Skip to Content

02. வருமான வளர்ச்சிக்கான வழிமுறைகள்

வருமான வளர்ச்சிக்கான வழிமுறைகள்

கர்மயோகி

  1. வருமானம் பெருக,
    • உழைப்பில் ஆர்வம் வெளிப்பட வேண்டும்.
    • அறிவு உழைப்பில் வெளிப்பட்டால், வருமானம் அபரிமிதமாகப் பெருகும்.
    • ஆன்மாவை உழைப்பு வெளிப்படுத்தினால் வருமானம் அனந்தமாகப் பெருகும்.
    • சுயநலம் பரநலமாக வேண்டும்.
    • வறண்ட மனம் வளமாக வேண்டும்.
    • பிரார்த்தனை சமர்ப்பணமாக மாற வேண்டும்.
    • அன்னையை அன்னைக்காக ஏற்க வேண்டும்.
    • வாழ்வு பண்பின் விளைநிலமாக வேண்டும்.
    • பொய் கலவாத வாழ்வு வாழ வேண்டும்.
    • தொழிலாளி முதலாளியாக வேண்டும்.
    • பிறர் பெருமையை மனம் அறிந்து போற்ற வேண்டும்.
  2. வருமானம் அளவின்றிப் பெருக,
    • இதுவரைப் பெற்றதற்கு உடல் பூரித்து நன்றி மலர வேண்டும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நம்மால் "அம்பாள் வெற்றிலைப் பாக்கு எச்சிலை'' ஆர்வத்தோடும் நன்றியோடும் ஏற்க முடியுமா?
 
வெற்றிலைப் பாக்கெச்சில் அமிர்தம்.



book | by Dr. Radut