Skip to Content

03.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

                         (சென்ற இதழின் தொடர்ச்சி.....)

தாயார் - அவன் (வேலு) நல்லவன். அவன் மூலமாகக் கெட்டசெய்தி வாராது:

. பொதுவாகக் கருவியும், காரியமும் ஒன்றாக இருக்கும். கோர்ட் செய்தி வக்கீல் மூலமாகவும், அட்மிஷன் பிரின்ஸ்பால் மூலமாகவும், மார்க்கட் செய்தி வியாபாரி மூலமாகவும் வரும். மாறி வருவதும் உண்டு.நல்ல செய்தி நல்லவர் மூலமாகவும், கெட்ட செய்தி கெட்டவர்மூலமாகவும் வருவது வழக்கம்.

. கெட்ட செய்தி நல்லவன்மூலம் வந்தால் நம்மைப் பாதிக்காது.

. நல்ல செய்தி கெட்டவன் மூலம் வந்தால் பலன் தாராது.

. நல்லசெய்தி மிகப்பெரிய நல்லதானால் கெட்டவனுடைய கெட்ட எண்ணத்தை மீறி அவன் மூலமாக வரும்.

. கெட்டசெய்தி நல்லவன் மூலமாக வந்தால் அன்னை அவனிடம் உள்ள நல்லதுமூலம் செயல்படுகிறார் எனப் பொருள்.

. கெட்ட செய்தியை நல்லவர் கொண்டு வந்தால் அவர்கள் உள்ளூற கெட்டவராவர்.

. செய்தி நல்லதா, கெட்டதா, கொண்டு வருபவர் நல்லவரா,கெட்டவரா என்பவற்றை எல்லாம்மீறி, எந்தச் செய்தி எவர்மூலம் வந்தாலும், அதை நல்லதாக மாற்றும் திறன் அன்பர்க்குண்டு.

. பெரியகுற்றம் செய்தவனுக்கு வாரண்ட் வந்தது. வாரண்ட்டை இரத்து செய்ய, போட்டவரையே அணுகினான். அவன் பழக்கம் அவருக்குப் பிடித்தது. அவர்கள் நண்பர்களானார்கள்.

. வருவதை மனம் ஏற்றால் நல்லதா, கெட்டதா எனப் புரியும். வருவதை சைத்தியப்புருஷன் பெற்றால், கெட்டதும் நல்லதாகும்.

. வேலு நல்லவன். அவன்மூலமாக வரும் செய்தி நல்லதாக இருக்கும்,அப்படியிருந்தது.

. அடியாள் தலைவனுடைய தம்பி வக்கீல், கெட்டவன். அவன் மூலமாக கெட்டசெய்தி வந்தது. சூழல் கனத்ததானதால் அவனுடைய கெட்ட எண்ணத்தை மீறி நல்லதாக முடிந்தது.

. பார்ட்னர் நல்லவர், power projectஅவர் மூலம் வருகிறது.

. பெண்ணுடைய தோழி நல்லவள். அவள் நல்லபடியாக முடிந்த செய்தியைக் கொண்டுவருகிறாள்.

. பெரியவன் மட்டமானவன். சிறியவனுடன் போட்ட பந்தயத்தில் தோற்றதை ஏற்க மனமில்லாதவன். அவனுக்கும் சிறியவன் மூலம் டிகிரி திரும்பவருகிறது.

. Pride &Prejudice கதையில் ஜேன்மூலம் எலிசபெத் பெறும், கெட்ட செய்தி ஜேன் நல்லவள் என்பதால் முடிவில் நல்லபடியாயிற்று.

தாயார் - அவசியம் செய்யவேண்டும், மனம் இப்பெரிய சாதனையை விடப் பெரியது. மனம் அன்னையை ஏற்றால், சரணாகதியை ஏற்றால், அல்லது அன்னை கோட்பாடுகளை ஏற்றால், அவை மேற் சொன்னவற்றை விடப் பெரியது. மனம் உலகத்தைத் தன்னுட்கொண்டது. அதை நாம் வெல்ல முடியும், அவசியம்:

. தமிழ்நாட்டில் 5 பெரிய ஆஸ்பத்திரிகள் கட்டி, அதில் ஒரு பகுதி இலவசச் சிகிச்சை செய்து Magsaysay மாக்ஸேஸே விருது பெற்றது பெருஞ்சாதனை. அதற்கு ஆசிய நோபல் பரிசு எனப் பெயர். அதைச் செய்தவர் அன்னை பக்தர். அவர் அளவுகடந்த தம்முடைய திறமையால் சாதித்தாலும், அன்னை அருள் அவர்மூலம் செயல்பட்டது.

. மனம் பெரியது. மனம் உலகை சிருஷ்டித்தது என்பது இந்திய மரபு. சத்தியஜீவியம் உலகை சிருஷ்டிக்க மனம் கருவியாகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். நாம் மனத்துள் இருப்பதால் மனத்திற்கு நாம் அடிமை. மனம் நமக்குக் கட்டுப்படாது. நரிக்குறவனுக்குத் தன் வாழ்வு தாழ்ந்தது எனப் புரியாது. அவன் மகன் படித்து நாகரிகம் பெற்றால் - அவனுடைய வாழ்வைவிட்டு வெளியேறினால் - தகப்பனார் வாழ்வு நிலை தெரியும். அது போல் மனத்தை நாம் அறியமுடியாது. மனத்தை நாம் அறிய நாம் மனத்தைவிட்டு வெளியேறவேண்டும். சத்தியஜீவியம் போய்ச் சேர வேண்டும். மனம் அன்னையை ஏற்றால், நாம் மனத்தை விட்டு வெளியேறலாம்.

. நாம் வாழ்க்கையில் வாழ்கிறோம். அதாவது வாழ்வினுள் இருக்கிறோம். அதனால் வாழ்வுக்குக் கட்டுப்படுகிறோம். கவி - வால்மீகி, காளிதாசன், வியாசர், ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் - வாழ்வைக்கடந்தவர்கள். அதனால் வாழ்வு தன் இரகஸ்யங்களை அவர்களுக்குக் கொடுக்கிறது. மனம் வாழ்வைவிட உயர்ந்தது. ரிஷி மனத்தைக் கடந்து, ஆத்மாவை அடைவதால் அவருக்கு மனத்தின் திறமைகள் அனைத்தும் தெரிகின்றன.

. அன்னையை ஏற்பது என்றால் மனத்தைக் கடப்பதாகும்.

. மனத்தைக் கடந்தால், மனத்தை முழுமையாக அறியலாம்.

. மனத்தை முழுமையாக அறிந்தால், மனம் நமக்குக் கட்டுப்படும்.

. மனம் நமக்குக் கட்டுப்பட்டால், மனத்திற்குட்பட்ட வாழ்வு கட்டுப்படும்.

. மனம் கட்டுப்பட்டால் உலகமே நமக்குக் கட்டுப்படும்.

. அவை ஆன்மீகஉலகின் சாதனை. .

ஜடஉலகில் - நிஜ உலகில் - 5 ஆஸ்பத்திரிகள் கட்டுவதென்ற சாதனையைப் பொருத்தவரை மனம் கட்டுப்படுவதைவிடப் பெரியது.

. மனம் கட்டுப்படுவது உலகமே கட்டுப்படுவதானாலும், அத்திறன் ஜடஉலகுக்கு வந்தால்தான் பலன் தரும்.

. அறிவது வேறு, பெறுவது வேறு.

. அறிவது, பெறுவதற்குப் பயன்பட நாம் அறிந்ததை உடலில் வெளிப்படுத்தவேண்டும்.

. கோபப்படக்கூடாது என அறிவோமானால், கோபம் வரக்கூடாது. கோபம் வாராவிட்டால் உணர்வு அறிவை வெளிப்படுத்துகிறது எனப் பொருள். மனம் கோபம் கூடாது என அறிந்து, உணர்வில் கோபம் எழாத பொழுதும், கை தானே எழுந்து அடிக்க முயலும். அப்படி முயல்வது உடல் அறிவை ஏற்கவில்லை எனப் பொருள். உடலும் அறிவை ஏற்றால், அது 5 ஆஸ்பத்திரிகள் கட்டுவதை விடப் பெரியது. உலகம் உண்மையிலேயே அந்த அறிவுக்குக் கட்டுப்படும். அது யோகச்சாதனை.

. அன்னை பாரிசிலிருக்கும் பொழுது ஒருவர் கீதையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். கீதை, "தெய்வம் உள்ளிருக்கிறது"எனக் கூறிற்று."சூறாவளிபோல் நான் உள்ளே சென்றேன். ஓராண்டில் (inner divine) உள்ளே தெய்வத்தைக் கண்டேன்"என்கிறார் அன்னை.

. அன்னை நெஞ்சிலிருக்கிறார்என நாம் கேட்டால்,

. உடனே அதை நமக்கு வேண்டியவர்க்குச் சொல்கிறோம்.

. நமக்கு வேண்டியவர் அனைவருக்கும் சொல்லும்வரை நாம் ஓய்வதில்லை.

. Aspiration ஆர்வம் செய்வதிலிருந்தால் தெய்வத்தைக் காணலாம்.

. நமக்கு ஆர்வம் சொல்வதிலிருக்கிறது, செய்வதிலில்லை.

. அப்படிப் புயலாக உள்ளே சென்றதால் அன்னைக்கு ஓராண்டு ஆயிற்று.

. உள்ளே தெய்வத்தைக் கண்டவன் ஜீவன்முக்தன்.

. ஜீவன்முக்தன் அடுத்த பிறப்பில் பழுத்தது காம்பு உதிரும்வரை உலகிலிருக்க ஒரு ஜென்மமாகிறது.

. ஜீவன்முக்தன் பெரியசித்தி, பல ஜென்மங்களில் பெறுவது.

. ஜீவன்முக்தன் காண்பது சாட்சிப்புருஷன் - வளராத ஆன்மா.

. பூரணயோகி தேடுவது வளரும் ஆன்மா.

. நாம் வீடு கட்டும்பொழுது மழைக்காகக் கொஞ்சநாள் ஒத்திப் போடுகிறோம். கொத்தனார் வரவில்லை, நமக்கு உடம்பு சரியில்லை, சிமெண்ட் கிடைக்கவில்லை, பணமில்லை என ஒத்திப்போட்டு 1 வருஷத்தில் வீட்டை முடிக்கிறோம்.

. ஏதோ காரணத்திற்காக ஒரு முறையும் ஒத்திப்போடவில்லை என்றாலும் வீட்டை 1 வாரத்தில் கட்டமுடியாது. 1 மாதத்திலும் முடியாது. சிமெண்ட் தளம் போட்டால் 22 நாட்கள் காத்திருக்க வேண்டும். வேகமாகச் சுவரைக் கட்டினால் சுவர் வளைவாக இருக்கும். (Minimum physical time) தவிர்க்க முடியாத குறைந்தபட்ச நேரத்தை மேலும் சுருக்கமுடியாது. அது உள்ளே தெய்வத்தைக் காண 1 வருஷமாகும். மற்றவர்க்கு ஒரு ஜென்மமாகும். அருள் அதையும் தபஸ்விக்குத் தக்கவாறு மாற்றும். சத்தியஜீவிய சக்தியை முழுமையாக ஏற்பவருக்கு 30,000 ஆண்டுகள் 30 ஆண்டுகளாகச் சுருங்கும் என்கிறார் பகவான். விஷ்ணு லீலீ மௌனத்தை பகவானுக்குப் பயிற்றுவித்தபொழுது 3 நாட்களில் அது பகவானுக்குப் பலித்தது. லீலீ மௌனம் பலிக்கும்என்றபொழுது பக்தி, ஆர்வம் வரும்என நினைத்தாராம். பகவானுக்கு 3ஆம் நாள் அக்ஷரப்பிரம்மம் பலித்தது. "மகாத்மா"என்ற காவியத்தில் அதன் நாயகன் ராஜயோகத்தை 3 நாட்களில் செய்ததாக பகவான் கூறுவது தாம் செய்ததைக் கூறுவதாகும். ராஜயோகத்தை ஆயிரத்திலொருவரே ஆரம்பிக்க முடியும். 3 நாட்களிலும் செய்யமுடியும். பகவானுடன் அன்னை போல் இரண்டறக் கலந்தால் அந்த பக்தருக்கு பகவானுக்குப் பலித்தது பலிக்கும் என்பது பகவான் அன்பர்கட்கு அளிக்கும் வரம்.

. நமக்கு ஆர்வம் சித்தியில் இல்லை. வாழ்வில், வீடு கட்டுவதில், கல்யாணம் செய்வதில், பெரிய வேலைக்குப் போவதில், பிரபலம் அடைவதில் இருக்கிறது. யாருக்கு எதில் ஆர்வமிருக்கிறதோ, அது பலிக்கும். அன்னையை ஏற்பது சரணாகதியை ஏற்பது எனில் புயலாக உள்ளே சென்று அன்னையை அடைய முயல்வது.

. இந்தக் குடும்பத்தில் பெரியதாக ஏதாவது நடந்தால் அனைவரும் அன்னையைப் பற்றிப் பேசுகிறார்கள். அடுத்த நாள் தங்கள் சுபாவப்படி நடப்பார்கள்.

. சூறாவளியாக உள்ளே போக, சுபாவத்தை மேலே விழுந்த தேள்போல உதறவேண்டும். நமக்குச் சுபாவம் இதமாக இருக்கிறது. அன்னை பேசுவதற்கு முக்கியம்.

. பிரபலமாக வேண்டும், பெருஞ்செல்வம் தேடவேண்டும் என்பவற்றுள்ளும் தீவிரமிருப்பதில்லை. நினைப்பு தீவிரமாக இருக்கும். செயலில் தீவிரமிருக்காது.

.சுபாவம் செயலில் தீவிரமாக உள்ள இடம் "நாம்"என்பது. அதை 30 வகைகளாக "The Mother''என்ற நூலில் எழுதுகிறார்.

. அவ்வரிசையின் தலைப்பில் desire,demand வருகின்றன. ஆசை, அடித்துக் கேட்பது நமக்குத் தீவிரம் தருவது.

. தான் சம்பாதிப்பதைவிட பிறர் கெட்டுப்போவதில் கைதட்டிச் சிரிக்கும் ஆர்வம் அவற்றுள் முதன்மையானது.

. நம் செயலிலோ, சொல்லிலோ, நினைவிலோ அது இருந்தால், நமக்கு உள்ளுறை தெய்வத்தைத் தேடுவதில் ஆர்வம் இருக்காது.

. அதற்கு மாற்று நல்லெண்ணம்.

. எனக்கு வரும் அதிர்ஷ்டம் மற்றவருக்கெல்லாம் முதலில் வரட்டும், முடிவாக எனக்கு வரட்டும் என்ற எண்ணமே பலருக்கு ஒத்துவாராது. அது அதிர்ஷ்டம் நிச்சயமாக நம்மைத் தேடிவரும் வழி.

. அன்னை உள்ளே தெய்வத்தைத் தேடிப்போனதுபோல் நாமும் போனால் ஓராண்டில் நமக்கும் பலிக்கும்.

. பகவான் சுதந்திரத்தைவிட்டு யோகத்தை நாட வேண்டியதாயிற்று. அன்னை பகவானை - தம் கிருஷ்ணாவை - தேடிக்கொண்டிருந்ததால், அவர் எதையும் விட்டுவிட்டு வரவேண்டியதில்லை.

. "அன்னை சத்தியஜீவியத்தில் நேராக நுழைந்தவர், நான் கொல்லைப் புறமாக வந்தேன்"என்று பகவான் கூறுவதன் காரணம் அதுவே.

. The Mother இல் உள்ள 30 குறைபாடுகளை விலக்க அவற்றிற்கு நேர் எதிரான குணங்களை மேற்கொள்வதே குறைந்தபட்சம் நாம் செய்யக்கூடியது.

. சோம்பேறி சுறுசுறுப்பாய் நடக்க முயலுதல்; சந்தேகப்பிராணி சந்தேகத்தைப் பாராட்டாதது; பொறாமைக்காரன் எவர்மீது பொறாமைப் படுகிறானோ அவருக்கே உதவிசெய்வது, சேவை செய்வது; அடித்துத் தம் உரிமையைக் கேட்பவர், உரிமையைக் கேட்காமலிருப்பது; ஆசையுள்ளவர் ஆசையை மனத்திலும் அனுமதிக்காதது; புரியவேண்டும் என்ற நிலையில் அதை விலக்கி மௌனத்தை நாடுவது; நம் அபிப்பிராயத்தை வெளியிடாத பழக்கம்; நம்ப மறுப்பதை நம்ப முயல்வது; போன்றவை நாம் ஏற்க வேண்டிய கட்டுப்பாடாகும்.

தாயார் - மனம் இடம் கொடுக்காதது தெரிவதும், இடம் கொடுப்பது தெரிவதும் ஒன்றே. இரண்டும் மனத்தை அறிவதே. மனம் புரிந்துகொண்டவை நடந்தன, புரிந்ததால் நடந்தன அல்லவா?

. மனம் புரிந்துகொள்ளாவிட்டால் குறைவாக நடக்கும், அல்லது நடக்காது. புரிந்தால் அதிகமாக நடக்கும். அன்னை செயல்பட மனம் புரிந்துகொள்வதும் தடை.

. புரிவது நடக்க உதவுவது எதனால்?

. பேனாவும், பேப்பரும் கருவிகள். நாம் ஒரு பக்கம் எழுதியதை 50 காப்பிகள் எடுக்க பேனாவும், பேப்பரும் உதவும். பேனாவைப் புரியாவிட்டால், எழுத முடியாது; காப்பி எடுக்க முடியாது; மேலெல்லாம் இங்க்காகும். பேப்பர் இங்கால் வீணாகும்; காப்பி எடுக்க வாராது. பேனாவையும், பேப்பரையும் அறிபவர் 50 காப்பிகளை அன்று எடுத்து முடிப்பார்.

. எந்தக் கருவி புரிகிறதோ அது பயன்படும்.

. Xerox என ஒன்று வந்துள்ளது எனப் புரிந்தால், 50 காப்பிகள் எடுக்க 50 நிமிஷங்களாகும். செராக்ஸ் பெரும்பலன் தரும். அப்பலன் பெற நாம் பேனாவையும், பேப்பரையும் பயன்படுத்த முயலக்கூடாது. எழுத ஆசைப்பட்டால், செராக்ஸ் பயன்படாது.

. சிறிய கருவியை விடப் பெரியகருவி அதிகமாகப் பயன்படும்.

. சிறிய கருவியை விட்டுக் கொடுக்காமல், பெரியகருவி பயன்படாது.

. உடலின் செயலைவிட உணர்வு பெரியது, மனம் உணர்வைவிடப் பெரியது.

. மௌனம் மனத்தைக்கடந்தது - முனி.

. திருஷ்டி அடுத்தது - ரிஷி.

. ஞானம் மேலும் உயர்ந்தது - யோகி.

. அஞ்ஞானத்தால் பாதிக்கப்படாத ஞானம் அடுத்த கட்டம் - தெய்வம்.

. வெளியில் உள்ள ஞானத்தைவிட உள்ளேயுள்ள ஞானம் உயர்ந்தது - சத்தியஜீவியம்.

. பகவான் நமக்குக் கூறும் முறை சரணாகதி.

. நாம் செய்வது அடுத்த அடுத்த உயர்ந்த கருவியை நாடுவது.

. பகவான் கூறுவது உள்ள கருவியை விட்டுக்கொடுப்பது.

. அடுத்த கருவியை நாடுவதைவிட உள்ளதை விட்டுக் கொடுத்தால் அதிகபட்சம் பலிக்கும் என்பது சரணாகதித் தத்துவம்.

. சரணாகதிக்கு எப்படி இந்த சக்தி வந்தது என அறிவது உதவும்.

. அதை அறிய முயல்வதையும் சரணம் செய்வது சரணாகதி.

. சரணாகதி எப்படி அதிகபட்சத் திறன் பெறுகிறது என்பதும், அதை அறிய முயல்வதைச் சரணம் செய்வதும் கடைசி கட்டத்திற்குரிய இரு எதிரான நிலைகள்.

. உள்ளதை விட்டுக்கொடுக்க அதிகவலிமை வேண்டும்.

. வலிமை இருப்பது உண்மையானால், வலிமைக்கு எளிமை அடங்கும்.

. ஒரு டீமில் கேப்டனாகும் தகுதியுள்ளவனை விலக்க மற்றவர் முயன்றால், அவன் போட்டியிட்டால் ஜெயிப்பான்.

. போட்டியிலிருந்து விலக அதிக தைரியம் தேவை.

. அப்படி விலகினால் பளிச்சென அவன் சிறப்பு அனைவருக்கும் தெரியும்.

. அனைவரும் அவனை நாடுவர்.

. இது சரணாகதியின் வலிமையை விளக்கும்.

. இதைப் புரியாமல் செய்தாலும் பலிக்கும்.

. புரிந்து பின்பற்றினால் அதிகமாகப் பலிக்கும்.

. புரிந்து பின்பற்றுவதைவிட புரிந்தபிறகு இந்த வலிமையைப் பயன்படுத்த மறுப்பது அதிகச்சிறப்பு. அவனுக்குக் கேப்டன் பதவியைவிட கல்லூரி மாணவத் தலைவன் பதவி தேடிவரும்.

. மனத்தின் திறமையை அறிவது மனம்.

. மனத்தின் திறமையை முழுவதும் அறிவது ஆத்மா.

. அறிந்தும் அதைப் பயன்படுத்த முன்வராதது ஆத்மாவின் சரணாகதி.

. மனத்தின் சரணாகதி ஆத்மாவுக்குரியது.

. ஆத்மாவின் சரணாகதி பரமாத்மாவுக்குரியது.

. சைத்தியப்புருஷன் பரமாத்மாவையும் கடந்தது.

. அந்த முடிவான சரணாகதியிலும் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தம் என்ற 4 நிலைகள் உள்ளன.

. சரணாகதி பூர்த்தியாக இந்த நான்கும் சரணடையப்பட வேண்டும்.

. நான்கும் சரணமானால் அகந்தை கரைகிறது.

. அகந்தை கரைந்தால் பிரபஞ்சத்தின் ஆத்மா வெளிவரும்.

. பிரபஞ்சஆத்மா வெளிவந்தபின் அது பிரபஞ்சத்தை சக்தி, ஆனந்தம்மூலம் அனுபவிக்கவேண்டும்.

. அதைக் கடந்தது பரமாத்மா.

. பரமாத்மா சித்தித்தபின் அதன் சுபாவம் திருவுருமாற வேண்டும்.

. சுபாவம் மனம், உணர்வு, செயலாலானது.

. அவை திருவுருமாறியபின் பூரணயோகம் பூர்த்தியாகும்.

. இவற்றை நம் அன்றாடச் செயலில் காண்பது வாழ்வை யோகம் ஏற்பதாகும்.

. பொறுமையும், நிதானமும் பூரணயோகத்தின் பொக்கிஷங்கள்.

தாயார் - மனம் புரிந்துகொள்வது, மனம் விஷயத்தைப் புரிந்து கொள்வது, மனம் அன்னையைப் புரிந்து கொள்வது, மனம் விஷயத்தை அன்னைமூலம் புரிந்துகொள்வது அடுத்த அடுத்த கட்டங்களாகும்:

. கட்டங்கள் பகுதி, அவை மனத்திற்குரியவை; கட்டங்களைக் கடந்தது முழுமை.

. ரிஷிகள் சச்சிதானந்தம் என்பது கடவுள் என்றனர். கடவுள் சச்சிதானந்தமாக இருக்கிறார். நாம் அதைக் கண்டு பிடித்தோம் என அறிகிறோம். மனம் என்ன என்று அறிந்தபின், மனத்திற்குக் கடவுள் சச்சிதானந்தமாகத் தெரிகிறார் என விளங்குகிறது.

. நாம் இருக்கிறோம் (exist). அதனால் கடவுள் existenceசத் எனத் தெரிகிறார்.

நாம் செயல்படுவதால் - சக்தி வெளிப்படுவதால் - கடவுள் (Force) சக்தியாய் "சித்"எனத் தெரிகிறார்.

நாம் ஆனந்தமாக இருக்கிறோம். அதனால் கடவுள் ஆனந்தமாகத் தெரிகிறார்.

மனம் கடவுளைத் தன்னைப்போல் அறிவது சச்சிதானந்தம்.

சச்சிதானந்தம் கடவுளில்லை என்றால் கடவுள் என்பது என்ன?

நாம் நம்மை சச்சிதானந்தம் என அறிவதால், நாமே கடவுள். இன்று நாம் நம்மை சச்சிதானந்தமாக அறிகிறோம். நம் நிலை மாறினால் நாம் அறிவதும் மாறும். Quest of God is quest of self-awareness தன்னையறிவது ஞானம்.

. நாம் விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். அன்னையைப் புரிந்து கொள்ளலாம். விஷயத்தை அன்னைமூலம் அறியலாம். முடிவில் அத்தனையும் நாம் நம்மைப் பல ரூபங்களாக அறிவதேயாகும்.

. இவற்றிற்கெல்லாம் முடிவு என்று ஒன்றுண்டா?

. பிரம்மம் தன்னை சிருஷ்டியில் ஆன்மாவாக - வளரும் ஆன்மாவாகக் - கண்டு ஆனந்தம் பெற சிருஷ்டியை நாடியது.

. நாம் நம்மை சச்சிதானந்தமாக, பிரம்மமாக, பிரம்மஜனனமாக அறிவது முடிவான நிலையில் 3 கட்டங்கள்.

. நாடுவதே பிரம்மஜனனம் என்றால், அது வந்தபின் அதுவே இலக்கு, இலட்சியம், முடிவு.

. குடும்பம் நடத்துபவன் இந்த ஞானம் பெற்றால் - ஞானம் சித்தியாகாது - அவன் தான் செய்யும் காரியங்களை அந்த நிலையில் அதிகபட்சத் திறமையுடன் செய்வான்.

. ஜில்லா கோர்ட் வக்கீல் இந்த ஞானம் பெற்றால் அவர் ரிஷியாகவோ, ஸ்ரீ அரவிந்தராகவோ ஆகலாம். அவர் உலகம் கோர்ட். இன்று தினசரி ரூ.1000/- பீஸ் பெறுபவரானால் அவருக்கு இந்த ஞானம் பிரம்மத்தைச் சித்திக்கிறது என்றால் அவருடைய பிரம்மம் கோர்ட், பீஸ், திறமை. அவர் திறமை உயர்ந்து ஹைகோர்ட்டில் வேலை செய்து தினமும் லட்ச ரூபாய் பீஸ் பெறுவார்.

. பிரம்ம ஞானம் வாழ்வில் பதவியாய், பணமாய், திறமையாகப் பலிக்கும்.

. அவர் யோகத்தை நாடுவதும், வாழ்வை நாடுவதும் அவருடைய choice இஷ்டம்.

. நான் யோகக் கருத்துகள் எந்த அளவில் வாழ்வில் வெளிப்படுகின்றன என்பதை மட்டும் எழுதுவதால், யோகத்தைப் பற்றி இங்கு நான் பேசப்போவதில்லை.

தாயார் - கம்பனி வேலைகளை இப்பொழுது எப்படிச் செய்கிறோம்? அன்னை முறைப்படிச் செய்ய வேண்டும் என மனதால் தயார் செய்யவேண்டும். அதற்கு மனம் ஒத்துக் கொண்டால் மனம் தயாராகும்:

. கம்பனி வேலைகளை வேலையாகச் செய்கிறோம்; சுயநலமாக ஆர்வமாகச் செய்யலாம்; சுயநலமின்றி ஆர்வமாகச் செய்வது நல்லது. அன்னையை மனதில் ஏற்று, இது அவரிட்ட வேலையென அறிந்து, உணர்ந்து, அவருக்காக நாம் நம் வேலையைச் செய்வது சமர்ப்பணம். மனம் அதற்கு இசையாது. அது வாராத பாடத்தைப் படிப்பதுபோல், பாடம் வாராவிட்டால், கற்பது அவசியம் என அறிந்து, கற்க முடிவு செய்து, உடல் வணங்கி, மனம் அடங்கிப் படிக்கிறோம்.

. அது போல் அன்னையை ஏற்பது அவசியம்.

. அது பாக்கியம், அதிர்ஷ்டம்.

. இது என் வேலை, என் கம்பனி வேலை என்பது அறியாமை.

. நம்மால் இத்தனை கோடி சேகரம் செய்ய முடியாது.

. கம்பனி சமூகத்துடையது, நான் சமூகத்தின் மானேஜராவேன்.

. நான் நானில்லை. நான்மட்டும் சமூகமில்லாமல் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது.

. சமூகமில்லாமல் துரும்பும் அசையாதுஎனில், அன்னையில்லாமல் எது அசையும்?

. Power projectஐ நான் கனவு காண முடியாது.

. அன்னை அருள் பாலிக்காமல் இந்த புராஜெக்ட் எனக்கு வந்திருக்காது.

. எனவே இது அன்னையிட்ட வேலை.

. காலையில் பைப்பைத் திறந்தால் தண்ணீர் வருகிறது. மழை பெய்து வரும் நீர் இது. மழை எனக்காகப் பெய்யுமா? மழை அன்னை அருளியதன்றோ!

. இந்தக் கம்பனியில் அன்னையில்லாமல் எந்த வேலையுமில்லை.

. இந்த அறிவை மனம் ஏற்காது. அது குதர்க்கமாகப் பேசும்.

. அதன் குதர்க்கம் மாறும்வரை மனத்திற்கு உபதேசம் செய்ய வேண்டும்.

. ஒரு நாள் மனம் குதர்க்கத்தைக் கைவிடும் அல்லது குறைக்கும்.

. அன்றிலிருந்து எந்த அளவு மனம் இடம்கொடுக்கிறதோ, அந்த அளவு அன்னை வேலையாக வேலையைச் செய்யவேண்டும்.

. மனம் ஒத்துக் கொள்வதால் செய்யும் எனப் பொருளில்லை.

. அறிவது, ஏற்பது, செய்வது, சாதிப்பது என்பவை வெவ்வேறு.

. ஒவ்வொரு கட்டமாக முன்னேறவேண்டும்.

. ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டம் மனிதனால் போக முடியாது.

. கடைப் பையன் முதலாளியாவது குறைவு. கட்டங்களைத் தாண்டுவது அது போன்றது.

. சொந்த முயற்சியால் முடியாதது சரணாகதியால் முடியும்.

. அன்னையால் முடியும் என அறிவது சரணாகதி.

. ஏற்பதைச் செய்வது அதிர்ஷ்டம்.

. தொடர்ந்து செய்வது அருள்.

. அன்னையே நம் வாழ்வில் செயல்பட அனுமதிப்பது பேரருள்.

. அதிர்ஷ்டம், அருள், பேரருள் நம்மை அழைக்கிறது.

தாயார் - அது கஷ்டப்பட்டுச் சம்பாதித்த காசு, கைவிட்டு போகாது. அதனால் அன்னை எளிதில் காப்பாற்றுவார்:

. கஷ்டப்பட்டுச் சம்பாதித்த காசு கையை விட்டுப் போகாது என்பது உண்மை.

அதன்மூலம் அன்னை எளிதில் செயல்படுவார் என்பதும் உண்மை.

கஷ்டப்பட்டுச் சம்பாதித்த சொத்து கைவிட்டுப் போவதையும் ஏதோ ஒரு விஷயத்தில் காண்கிறோம். அதைத் தலைவிதியெனப் புரிந்து கொள்கிறோம்.

உண்மை வேறு. வாழ்வு பல அடுக்குகளாக இருக்கிறது.

கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது போகாதுஎன்ற உண்மை ஒரு நிலைக்கு உரியது.

கொடுமை என்பது அதைக் கடந்தது. மனம் பிறருக்குக் கொடுமை செய்ய நினைத்தால், செய்தால் அதுவும் கைவிட்டுப் போகும்.

. அன்னை எளிதில் செயல்பட கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது உதவும்.

நம் நம்பிக்கை அதனினும் உயர்ந்ததானால், அக்கருவியின்றி அன்னை செயல்படுவார்.

நம்பிக்கையால் நடப்பது 99% கூடிவரும். அருளால் நடப்பது 100% கூடிவரும்.

பேரருள் செயல்படும்பொழுது கடன் கொடுத்தவர் வட்டி போதும், அசல் வேண்டாம்என்பார்கள். அன்னை அருள் அதையும் கடந்தது.

கடன் கொடுத்தவர், கடனைத் திருப்பித் தரவேண்டாம். அதைப்போல் இருமடங்கு மேலும் காணிக்கையாகத் தருவார். அதுவும் அன்பர் வாழ்வில் நடந்தது.

. எதிரிமூலமாக எதுவும் வரும் என்பது அருள்.

எதிரி, வேண்டாதவர் மூலம் நல்லது வருகிறது எனில் அது பெரியதன்று, பிரம்மாண்டமானது. எதிரிமூலம் வருவதால் பலிக்காது என நாம் நினைப்பது நாம் அருளினின்று விலகுவது. அது நம் தரித்திரம்.

வீட்டுக்கு வந்த விருந்தாளி, "காப்பி நன்றாக இருக்கிறது, மேலும் கொஞ்சம் கொடுங்கள்"எனக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவது அன்னையின் பேரருள் அளவுகடந்து செயல்படுவதைக் காட்டும். எவருக்கும் காப்பி கொடுக்க மனமில்லாதவர் கையால் அதைக் கொடுப்பது உலகில் இனி எனக்கு நடக்காதது இல்லை என்று அன்னை அறிவிப்பதாகும்.

அவரும் அதைத்தர சந்தர்ப்பம் ஒத்துவருவது வாழ்வு ஒத்துழைப்பது ஆகும்.

தண்ணீரில்லாத இடத்தில் தண்ணீர் கிடைப்பது, அதுவும் அபரிமிதமாகக் கிடைப்பது, எவர் கையால் அன்னை சொத்தைப் பெற மறுக்கிறோரோ, அவர் கையால் சொத்து வருவது, எவர் எவருக்கும் எதுவும் செய்யமாட்டாரோ, அவர் கேட்காமல் இருப்பதிலேயே பெரியதை எடுத்துக்கொடுப்பது,

. அன்னை "நான் உனக்குரியவன்"என சூட்சுமத்தில் கூறுவது.

. அன்னை நம்மை நோக்கி வந்தால், நாம் குடும்பப் பாசத்தை நோக்கிப் போகிறோம்.

. அன்னை வந்தால், குடும்பம் போகும் எனப் புரிந்துகொள்கிறோம்.

. குடும்பம் அன்னைமூலம் வரவேண்டும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

. எது வந்தாலும் அன்னைமூலம் வாராவிட்டால் வேண்டாம் என மனம் கூறவேண்டும்.

. அந்த மனப்பான்மை பகவான் ஸ்ரீ அரவிந்தரை நமக்குச் சொந்தமாக்கும்.

. நம்மை அன்னைக்குச் சொந்தமாக்கும்.

. நாமும் அன்னையும், அன்னையும் பகவானும் கலந்ததுபோல் கலப்போம்.

கணவர் - அதனால்தான் இவர் பொருள் திரும்பி வந்ததா? மனம் பிறர் பொருளை நாடியதால் இவருடைய பொருளுக்கு ஆபத்து வந்ததா?

தாயார் - யார் பொருளை அபகரிக்க இவர் முயன்றாரோ, அவரே வந்து இவர் பொருளைக் காப்பாற்றினார்:

. கணவர் சொல்வது சரி. ஆனால் அது மனச்சாட்சி உள்ளவர்க்கு மட்டும் பொருந்தும். மனச்சாட்சியே இல்லாத மனிதனுக்குச் சட்டம் தலைகீழே. பிறர் பொருளை அபகரிக்க நினைத்தால், வலிமையிருந்தால், தொடர்ந்து கிடைக்கும். அதற்கு லிமிட் ஏற்படுத்துவது, லிமிட் செயல்படுவது அவனுடைய திறமை. மனச்சாட்சிக்கு இடமில்லை (No scope for morals). நெப்போலியன் போல மனச்சாட்சியை உலகுக்காகக் கடந்தவருண்டு. கிருஷ்ண பரமாத்மாவைப்போல் மனச்சாட்சியைக் கடந்த தெய்வம் உண்டு. மனச்சாட்சியற்றவனுக்குப் பலிப்பதுபோல் இவர்கட்கும் பலிக்கும். நிலை வேறு. சட்டம் ஒன்றே.

. யாருக்குத் தீங்கு செய்ய முயன்றோமோ, அவரே இவர் மனையைக் காப்பாற்றினார் என்பது பேரருள் செயல்படுவது. அதிர்ஷ்டமானாலும், அருளானாலும், பேரருளானாலும், அன்னை அருளானாலும், மிஞ்சுவது சுயநலமான அகந்தை. அகந்தை மாறவில்லை என்பது அகந்தையை அறியவில்லை எனப் பொருள்.

பிறர் அகந்தை நம்மைப் பாதிக்காமலிருக்க ஒரே வழி நம் அகந்தை அழிவது.

. இக்கதையில் வரும் நிகழ்ச்சிகள் சுமார் 50 அல்லது 100. அன்னை, ஸ்ரீ அரவிந்தர் கூறியவை சுமார் 2 அல்லது 3 ஆயிரம் எண்ணங்கள். கதையில் ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டால் அதற்குப் பொருத்தமான கருத்துகள் சுமார் 100 இருக்கும். இந்த 100 கோணங்களிலும் ஒரு நிகழ்ச்சியை முழுமையாக விமர்சனம் செய்தால் 10 பக்கங்களாவது எழுதலாம். அதுபோல் எழுதினால் விமர்சனம் 500 முதல் 1000 பக்கங்கள் வரை வரும். இத்தனையும் முதல் நிலைக்குரியவை. சுமார் 4 அல்லது 5 நிலைகளில் நிகழ்ச்சிகளைக் கருதலாம். அதாவது 5000 பக்கங்கள்வரை இக்கதையை விமர்சனம் செய்யலாம். அப்படி எழுதினால் ஸ்ரீ அரவிந்தம் முழுவதும் புரியும். இப்பக்கம் 505.

. 5000 பக்கங்கள் படித்துப் புரிந்து கொள்வதை 500 பக்கங்களிலும் அறியலாம், 5 பக்கங்களிலும் அறியலாம். அது எழுதுவதையும் படிப்பதையும் பொருத்தது.

. படிப்பது முக்கியம் எனில் 5000 பக்கங்களும் பயன்படும்.

. புரிவது முக்கியம் எனில் அது 300ஆவது பக்கத்திலேயே புரியலாம் அல்லது 800ஆவது பக்கத்தில் புரியலாம். 1000 பக்கங்கள் படித்தபின் புரியாவிட்டால், அவருக்குப் புரியப் போவதில்லை.

. விபரம், விஷயம், சுருக்கம், சூட்சுமம், இரகஸ்யம் எனப் பலக் கட்டங்களுண்டு. விபரத்தை நாடினால் வளரும், இரகஸ்யத்தை நாடினால் 5ஆம் பக்கத்திலேயே புரியும். விபரத்தில் விஷயத்தைக் கண்டு மனத்தால் அதைச் சுருக்கி சூட்சும இரகஸ்யத்தை நாடுபவருக்கு கதையில் முதல் பாரா போதும்.

. அது தானே தெரிய வேண்டியது.

. சொல்லித் தெரிவதில்லை.

. சொல்லாமல் அதையே நான் சொல்ல முயன்றிருக்கிறேன்.

கணவர் - ...நினைவே பலிக்கிறது என்பதற்கும் இது பெரிய உதாரணம்......:

தாயார் - அவையெழும்பொழுது க்ஷணத்தில் காரியம் கெட்டுவிடும். அதே போல் அருள் எழும்பொழுது காரியம் க்ஷணத்தில் முடியும். அந்த இடங்களில் இயல்பாக உள்ள உண்மையை அன்னை sincerity என்கிறார்:

. நினைவு பலிக்கிறது என்றால் அந்நினைவு காலத்தைக் கடந்தது, காரண தேகத்தினுடையது. நாம் அவ்விஷயத்தில் sincere ஆக இருக்கிறோம் எனப் பொருள்.

.அன்னை sincerity என்பது subconscious அல்லது Superconscious sincerity. மேலே விழுந்த பல்லியை உடல் உடனே உதறுவது subconscious உணர்ச்சி. ஒரு விஷயம் வருமுன் அன்னைநினைவு வருவது Superconscious sincerity. பல்லியை உதறியது, நாம் அறியமாட்டோம். அன்னை கனவில் வந்தால் மறக்கமாட்டோம். Subconscious நினைவிலில்லாதது. Superconscious மறக்க முடியாதது.

. இக்கதையில் எழுதிய உதாரணத்தில் பிறர் நிலத்தைக் கேட்டவர் ஆழ்ந்து அதை விரும்புகிறார் எனப் பொருள். பெண்ணின் தோழி விஷயம் முடிவது, பார்ட்னர் நினைப்பது நடப்பது, தாயார் கூறுவது உடனே நடப்பது, ஆகியவை Superconscient sincerity. Subconsciousக்கும் Superconsciousக்கும் வித்தியாசமில்லை. இரண்டும் பூரணமானவைஎன்பதால் உடனே நடக்கிறது. Subconscious இருளாலானது. Superconscient ஒளியாலானது. ஒரு விஷயம் எதைச் சேர்ந்தது என அறிய வேண்டுமானால் உள்ளே தெரிவது ஒளியா, இருளா எனப் பார்த்து அறியலாம்.

. அருள் Superconscientலிருந்து வருகிறது.

. Sincerity இரண்டிற்கும் உண்டு.

. தீயசக்தி Subconscientக்குண்டு. அது Superconscientஇல் இல்லை.

. தீயசக்தி திருவுருமாறினால் Subconscientலிருந்து Superconscientக்கு மாறும்.

. தாயாருக்கு அன்னைச்சூழல் உண்டு.

. அன்னைச்சூழல் கனத்ததானால் அருள் அதன்மூலம் செயல்படும்.

. முழுமையுள்ள இடத்தில் sincerity இருக்கும்.

. க்ஷணத்தில் முடிவது மனமன்று, சத்தியஜீவியம்.

. மனத்திலிருந்து சத்தியஜீவியம் போகும்பொழுது வேகம் அதிகரிக்கும்.

. தாமதமாகிறது எனில் நம் மனம் பழைய அபிப்பிராயத்தை விட்டுக் கொடுக்க மறுக்கிறது என்று பொருள்.

. விட்டுக் கொடுக்க மனமில்லை எனில் விஷயம் புரியாது.

. மாறுவது கடினமன்று, எங்கு மாறவேண்டும் என அறிவதற்கு நாளாகும் என அன்னை கூறுவது அதனால்தான். மாறப் பிரியப்படாவிட்டால், எங்கு மாறவேண்டும் எனத் தெரியாது.

. Subconscient, Superconscient சந்திக்குமிடம் subliminal. Subliminalக்கு இருளும், அருளும் உண்டு. அதற்கு க்ஷணத்தில் முடிக்கும் வேகம் உண்டு.

. நேரம் சுருங்க நாம் மேல்மனத்திலிருந்து அடிமனம் போக வேண்டும்.

கணவர் - கேலி, குத்தலாகப் பேசுவது அதுவா?...

கணவர் - நமக்குப் புரியவில்லை என அந்த நேரம் கூறுவது insincerity. நான் உன் காரியத்தை அழிக்க வந்துள்ளேன் எனக் கூறுவதாகும். அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்;

தாயார் - நாமே அவர்:

. தான் ஜெயிப்பதை விடப் பிறர் தோற்பதை மனிதன் பெரிதும் விரும்புவான்.

. ஏமாந்து போவது, பொருளை இழப்பது மனிதனுக்குப் பெரிதன்று.

"நான் ஏமாந்துவிட்டேன்"என்று மனம் ஏற்றுக்கொள்ளாது. அடிபட்ட பாம்புபோல் துடிக்கும், சீறும்.

. மனிதன் இடையறாது தேடுவது அறிவு. அறியாமையிலிருந்து அறிவு வெளிவர முயன்ற படியிருக்கும். மடையனுக்கும் தான் மடையன் எனப் புரியும்பொழுது ஆத்திரம் வரும்.

. மடையனுக்கு வரும் ஆத்திரம் மனம் அறிவைத் தேடுவது என்று பொருள்.

. நாம் IAS பாஸ் செய்வது கடினம். அடுத்தவன் IAS பாஸ் செய்வதைக் கெடுப்பது சுலபம்.

. அடுத்தவன் உயரக்கூடாது என்பதைவிட நமக்கும், அவனுக்கும் இடைவெளி வரக்கூடாது என்பது முக்கியம்.

. புயல் வீசுவதும், வெள்ளம் புரண்டோடுவதும் அழுத்தம் மாறுவதால், அவை physical pressure. பொறாமை vital pressure. பொறாமை உயர்ந்து போட்டியாகிறது. போட்டி உயர்ந்து ஒத்துழைப்பாகிறது.

. ஒத்துழைப்பு இனித்தால் (admiration) பாராட்டாகும்.

. பாராட்டு நிறைவுபெற்றால் (adoration) பக்தியாகும்.

. பக்தி கனிந்தால் அன்பாகும் (love).

. அன்பு பூரணம் பெறுவது பூரிப்பு.

. பூரிப்பு அடுத்த கட்டம் போவது சரணாகதி.

. Faith, obedience, worship.

Adoration, self-giving, delight.

Love, ecstasy, surrender என்று 9 கட்டங்கள் உண்டு.

. Faith நம்பிக்கை என்பது ஆன்மஞானம் மனத்தில் பிரதிபலிப்பது. ஜெயிப்பதற்கு எதுவுமில்லாத பொழுது, ஜெயிப்போம் என நம்புவது ஆத்மா அறிவதை மனம் அறியாமல் பிரதிபலிப்பதால்.

. Obedience கீழ்ப்படிதல் என்றால் அந்த நம்பிக்கை உடலை எட்டுவது எனப் பொருள்.

. Worship வணக்கம் என்பது உடலின் கீழ்ப்படிதல் உயர்ந்து உணர்வின் கீழ்ப்படிதலாவதாகும்.

. Adoration பாராட்டு. வணக்கம் சைத்தியப்புருஷனில் வெளிப்படுவது.

. Self-giving அர்ப்பணம். வணக்கம் விரிந்து பரவுவதாகும்.

. Delight ஆனந்தம். அப்பரவுவதின் உணர்வு ஆனந்தம்.

. Love அன்பு. ஆனந்தம் ஆத்மாவைத் தொடுவது அன்பு.

. Ecstasy அன்பின் நிறைவு பூரணம்பெறுவது பூரிப்பு.

. Surrender பூரிப்பு அடுத்த லெவலுக்கு போவது சரணாகதி.

கணவர் - சரி, அப்படிச் சொல்கிறேன்:

. நல்ல சொற்கள் 10 சொன்னபின், மனம் புண்படும்படி ஒரு சொல் சொல்லி எல்லாவற்றையும் கெடுப்பது.

. எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் பல ஆண்டுகள் வேலை செய்து முடிவில் ஒரு சிறுபலனை எதிர்பார்த்துக் கெட்ட பெயர் வாங்குவது.

. நம்மைச் சுற்றி நடப்பதை அறியாதது.

. எதிரியை நண்பனாக நினைப்பது.

. பிறர் நம்மை மட்டமாக நினைப்பதை அறியாதது.

. நாமாகச் செய்யாத தவற்றைப் பிறர் தூண்டுதலால் செய்வது. .

அடுத்தவரை அவரிஷ்டப்படி திருப்திப்படுத்த முயல்வது.

. நடக்காததை நடத்த ஆசைப்படுவது.

. தராதரம் தெரியாமல் பழகுவது.

. பிறர் குறையை அறியமுடியாமல் சிரமப்படுவது.

. மனிதனுக்குப் பொறாமை, சுயநலம் உண்டு எனத் தெரியாதது.

. எவரும் பொய் சொல்வார் என அறியாதது.

. பிறரை மனிதனாக, நல்லவனாக, சமமாகக் கருதுவது.

. நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவரை நம்புவது.

. பிடியை விட்டுக்கொடுப்பது.

. மட்டமானவர்க்கு இடம்தருவது.

. மேற்சொன்ன 16 குணங்களும் சேர்ந்த மையம் அகந்தை, சொல்லப் போனால் initiative ஆரம்பம். அறிவில்லாத தெம்பு ஆரம்பிக்கும். Unconscious activation.Conscious ஆக இருந்தால் இத்தனையும் மறையும். கிராமத்து மனிதன் vitally consciousஆக இருக்கிறான். நாம் mentally consciousஆக இருக்கவேண்டும். Consciousness ஆத்மாவுக்குரியது. அதனால் spiritually consciousஆக இருக்க வேண்டும்.

. 10 நல்ல சொற்களுக்குப்பின் ஒரு சொல் மனம் புண்படும்படிச் சொல்வது அதுவே சுபாவத்தின் உண்மைஎனக் காட்டுகிறது.

. கெட்டபெயரே நமக்குரியது என்பது சிறுபலனை எதிர்பார்க்கிறது.

. நம்மை மட்டும் அறியும் சுயநலம், சுற்றி நடப்பதை அறியாது.

. எதிரியை அறியாததால் அவனை நண்பனாக நினைக்கிறோம். எதிரியிடம் உள்ள குறையைக் காணக்கூடாது என்ற இலட்சியம் அதைச் செய்யும்.

. நம்மை உயர்வாக நினைப்பதில் திளைப்பதால் பிறர் எண்ணம் தெரிவதில்லை.

. பிறர் தூண்டுதலால் செய்கிறோம் என்பது செய்யும் திறன் உள்ளேயிருக்கிறது என்று பொருள்.

. அடுத்தவரைத் திருப்திப்படுத்துவது வீண் பெருமை, அறியாமை. நம்முள் உள்ள அவர் குறையை இதமாக நடத்துவது.

. Ambition பேராசை பெரியதை நினைக்கிறது.

. கண் மூடியானால் தராதரம் தெரியாது.

. பிறர் குறை தெரியாதது அறியாமை அல்லது பெருந்தன்மை.

. தம்மைப்போல் பிறரை நினைப்பது, தாம் செய்வதைப் பிறர் நமக்குச் செய்யக்கூடாது என விரும்புவது.

. நல்லகுணம், அதற்குத் தகுந்த வலிமையில்லாவிட்டால் பிறரைச் சமமாக நடத்தும்.

. பாகுபாடில்லாதது.

. பிடியை விட்டுக்கொடுப்பது பெருந்தன்மை, பெரியவலிமை, பெரிய அறியாமை.

. நம்முள் உள்ள மட்டமும், உயர்வும் அதை ஈர்க்கும்.

. எந்த நேரமும் சிருஷ்டி பரிணாமமாக மாறும் திறனுண்டு. சிருஷ்டியில் அதற்குரிய சந்தர்ப்பம் உண்டு. அதைப் பயன்படுத்துவது மனிதனுடைய இஷ்டம் choice.

. போக்கடா சுரவர்தி மகாத்மாகாந்தியால் முஸ்லீம் கொலைகாரர்களைக் கட்டுப்படுத்தினான். சுரவர்தி முதல் மந்திரி. கல்கத்தா கலவரத்தை அவனால் தூபம் போட முடியும், தடுக்கமுடியும். அவனாகச் செய்யாவிட்டாலும் மகாத்மாவால் செய்தான்.

. 1910இல் பகவான் சூட்சுமத்தில் சுதந்திரம் பெற்றபின் அதைப் பூர்த்தி செய்யும் அரசியல் தலைமையில்லை. இருப்பினும் 1935இல் லண்டன் பார்லிமெண்ட் இந்தியா சட்டம் போட்டு டொமினியன் அந்தஸ்துத் தர விரும்பியது. 1942இல் கிருப்ஸ் திட்டம் வந்தது. 1945இல் காபினட் மிஷின் திட்டம் வந்தது. மகாத்மா அத்தனையையும் மறுத்துவிட்டார். பகவான் ஸ்ரீ அரவிந்தர் குறுக்கிட்டுக் கேட்டுக் கொண்டதையும் மறுத்துவிட்டார். அது மனிதனுடைய குதர்க்கம். 1962இல் சைனாகாரன் வந்ததும், 1964இல் க்யூபா நெருக்கடி வந்தபொழுதும் அன்னை அரசியல் தலைமையை எதிர்பார்க்கவில்லை. அன்று சூட்சுமத்தில் சத்தியஜீவியம் வந்துவிட்டதால் தாமே நெருக்கடியைத் தவிர்த்தார். 1943இல் பஞ்சம் வந்தபொழுதும், 1947இல் கலவரம் எழுந்த பொழுதும், 1935, 1942, 1945இல் சுதந்திரத்திற்கு வாய்ப்பு வந்த பொழுது பகவானால் அவற்றைத் தடுக்கவோ, சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ளவோ முடியவில்லை.

. நம் வாழ்வில் அருள் ஓரளவு வலிந்து செயல்படுகிறது.

அதற்குப்பின் நாம் அருளை அனுமதிப்பதில்லை.

அருள் வலிமைபெற்றாலும், நாம் அனுமதித்தாலும் அதிர்ஷ்டம், அருள், பேரருள் செயல்படும்.

நம் வாழ்வைக் கவனித்தால் எந்த அன்பருக்கும் நாட்டின் உச்சகட்ட வாய்ப்பு வந்தது தெரியும்.

அப்பொழுது இழந்தால், இப்பொழுது பெறலாம்.

மனம் மாறினால், சூழல் மாறும்.

சூழல் என்பது மனம் என்பதால்; மனம் மாறினால் சூழல் மாறும்.

சூழல் புறம், மனம் அகம்.

சூட்சுமமனம் புறத்தை உட்கொண்ட அகம்.

இழந்ததைப் பெறலாம்.

இதுவரைப் பெறாததைப் பெறலாம்.

பெறற்கரியதைப் பெறலாம்.

பெரியதைக் கடந்த உயர்ந்ததைப் பெறலாம்.

பெறவேண்டும் என்ற கட்டத்தைக் கடக்கலாம்.

எது வேண்டுமானாலும் செய்யலாம்.

எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

வேண்டும் என்பவர் பெறுவார்.

. அத்தனை நல்லதும் ஒரு சொல் மனம் புண்படுவதாகவுமிருந்தால், உண்மை புண்படப் பேசுவதே என்று பொருள்.

நாம் உள்ள நிலையிலிருந்து உயர ஆரம்பித்தால், புதியதைக் கற்றுக் கொண்டு பேசுகிறோம். அவை நல்லவையாக இருக்கும். நமக்கே உடைய உண்மை பழைய பழக்கம். அது வெளிவருவது நாம் யார் எனக் காட்டும்.

ஜீவியம் உயரும் பொழுது திருவுருமாறினால் கெட்டது நல்லதாக மாறும். அதில் குறை வாராது. நாமாக முயன்று மாறினால் கிராமத்துப் பையன் சென்னை ஹாஸ்டலில் சேர்ந்து நகரத்துப் பையனைப் போலப் பழக முயன்றால் அவன் கிராமத்துப் பழக்கம் வெளிவரும். ஜன்னலால் எச்சில் துப்புவான். இந்தப் பகுதியில் கூறும் 16 பாயிண்ட்களும் அந்த ஒரே விஷயத்தைப் பற்றிப் பேசுகின்றன.

. ஒருவரை அறிய வேண்டுமானால் அவரை நம் வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கச் சொன்னால் அவர் யார் எனத் தெரியும்.

. அவர் வீட்டில் நாம் போய் தங்கினால் எல்லாம் தெரிந்துவிடும்.

. காலையில் எழுந்து வெளியில் போகும் வரை அவருடைய பழக்கங்கள் அவரை யார் எனக் காட்டும்.

. அமெரிக்கர் ஒருவர் நண்பரைச் சந்திக்க அடுத்த ஊருக்குப் போனார். நண்பர் அவரை விமான நிலையத்தில் சந்தித்து தம் வீட்டிற்கு வந்து தங்கச் சொன்னார். அதற்குள் toll gate வந்துவிட்டது. ஒரு டாலர் கட்டவேண்டும். காரை ஓட்டிக் கொண்டிருந்தவர் வந்த விருந்தினரைப் பார்த்தார். அந்த ஒரு டாலரை தாம் கட்டவேண்டும் என நண்பர் எதிர்பார்ப்பதை அறிந்து அவரே அதைக் கொடுக்க முன்வந்தார். வீடு போய்ச் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு தம் அறையிலிருக்கும் பொழுது நண்பர் மனைவி, "குப்பைத் தொட்டியில் குப்பையிருக்கிறது. அதை தயவுசெய்து வெளியே கொண்டுபோய் போடுங்கள்" என்றார். அவர் வீட்டிற்குப் போனதால் தெரிய வந்தவை இவை. அந்த நண்பர் ஆபீசிலும், வெளியிலும் பழகும்பொழுது மிக நன்றாகப் பழகுபவர் எனப் பெயர் வாங்கியவர்.

. பிடியை நம்மால் விட்டுக்கொடுக்க முடியாதது ஆன்மாவின் இயலாமை. ஜராசந்தன் திரௌபதி சுயம்வரத்தில் அவளைக் கடத்திச் செல்லத் திட்டமிட்டபொழுது கிருஷ்ணன் தம் நண்பனுடன் ஜராசந்தனை சந்தித்து அதைச் செய்யக்கூடாது எனக் கண்டிக்கப் போனார்.

ஜராசந்தனின் பாசறையில் தம் கையிலிருந்த ஆயுதங்களை வெளியே வைத்துவிட்டுப் போனார். ஆன்மாவில் வலிமை இருப்பதால் கிருஷ்ணனால் அதைச் செய்ய முடிந்தது.

நமக்கு ஒரு விஷயம் என - வீடு வாங்குவது - வந்தால் நமது இரகஸ்யங்களை விட்டுக் கொடுக்கமாட்டோம். முழுவலிமை இருந்து, கையும், வாயும், மனமும் சுத்தமாயிருந்தால் மறைப்பதற்கு இரகஸ்யமில்லை.

. பிடியை விட்டுக்கொடுக்க முடியாதது - இயலாமை.

. பிடியை விட்டுக்கொடுப்பது - வலிமை.

. வீட்டில் அசம்பாவிதமாக எவரும் பேசுவதில்லை.

. சுத்தம் தொடர்ந்து உயர்ந்த படியிருக்கிறது.

. எவர் வீட்டினுள் நுழைந்தாலும் மலர்ந்த முகத்துடன் வருகிறார்கள்.

. டெலிபோன் மணியடித்தால் ஓடிப்போய் எடுக்கிறார்கள்.

. வந்தவர்களை சாப்பிடாமல் அனுப்புவதில்லை.

. வருபவர் அனைவரும் தங்கள் வீட்டிற்கு வரும்படி வீட்டு மனிதர்களை அழைக்கிறார்கள்.

. இதுவரை இருந்த சில்லரைப் பிரச்சினைகள் தாமே மறைந்து விட்டன.

. டாக்டரிடம் போவது குறைந்தது, மறைந்தது எனலாம்.

. ஊதுவத்தி ஏற்றாவிட்டாலும், வீடு முழுவதும் மணமாக இருக்கிறது.

. எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஏதாவது சிறிய, பெரிய வாய்ப்புகள் வந்தபடியிருக்கின்றன.

. பார்ட்னர் வரும்தோறும் ஒரு பெரிய செய்தியைச் சொல்லிவிட்டுப் போகிறார்.

. இவையெல்லாம் நல்லவை, ஆனால் புறத்திற்குரியவை, வந்துள்ள வாய்ப்புகளைத் தாங்கிப் பிடிக்கப் போதாது. அதற்கு அகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் தேவை. மேற்கூறியவற்றிற்குரிய அக உணர்வுகளை வரிசையாக எழுதலாம்.

. மனத்துள் அசம்பாவிதமாக எண்ணங்கள் எழக்கூடாது.

. மனத்தூய்மை உயர்ந்த படியிருக்கவேண்டும்.

. முகம் மலர்வதைப்போல் அகம் மலரவேண்டும்.

. Phone call வந்தால் மனத்தால் வரவேற்கவேண்டும்.

. வந்தவர்கள் இனிமையாக உணராமல் அனுப்பக்கூடாது.

. வருபவர் நம் மனத்தோடு தொடர்பு கொள்ள மனத்தால் விழையவேண்டும்.

. சிறிய மனக்குறைகள் மறையவேண்டும்.

. உடல்நலம் உள்ளே மனநலமாகப் பெருக வேண்டும்.

. மனம் மணம் வீசவேண்டும்.

. மனம் எல்லாத் திசைகளிலும் விரியவேண்டும்.

. பார்ட்னர் வரும்தோறும் ஒரு பெரிய எண்ணத்தை ஏற்கவேண்டும்.

. புறம், அகம் என்பவை உண்டு.

. ஸ்ரீ அரவிந்தம், "அகமே முடிவு, புறம் நாம் கற்பனை செய்வது"என்கிறது.

. ஸ்ரீ அரவிந்தத்தில் அகம் - புறம் - புறத்தை உட்கொண்ட பூரணஅகம் என 3 நிலைகள் உள்ளன.

. 3ஆம் நிலையான அகம், 3ஆம் நிலைக் காலத்திற்குரியது.

. 3ஆம் நிலைக் காலத்தில் நின்று அகம், புறத்தைக் காண்பது முழுமையான பார்வை.

. நம் வாழ்வை எல்லா நிலைகளிலும் பொருத்திப்பார்ப்பது வாழ்வை விவரமாக அறிவதாகும்.

. அது தொடர்ந்த முன்னேற்றமாகும்.

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சுதந்திரமான சூழ்நிலையில் தான் மனிதன் வளருவான். ஒருவன் வளரும் சூழ்நிலை, சுதந்திரம் என்பதற்கு ஓர் அடையாளமுண்டு. அவனைச் சுற்றியுள்ளவர்களும் வளர்ந்தால் அவனுடைய சூழ்நிலை, சுதந்திரம் என்பது உறுதி. அவன் மற்றவர்களோடு கொண்டுள்ள தொடர்பு, அந்தச் சூழ்நிலையை நிர்ணயிக்கும். மற்றவர்களைச் சுதந்திரமாகச் செயல்படத் தூண்டும் உறவு சுதந்திரமான உறவு. கேட்பவர் விருப்பமாகக் கேட்டுக்கொள்வார் எனில் பேசுபவருக்கு உற்சாகம் எழும். கேட்பவர் பேசுபவரிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடியது உண்டு என்று கருதினால் பேசுபவருக்கு உற்சாகம் எழும். அம்மனநிலைக்கு "அடக்கம்"என்று பெயர்.

சுதந்திரம் சுற்றியுள்ளவர்களை வளர்க்கும்.

அடக்கம் சுதந்திரத்தைக் குறிக்கும்.


 


 


 


 


 



book | by Dr. Radut