Skip to Content

12. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னையே சரணம்!

எங்கள் பிரச்சனையைப் பற்றிக் கூறினோம். அப்பொழுது மதர்ஸ் சர்வீஸ் சொசைட்டியை சார்ந்த அன்பர், மதர் எங்களுக்கு காசோலை கொடுப்பதாக நினைத்து பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். இந்நேரத்தில் தஞ்சை தியான மைய பொறுப்பாளர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திண்டுக்கல் தியான மைய பொறுப்பாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

என் தாயார் மைய ஆலோசனைப்படி மனமுருகி கதறி அன்னையிடம், "தவறு என்னுடையது மட்டுமே'' எனப் பிரார்த்தனை செய்தார்கள். அதன் பிறகு மனம் அமைதி அடைந்ததாகவும், புல்லாங் குழலோசை கேட்டதாகவும் கூறினார்கள். என் தாயாரும், தங்கையும் மற்றும் தம்பியும் தரிசன நாட்களுக்கு மலர்கள் திருச்சியிலிருந்து வாங்கி வந்து தஞ்சை தியான மையத்திற்குச் சேவை செய்வார்கள். திருமதி. காஞ்சனா பாலு அவர்கள் தாயாரிடம், "சொத்தை எங்கு தொலைத்தாயோ அங்கு சென்று தேடு'' என்று கூறினார். என் தாயாரின் பெரிய அண்ணன் பையன் உதவியால் 1 மனை வாங்கினார்கள். 2007ஆம் ஆண்டு Februaryஇல் என் தந்தையாரின் முழு பென்சனும் மற்றும் 100% settlementஉம் அன்னையின் அருளால் கிடைத்தது.

எனக்கு எங்கள் குடும்பத்தை ஏமாற்றிய மூத்த சகோதரர் மீது அளவு கடந்த கோபம் இருந்தது. மாம்பலத் தியான மையத்தின் சொற்பொழிவைக் கேட்டு, ஏமாற்றிய மூத்த சகோதரர் மீது இருந்த கோபத்தை மாற்றினேன். அன்னையின் கருணையால் அவரிடம் கொடுத்திருந்த 5 பவுன் நகை திரும்ப கிடைத்தது. அன்னைக்கும் பகவானுக்கும் இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இளைய தம்பி அன்னையின் அளப்பற்ற சக்தியால் உறவினரிடம் வாங்கிய கடனை அடைத்து அன்னை அறையுடன் கூடிய தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கட்டிடம் கட்டி அதற்கு "அன்னை இல்லம்'' என்று பெயரிட்டார். அந்நேரத்தில், மூத்த சகோதரர் ரூ.4 இலட்சத்தை இளையவரிடம் கொடுத்து மீதியைச் சிறிது காலத்தில் தருவதாக கூறினார். மூத்த சகோதரனை மாற்றிய அன்னைக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

என் தாயார் எல்லா தரிசன நாட்களுக்கும் தஞ்சை தியான மையத்திற்குச் சென்று விடுவார்கள். அங்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் அழைப்பில் கலந்து கொள்வார்கள். அப்பொழுது அன்னையின் சந்தோஷத்தை என் தாயார் அனுபவிப்பார்கள் என்று கூறினார்கள். மாம்பலம் தியான மையத்தைச் சென்னை வரும் பொழுதெல்லாம் தவறாது தரிசனம் செய்வார்கள்.

திரு. அசோகன் அண்ணா கொடுத்த Daily Prayerஐ மாம்பலத் தியான மையத்தில் பெற்று படித்து விட்டு வீட்டிற்கு வந்த பொழுது தங்கையிடமிருந்து போன் வந்தது. மனைகள் திருச்சியில் இருப்பதாகவும் வந்து பார்த்து விட்டுச் செல்லுமாறும் பிடித்தால் வாங்கலாம் என்று கூறினார்கள். மூவரும் மனையை பார்வையிடச் சென்றோம். அங்குள்ள பணியாளரிடம், பிடித்தது என்றும் உடனே அட்வான்ஸ் தொகையைக் கொடுத்து புக் செய்ய சொன்னார்கள். சென்னையிலிருந்து வரும் பொழுது பணம் ஒன்றும் எடுத்து வரவில்லை. இந்நேரத்தில் இளைய சகோதரரும் சகோதரியும் 1 லட்சத்து இருபதாயிரம் ரூபாயை 1 மணி நேரத்தில் தயார் செய்து அட்வான்ஸை கட்டிவிட்டனர். அவர்களின் நல்லெண்ணத்தால் என் தங்கைக்கும் 1 மனையை எங்கள் மனையருகில் வாங்கிக் கொடுத்தார்கள். என் தம்பிக்கும் தங்கைக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

-- T. தமிழ்செல்வி, சென்னை.

********



book | by Dr. Radut