Skip to Content

10.சாவித்ரி

சாவித்ரி

P.58 Their station of inviolable might.

எதிர்க்கமுடியாத வலிமை அவர்கள் நிலைமை.

. உலகின் பரந்த கடமையைத் தாங்கிப்பிடிக்கும் ஸ்தாணு.

. அஞ்ஞானத்தைப் பிரகாசமாக்கும் ஞானம்.

. அவர் ஏக்கம் உதாசீனத்தால் பெறும் உதவி.

. அஸ்திவாரத்தை மேலே வர அழைக்கும் சிகரம்.

. சிறியதைப் பெரியதாக்க வரும் பரந்த அழைப்பு.

. விலகி நிற்பார் தரும் வீரச்செயல்.

. அமைதியை விழையும் வேகத்தின் எழுச்சி.

. சிறிய மனத்தின் குறுகிய ஆராய்ச்சி பரம்பொருளின் சக்தியைச் சந்திக்கும்.

. மரணமும், கண்ணீரும் செய்யும் கடுமையான சேவை.

. நகரத்தை ஏற்படுத்திய மேதையை ஏற்கும் மனநிலை.

. காலடி எடுத்துவைக்கும் காலனை ஏற்கும் பாங்கு.

. உலகின் நெஞ்சில் கொட்டும் தேளைப் புறக்கணிக்கும் மனம்.

. உடலையும், உயிரையும் பிளக்கும் வேதனையைப் பொருட்படுத்தாத பொருள்.

. உணர்வின் உயர்வுதாழ்வைக்கடந்த அற்புதத்தின் அன்ன நடை.

. அழியும் நன்மையில் பங்கற்ற அவர்கள்.

. ஊமையான தூய்மை தீமையில் பங்கேற்பதில்லை.

காப்பாற்றும் வலிமையை இழக்க மறுக்கும் மக்கள்.

. இறைவனின் முரண்பாடுகளின் சத்தியத்தை உணர்ந்தவர்.

. அனைத்தையும் காணும் அற்புதப்பார்வை.

. நீண்ட, நெடிய யாத்திரையின் மெதுவான வேகம்.

. பயங்கரத்தில் எழுந்த எதிர்பாராத எழுச்சி.

. அழியாத அமரத்தின் பார்வை ஊனக்கண் பார்வையில்லை.

. மறைந்த அம்சங்களையும், திரைமறைவில் உள்ள சக்திகளையும் காணும் பார்வையது.

. இயற்கையின் போக்கையும், சட்டத்தையும் அறிவது.

. நீர்க்குமிழி வாழ்வால் பாதிக்கப்படாத பாதை.

. பயமும், பரிதாபமும் அலைக்கழிக்க முடியாத வாழ்வு.

. சிருஷ்டியின் சிக்கலை உடைக்க முன்வாராதவர்.

. உலகத்து வேதனையை அழிக்கமுயலாத அறிவு.

. காலத்துள் காலத்தைக்கடந்ததை எதிர்நோக்கும் பொறுமை.

. ஆத்மீக இரகஸ்யம் ஆபத்திற்கு உதவும்.

. பரிணாமத்தின் பாதை மெதுவாக எழும்.

. பிடிவாதமாக இயற்கை இடும் பாதை.

. தெய்வகடாட்சம் அரியாசனம் வீற்றுள்ளது.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

இரசித்து அனுபவிப்பது சத்தியவாழ்வுக்கும், சிருஷ்டிக்கும் அடிப்படை. விரதம் இரசனையை உயர்த்தும். எதையும் அதிகப்படுத்துவது சரியன்று. அதிகமாக அனுபவிப்பது அழிச்சாட்டியம். விரதம் அளவுகடந்து உயர்ந்தால், உணர்வு மறத்துப்போகும்.

தெய்வீக வாழ்வுக்குரியது ஆனந்த அனுபவம்.


 



book | by Dr. Radut