Skip to Content

09.அஜெண்டா

"Agenda"

To see sincere people is not tiring.

உண்மையானவர்களைப் பார்ப்பது களைப்பு தருவதில்லை.

. அன்னையைக் காண்பதை தரிசனம்என்கிறோம்.

. காலையில், பால்கனியில் தரிசனம் தருவதைத் தவிர அன்னையை அந்த நாட்களில் சாதகர்கள் மாலையிலும் மைதானத்தில் காண்பதுண்டு.

. புதன், சனியன்று மைதானத்தில் குழந்தைகளுடன் பேசும் பழக்கம் அன்னைக்குண்டு. அப்பொழுது சாதகர்கள் அன்னையைத் தரிசிப்பார்கள்.

. சாதகர்கள் பிறந்த நாளன்று அன்னை அவர்களைத் தம் அறையில் சந்தித்துத் தரிசனம் தருவார்கள்.

. அதுதவிர முக்கியஸ்தர்கள் என்று பலரை அன்னை தினமும் காண்பது உண்டு.

அவர்கள் பல்வேறு வகைகளில் ஆசிரமத்திற்கு உதவும் ஆபீசர்கள், அன்பர்கள், ஆகியோர்.

. அன்னை ஒருவரைச் சந்தித்தால், அன்னைக்கும் மற்றவர்க்கும் energy level அதிகமாக வித்தியாசப்படுவதால், அன்னை energyயை இழந்து களைத்துவிடுவார். அன்பர்கள் அன்னையை அறியாதவர் வீடுகட்குப்போய் வந்தால் உடல் களைத்துப் போவதைக் காணலாம். அன்னையைத் தரிசிக்கும் அன்பருக்குப் புதிய தெம்பு வருகிறது. அதேபோல் அன்னை தெம்பை இழந்துவிடுகிறார். ஒரு நாளில் சுமார் 100 பேர்முதல் 200 பேர் வரைக்கும் அன்னை தரிசனம் தருவதுண்டு. அப்பொழுதெல்லாம் அன்னை அதுபோல் சிரமப்படுவார்.

. அன்பர் உடலில் வியாதியிருந்தால், அது அன்னைக்கு வந்துவிடும்.

. தரிசனத்திற்கு முன்கூட்டி அனுமதி பெறவேண்டும் என்று இக்காரணத்தால் அன்னை ஏற்பாடு செய்தார். முதல் தேதியன்று அன்னையிடம் அனுமதி கேட்கும் கார்டுகள் பலர்மூலம் வரும். அம்மாதம் யார், யாரைத் தாம் அனுமதிக்கிறாரோ, அவர் கார்டில் தேதியும், நேரமும் குறித்து அன்னை அனுப்புவார். ஒரு மார்ச் மாதம் முதல் தேதி 10 கார்டுகள் அப்படி அன்னைக்குப் போயிற்று. அன்னை கார்ட் கொண்டு வந்தவர் கையிலிருக்கும்பொழுதே அவற்றைத் தள்ளிக் கொண்டேவந்து 25ஆம் தேதி கார்டை எடுத்து அனுமதி தந்தார். அந்த அன்பர் அன்னையை முதல் முறையாகத் தரிசிக்கப் போகிறார். முதல் தேதிக்கு முன் 3 நாட்கள் அவர் இடைவிடாது "மதர்"என்று அழைத்துக்கொண்டிருந்தார். அது அன்னைக்குக் கேட்டிருக்கிறது.

. அன்பர் எவரானாலும் sincerity உண்மையானவரானால், அவருக்குத் தரிசனம் தருவது அன்னைக்குக் களைப்புத் தாராது என்கிறார்.

.Sincerity ஆன்மீகத் தெம்பு தருவது.

. Sincerity என்பது உண்மை. அன்னைக்கு உண்மையாக இருப்பதை நாம் Sincerity என்கிறோம்.

. சமூகத்தில் உயர்ந்தவரானாலும், அன்னைமீது நம்பிக்கையற்றவரை அன்னை சந்தித்தால், அவருடல் துவண்டு விடும் என்பது அன்னை அன்றாடம் அனுபவித்தது.

****  

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு மனிதனோ, ஒரு விஷயமோ பலன் தரவேண்டுமானாலும், ஆன்மீக ஆசி வழங்க வேண்டுமானாலும் அதற்குரிய போற்றும் மனநிலை அவரிடமோ, அப்பொருளிடமோ இருக்க வேண்டும்.

போற்றிப் பாராட்டினால் பலன் தரும்.


 


 



book | by Dr. Radut