14. அன்பான அமிர்த அபரிமிதம்
அன்பான அமிர்த அபரிமிதம்
கர்மயோகி
- கண்டு கொண்டால் சித்திக்கும்.
- கண்டு கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் தவறாது சித்திக்கும்.
- கண்டு கொண்டால் அருள் சித்திக்கும், கண்டு கொள்ளாவிட்டால் அதிர்ஷ்டம் சித்திக்கும்.
அருள் என்பது அனைவரும் பெறும் அதிர்ஷ்டம். - மூலவனே முறை.
- சிறியது சிறப்பானால், பெரியது பலிக்கும்.
- மூலம் புரிந்தவர்க்கு மூலையிலும் தெரியும்.
- திருமணம் சொர்க்க வாயில்.
- ஆத்மா கண்டதை அறிவு மறக்காது.
- ஆண்டவனுக்குச் செய்யும் சேவை அனைவருக்கும் செய்யும் சேவை.
- மனிதனுக்குச் சேவையுரியதல்ல.
- மனிதனுக்குச் செய்யும் சேவை மரணத்தை உறுதிப்படுத்தும்.
- விலகியவரை விரும்பி நாடும் மனம் திருவுருமாறாது.
விலகியவரும் விரும்பி நாடும் வழி நடப்பது திருவுருமாற்றம். - உலகம் சிறியது, உள்ளொளி பெரியது.
- புறத்தில் காண்பது உலகமல்ல, தோற்றம்.
- உலகமும், பிரபஞ்சமும், பிரம்மமும் உள்ளேயுள்ளன. வெளியில் எதுவும் இல்லை.
- நிர்மலமானது நிதர்சனமானது.
- ஆதாயம் ஆண்டவனை விலக்கும், அனைத்தையும் விலக்கும்.
- புனர்ஜன்மம் தேவையில்லாதவர்க்குப் பூர்வஜன்மம் தெரியும்.
- பிறரில் காணாத பிரம்மம் பிரம்மமில்லை.
- மௌனம் விரதம்.
மௌனத்தைக் கடந்த மௌனம் ஆனந்தம். - எவருக்கும் வேண்டாதவனுக்கு, அனைவரும் வேண்டும்.
- கேட்பது உலகம், பெறுவது பிரபஞ்சம்.
- உள்ளம் திருவுள்ளமாவது திருவுருமாற்றம்.
- அக்ஷர பிரம்மம் முடிவில்லை; ஸ்ரீ அரவிந்த பிரம்மமே முடிவு.
- அக்ஷரத்தைக் கடந்த ஸ்ரீ அரவிந்தம்.
- எது வந்தாலும் முடிவில்லாமல் வரும்.
வரும் வழி நமக்கேற்றதாகும். - எந்த நேரமும் பிரம்மம் இடையறாது கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நாம் பெறுவது நாம் கேட்பது.
பிரம்மம் கொடுக்கத் தயாராக இருக்கிறது, நாம் கேட்பதில்லை.
கேட்கும் பொழுது எதைக் கேட்பது என அறிவதில்லை. - சரணாகதி எளியது, பெரியது.
பெரியது மிக எளியது.
எளியது பெரியது என்பது பிரம்ம ஞானம். - நம்பிக்கை உடனே பலிக்கும்.
க்ஷணத்தில் பலிக்காதது அருளல்ல.
*****
- Login to post comments