06.அஜெண்டா
"Agenda"
When the physical consciousness loses its false side
Man can have the consciousness of the day at night.
உடலின் ஜீவியம் தன் பொய்யை இழந்தால், இரவு பகலாகும்.
. பொய் என்பது அறியாமை.
. தாம் பிரம்மம் என்பதை மறந்தது அறியாமை எனப்படும்.
. மறந்த பிரம்மம் தன்னை நினைவுகூர்வது அறிவு, ஞானமாகும்.
. பிரம்மம் மனிதனில் மறைந்துளது.
. விழிப்பு என்பது ஓரளவுள்ளது மனத்தில்.
. உயிரில் அரை விழிப்பும், உடலில் முழுமறதியும் உண்டு.
. தியானத்தில் ஆத்மா விழித்தால் புருவமத்தியில் ஒளி, ஜோதி தெரியும்.
. இது மனோமயப்புருஷன்.
. மனம் மட்டும் விழிப்பது மனோமயப்புருஷனாகும்.
. பக்தியால் நெஞ்சம் விழிப்பது பிராணமயப்புருஷனாகும்.
. மனமும், பிராணனும், உடலும் விழிப்பது ஜீவன் கண் திறப்பதாகும்.
. அது நெஞ்சுக்குப் பின்னால் ஒரு தழல்போன்ற ஜோதியாக எழும்.
. அது ஜீவன் முழுவதும் பரவலாம்.
. அப்படிப் பரவுவது ஜீவன் பொய்யை இழப்பது.
. அது முடிவாக வெளிப்படுவது உடல்.
. அதுவே உடல் பொய்ம்மையை இழப்பது.
. உலகில் இருள் இல்லை.
. ஒளியும், அடர்ந்த ஒளியும் உண்டு.
. அடர்ந்த ஒளி கண் கூசும்.
. கண் பார்க்க முடியாத பொழுது அதை இருள் எனக் கூறும்.
. கண், புலன்.
. புலன் பிராணனின் கருவி.
. பிராணனில் விழிப்பில்லை.
. அதனால் கண் அடர்ந்த ஒளியை இருள் என்றோ, பொய் என்றோ கூறுகிறது.
. புலன் மெய்ம்மை பெற்றால், கண் விழிக்கும்.
. கண் விழித்தால், இருள் ஒளியாகத் தெரியும்.
. பகலென இரவு பிரகாசிக்கும்.
. சிருஷ்டியில் பொய் என்பது பிரம்மத்தினின்று நாம் பிரிவது.
. பிரிவினை அகந்தைக்குரியது.
. அகந்தை பொய், இருள்.
. அகந்தையற்றவனுக்கு இரவு பகலாகும்.
ஸ்ரீ அரவிந்த சுடர்
ஒரு விஷயத்தில் உந்தப்பட்டு மனிதனுடைய சக்தி அவனை மீறிய அளவில் செயல்படும்பொழுது அவனுக்கு நிறைவுண்டு. இறைவனையடைய மனிதன் தன் வயமிழந்தால் ஆன்மீகப் பூரணம் ஏற்படும்.
தன் வயமிழந்த மனிதன் ஆன்மாவில் எழுவான்.
- Login to post comments