13.குறையால் ஏற்படும் பெருநிறைவு
குறையால் ஏற்படும் பெருநிறைவு
குறை நிறையாக மாறுவது திருவுருமாற்றம். எப்படி அது வரும்?
அன்னை குறையை மீறிச் செயல்படுவார். அடுத்த கட்டத்தில் குறையை நிறையாக்குவார். அதற்கும் அடுத்த கட்டம் உண்டு. குறை எவ்வளவு பெரியதானதோ, அன்னை அதை அவ்வளவு பெரிய நிறையாக்குவார்.
இதற்கு உதாரணம் உண்டா? இதன் தத்துவத்தை விளக்கலாமா?
இன்று எழும் பெரிய புள்ளிகள் எல்லாம், மிகத் தாழ்ந்தவர் என்பதை அரசியலிலும், பணத்திலும் காண்கிறோம். காலம் மாறுவதால், பெரும்குறை வாழ்வில் பெருநிறைவாகிறது என்பது நம் தொடர்ந்த அனுபவம். ஜீவியம் (consciousness) அன்னையால் மாறுவதால், காலத்தைவிடப் பெரியதை அன்னை சாதிக்கிறார்.
இப்படி அன்னையைப் புரிந்துகொள்வது, அன்னையைப் புரிவதாகும்.
தத்துவம் ஏதேனும் உண்டா?
வாழ்வுஎன்பது முழுமை. நிறைவு ஒருபகுதி. குறை அடுத்த பகுதி. நிறைவு முழுநிறைவு பெற்றாலும், அதன் ஆட்சி ஒருபகுதியுடன் முடிந்துவிடும். அது பகுதியின் நிறைவு. குறை அடுத்த பகுதி. குறையும் நிறைவும் சேர்ந்தது முழுமை. குறை நிறையாக மாறுவது முழு நிறைவாகும். அம்மாற்றம் திருவுருமாற்றம் எனப்படும்.
பெரிய குறை பெரிய நிறைவாக மாறச் சரணாகதி பெரியதாக இருக்கவேண்டும்.
சரணாகதி திருவுருமாற்றத்தால் பெரிய குறையைப் பெரிய நிறைவாக்குவது அன்னையின் சக்தி.
பெரிய குறை, பெரிய நிறைவு.
****
- Login to post comments