சிருஷ்டிக்கும் அடிப்படை. விரதம் இரசனையை உயர்த்தும். எதையும் அதிகப்படுத்துவது சரியன்று. அதிகமாக அனுபவிப்பது அழிச்சாட்டியம். விரதம் அளவுகடந்து உயர்ந்தால், உணர்வு மறத்துப்போகும். தெய்வீக வாழ்வுக்குரியது ஆனந்த அனுபவம். |
- Login to post comments