03. சாவித்ரி
சாவித்ரி
Page 159: She made a thinking body from chemic cells
செல்கள் சேர்ந்து சிந்திக்கும் உடலை எழுப்பின
- தெய்வ சக்தியினின்று ஒரு ஜீவனை உருவாக்கினர்
- இல்லாததை எட்ட, நெருப்பாகத் துடித்தாள்
- எட்டாத உயரத்தின் இல்லாத இலக்கை அவள் கனவு கண்டாள்
- பிரம்மம் பிரம்மாண்டமாய்க் கீழே பாய் விரித்தது
- வாயில் திறந்து, மேலுலகைக் காட்டியது
- பூவுலகில் வண்ண நிழல் வளையமிட்டது
- அழியாத பொருட்கள் அழியும் அலைகளாய் நகர்ந்தன
- சொர்க்கம் மின்னலாக சில சமயம் தெறித்தது
- நெஞ்சையும், உடலையும் பிரகாசமான ஆத்மா கதிராகத் தொட்டது
- இலட்சிய ஜோதியின் பிரதிபலிப்பு எட்டித் தொட்டது
- மனிதனுடைய கனவுலக ஜீவன்கள் அவை
- மெல்லிய பிரியம் மனிதனில் நிலைக்க முடியாதது
- தேவதைகள் பறக்க அகந்தையெனும் விட்டிற்பூச்சி
- லேசான கவர்ச்சியின் தற்காலிக வருகை
- காலம் விட்ட சிறு மூச்சு கணத்தில் அழித்தது
- மரணத்தை மறந்த சந்தோஷம்
- அபூர்வ விருந்தினராக வந்து போனது
- ஒரு மணி நேரம் அனைத்தையும் அற்புதமாக்கினர்
- நம்பிக்கை மங்கி நடைமுறை காரியமாகி
- தழலென எழும் வேகம் சாம்பலாகத் தணியும்
- சிறு கனல் பூமாதேவியின் பொக்கிஷத்தைப் பொருத்தினாள்
- பொருட்டற்ற சிறிய ஜந்து
- தெரியாத சக்தி தெளிவுபடுத்த வந்தது
- சிறுமண்ணில் அவதியுறும் அர்த்தமற்ற மனிதன்
- ஆண்டு அனுபவித்து, வாடி இறந்து நீடிக்க முயன்று
- உடலுடன் அழியாத ஆத்மா, உயிருடனும் மறையாதது
- வெளிவராததின் நிழலாக அங்கு நின்றது
- புவியை உடைமையாக அது உரிமை கொண்டாடவில்லை
- இயற்கையின் நீண்ட, மெதுவான பாட்டை ஏற்று
- தன் அஞ்ஞானத்தின் வேலையைத் தானே கண்டறிந்து
- காண முடியாமல், உணர முடியாமல் பெரும் சாட்சி நின்றது
- இங்கு நிற்கும் பெருமையைக் காட்டுவது இல்லென
- புதிரான உலகையாளும் விவேகம்
- வாழ்வின் குரலைக் கேட்கும் மௌனம்
********
ஸ்ரீ அரவிந்த சுடர் மனம் நிறை மலர்ச்சி அகம் அகந்தையால் நிறைவது. நினைவு மௌனமாவது ஆன்மீக மலர்ச்சி. இனிமை குளிர்ந்து நன்றியால் புல்லரிப்பது சைத்திய புருஷன் மனதில் துளிர்ப்பது. |
******
- Login to post comments