Skip to Content

அன்பர் கடிதம்

கருணை வடிவான அன்னை அவர்களுக்கு, எங்களின் அனேக கோடி நமஸ்காரங்கள்.

அன்னையின் அருளால்:

1. டெல்லியிலிருந்து என் மகள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டோம். நாங்கள் தொடர்ந்து தீவிரமாக பிரார்த்தித்துக் கொண்டு வருகிறோம். இதனால் விரைவில் பூரண ஆரோக்யம் அடைய அன்னையின் அருளாசி வேண்டுகிறோம்.

2. அன்னையின் காணிக்கையை அதிகமாக்கும்போது அன்னை பல மடங்கு வசதிகளைத் தருகிறார்கள் என நீங்கள் அவ்வப்பொழுது எழுதுவது எங்கள் வாழ்விலும் நடந்துள்ளது. என் மகன் மாதந்தோறும் அனுப்பும் காணிக்கையை ரூ.100/--ருந்து ரூ.200-க்கும், ஜனவரி 2000த்திலிருந்து பிரமோஷன் கிடைத்த பிறகு ரூ.500/-மாக அதிகரித்துள்ளான். கடந்த 1.8.2000-த்திலிருந்து வெளிநாட்டு வங்கியிலும் வேலையில் சேர்ந்துள்ளான். இந்த வங்கியே மும்பையில் மிகவும் முக்கியமான பகுதியில் எல்லா வசதிகளுடன் பெரிய வீடு கொடுத்துள்ளது.

3. என் மகனின் இரட்டைக் குழந்தைகளுக்கும் மிகவும் நல்ல பள்ளிக்கூடம், வீட்டிற்கு எதிரிலேயே கிடைத்துள்ளது. நாங்கள் இந்தப் பகுதிக்கு வந்தபிறகு குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க இரண்டு, மூன்று பள்ளிக்கூடங்கள் சென்று பார்த்தோம், விசாரித்தோம். ஒரு பள்ளிக்கூடத்தில் 2001 அட்மிஷனுக்கும் (registration) பதிவு செய்துள்ளோம் என்றார்கள். இருந்தாலும் உடனடியாக என்ன செய்வது என்று நாங்கள் கவலைப்பட்டோம். அப்பொழுதுதான் வீட்டிற்கு எதிரிலேயே இருக்கும் பள்ளிப் பிரின்சிபாலைச் சந்திக்கலாம் என்று தீர்மானித்தோம். நாங்கள் பள்ளிக்குச் சென்ற நேரம் வேறு இரு பெற்றோர்கள் முதல்வரைப் பார்க்கவே முடியவில்லை என்றும், சந்திப்புக்குத் (interview) தேதி கொடுத்தும் சந்திக்கவே முடியவில்லை என்றும் மனம் வருந்திப் பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் அவ்வப்பொழுது எழுதுவதுபோல், நாங்கள் ஒரு விநாடி ஸ்ரீ அன்னையைத் தியானித்து, எங்களுக்கு முன் முதல்வரிடம் செல்லுமாறு வேண்டினோம். அப்பொழுதுதான் முதல்வர் எங்களை அழைத்தார். ஒரு குழந்தைக்கு உடனேயே அட்மிஷன் தருவதாகக் கூறினார். ஆனால் எங்களுக்கோ இருவருக்கும் ஒரே ஸ்கூலில் கிடைத்தால்தான் நன்மையாக இருக்கும் என்று வேண்டிக் கேட்டோம். உடனேயே இரண்டு தினங்களுக்குப் பிறகு மறுபடியும் டெலிபோனில் தொடர்பு கொள்ளுமாறு கூறினார். திரும்பவும் அன்னையை உள்மனத்தில் தியானித்துக்கொண்டோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை, இரு குழந்தைகளுக்கும் அதே பள்ளியில், அட்மிஷன் கிடைத்துவிட்டது. வீட்டுக்கு எதிரிலேயே, நல்ல பள்ளிக்கூடம், இந்த எதிர்பாராத வசதி அன்னையின் அருளைத் தவிர வேறு எதனால் முடியும்?

4. என் வலது கைக் கட்டைவிரலில் சில மாதங்களாக உள்ள வலிக்கு டாக்டர் ஆப்ரேஷன்தான் தீர்வு என்கிறார். ஆனால் அறுவைசிகிச்சை இன்றிக் குணம் அடைய அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டு வருகிறேன்.

5. டெல்லியில் என் மருமகன் தற்சமயம் உள்ள பணியில், அவரைக் குறிப்பிட்ட காலத்தில் confirm செய்யாமல், இழுக்கடித்து வந்தார்கள். அவரும் பாண்டி சென்று சமாதி தரிசனம் செய்துவிட்டு வந்து, confirm செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார். இந்த மாதிரி இடையூறு இல்லாமல் பதவியில் மன நிம்மதியடைய வேண்டும். அவர் கல்கத்தாவில் ஒரு நெருங்கிய நண்பர் மூலம் ஒரு வீடு வாங்க முயற்சி செய்து வருகிறார். இவைகள் அன்னையின் அருளால் இனிதே நடக்க வேண்டும்.

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

சரணாகதி பெருகி வரும் சுதந்திர உணர்வைத் தரும்.

Comments

அன்பர் கடிதம்para no.5, line

அன்பர் கடிதம்

para no.5, line no.2 - காலத்தில்confirm - காலத்தில் confirm

லைப் டிவைன் - கருத்து

After the translation of tamil sub-heading extra space is there.

para no.4, line no.1 - அத்தியாயங்கüல் - அத்தியாயங்களில்

para no.4, line no.5 - அத்தியாயங்கüல் - அத்தியாயங்களில்

ஆசைகளைப் பூர்த்திசெய்வது அருளின் முதல்நிலை. ஆசைகளை நிறைவேற்றாது ஆன்மாவை வளர்ப்பது அருளின் இரண்டாம் நிலை.

para no.2 - after line no.8 - extra space is there.

para no.2, line no.16 - சொல்அ தற்குத் - சொல்லி அதற்குத்

from ஆன்மா பக்குவப்பட்டு etc. etc. to  இறைவன் சோதனை செய்கிறார் என்பார்கள் - separate paragraph.

para no.2, line no.21 - நிலை யிருந்து - நிலையிலிருந்து

para no.3, line no.8 - சிறைக் கனுப்பினாய் - சிறைக்கனுப்பினாய்

para no.4 - after line no.4 - extra space is there.

para no.5 - after line 24 - extra space is there.

para no.7-line no.11-பயிற்றுவிப்பதுபோலவும்-பயிற்றுவிப்பது

போலவும் - after line no.11 - extra space is there.

 



book | by Dr. Radut