Skip to Content

11.சூட்சுமச் சூழல்

சூட்சுமச் சூழல்

குடும்ப வக்கீலைப் பார்த்து 12 ஆண்டுகளாயின. ஒரு சிறு விஷயமாக அவரை ஒருவர் சந்தித்தார். இரண்டு நாள் கழித்து அவர் அண்ணன், "நான் வக்கீலைப் பார்த்து நெடுநாளாகிறது. நேற்றுக் கனவில் வந்தார்'' எனத் தம்பியிடம் கூறினார். தம்பி தாம் வக்கீலைப் பார்த்துவந்ததைக் கூறவே தொடர்பு அண்ணனுக்குப் புரிந்தது. தம்பி நேரடியாகப் பார்த்தவர், அண்ணன் கனவில் சூட்சுமமாக வந்திருக்கிறார். ஓர் அன்பர் தம் வீட்டு அறையொன்றில் நுழைந்தபொழுது நாற்காலியில் அன்னையின் உருவம் சிறியதாகத் தெரிந்தது.

சாஷ்ட்டாங்கமாக நமஸ்காரம் செய்து, யோசனையை மேற்கொண்டு, பகவான் புத்தகங்கள் 10 அந்த நாற்காலியில் 1 வாரமிருந்தது, சூட்சுமமாக அன்னை உருவமாக அவருக்குத் தெரிந்துள்ளது. போட்டோவில் அன்னை அசைவதும், கனவில் அன்னை வருவதும் பலரும் அறிந்தது.

-தகப்பனார் அன்னை பக்தர். மகன் நமஸ்காரம் செய்யும்பொழுது தகப்பனார்கால் அன்னை பாதமாகத் தெரிந்தது.

-அன்னைபடம் உள்ள இடங்களில் ஊதுவத்தி கொளுத்தா விட்டாலும், ஊதுவத்தி மணம் எழும்.

பக்தர்கள் வீட்டில் அன்னைச் சூழலில் எப்பொழுதும் இருக்கிறார். நாம் பாராமுகமாக இருக்கிறோம். மனத்தை 1 வாரம் அல்லது 1 மாத காலத்திற்கு மெதுவாகத் தயார் செய்துகொள்ள முடிந்தால், அவர்கட்கு ஒரு யோசனை சொல்லலாம். இடைவிடாத நினைவுக்கு ½மணி, ஒரு மணி எனத் தயார் செய்து 1 நாள், 24 மணி நேரம் இடைவிடாமல் அன்னையை ஒருவரால் நினைக்க முடியுமானால், அவருக்கு வீட்டில் அன்னையிருப்பது தெரியும். அந்த ஒரு நாளில்,

-பகவான் புத்தகத்தைப் பிரித்தால் பகவான் உருவம் தெரியும்.

-அன்னைபடம், புத்தகம், பிளஸிங்பாக்கட் உள்ள இடங்களில் வெள்ளொளி அல்லது திருவுருவம் தெரியும்.

-நாம் எடுக்கப்போகும் பொருள்கள்மீது அன்னையின்கை தெரியும்.

-அதேபோல் கண், மூக்குநுனி, பாதம் பல இடங்களில் தெரியும்.அந்த ஒரு நாளில் அன்னை நம் வீட்டில் சுத்தம் அதிகமாக உள்ள இடங்களிலெல்லாம் இருப்பதைக் காட்டுவார். அது அன்னை தரிசனம் நிதர்சனம்என நிரூபிக்கும். யாரிடம் பேசினாலும் அவர்கள் புருவ மத்தியில், நெஞ்சில் அன்னையின்உருவமோ, ஒளியோ தெரியும்.

*******


 



book | by Dr. Radut