Skip to Content

07.லைப் டிவைன் - கருத்து

 “லைப் டிவைன் -கருத்து”

P. 14.  சக்தியின் பின் உறுதி Will உண்டு எனில்

           அது யாருடைய உறுதி

           அது மனிதனுடைய உறுதி அன்று,

           கடவுளுடைய உறுதியாகும்.

       ஒருவர் வீடு கட்டினால் அது அவர் பணம் என அறிகிறோம். 20,000 ரூபாய் சம்பளமுள்ளவர் குடும்பத்துடன் உலகைச் சுற்றிவரப் புறப்பட்டால் அது அவர் பணமாக இருக்க முடியாது, கம்பெனிப் பணமாக இருக்கலாம் எனக் கருதுகிறோம். நம்மூரில் பெரிய பாலம் கட்டினால், ஏது பணம் என எவரும் கேட்பதில்லை. ஆனால் இதெல்லாம் வரிப்பணம் என நினைப்பவருக்கு நம்மூர் வரிப் பணத்தில் இதெல்லாம் கட்ட முடியாது எனப் புரியும். வரிப்பணம் என்பது உண்மைதான். ஏக்கருக்கு 60ரூபாய் வாய்தா கட்டினால் நம்மூரில் உள்ள 1000 ஏக்கரிலும் 60,000 தான் வரும். பாலம் கட்ட பல கோடி வேண்டும். எனவே இப்பணம்,

ஓர் ஊர் பணம் இல்லை, இது சர்க்கார் பணம்

எனப் புரிகிறது.

       சக்தியை Will உறுதி செய்கிறது. சக்தி உலகத்தை சிருஷ்டித்தது என்றால், தனி மனித உறுதியோ, மனித குலத்தின் உறுதியோ சூரிய மண்டலத்தையும், உலகத்தையும் சிருஷ்டிக்க முடியாது. இதற்குரிய உறுதி அதைவிடப் பெரியது.

அது ஆண்டவனின் Will உறுதியாகும்

என விளங்கும்.

       சக்தி பலனாக மாற உறுதி வேண்டும் என்பது சட்டம்.

       தமிழ்நாட்டில் பணக்காரர்கள் எல்லா ஊர்களிலும் உண்டு. பொதுவாகப் பணக்காரன் என்றால் தியேட்டர், பஸ், ஹோட்டல் முதலாளியாக இருப்பான். கடந்த 10 வருஷமாக நிலைமை மாறுகிறது. சிறு தொழில்கள் எல்லா ஊர்களிலும் ஏற்படுகின்றன. அவற்றுள் 60%, 70%க்கு மூடி விடுகின்றனர். ஏன்?

       தொழிலை ஆரம்பிக்கும் திறனிருந்தாலும், நடத்திப் பலன் பெறத் தேவையான திறமை - will power -இல்லை.

       உள்ளூரில் கல்லூரி இருந்தாலும், படிக்க வசதியும், புத்திசாலித்தனமிருந்தாலும் படிப்பைத் தொடர்ந்து முடிக்கும் திறன் அனைவருக்கும் இல்லை.

       1875இல் அமெரிக்காவில் Ph.d., பட்டம் பெற்றவர் ஒருவரே. இன்று ஆண்டுக்கு 36,000 பேர் அதைப் பெறுகின்றனர். பணமிருக்கலாம், வசதியிருக்கலாம், காரியத்தை முடிக்கும் திறனில்லாவிட்டால் 36,000 பட்டம், 1 பட்டத்துடன் நின்றுவிடும்.

       உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயங்குகிறது. நதிகளும், மலைகளும், சர்க்காரும், கோடிக்கணக்கான மனிதர்களும், நகரங்களும், உள்ளன எனில்,

-  இவை ஒரு மனிதனால் செய்யப்பட்டதில்லை.

- மனித குலம் முழுவதும் சேர்ந்து சூரிய மண்டலத்தை ஏற்படுத்த முடியாது.

- இதை சிருஷ்டித்தது ஆண்டவன் என முடிவு செய்கிறோம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஓடும் எண்ணம் ஒன்று போதும் அருளை விலக்க. மனதில் ஆயிரம் எண்ணமிருந்தால், திகைத்து நிற்பதே அருளைப் பெறும் வழி.

 எண்ணத்தால் நிறையும் மனம் திகைத்து அருளைப் பெறும்.

 

 



book | by Dr. Radut