03.சாவித்ரி
"சாவித்ரி"
P.50 The earth is a brute mechanic accident.
பூவுலகம் முரட்டுத்தனத்தின் அசந்தர்ப்பம்.
- வாழ்வு மரணமெனும் வலையில் நாம் தற்செயலாய் பெற்ற வரம்.
- யாம் பெற்ற பெரிய ஞானம் சந்தேகத்தின் யூகம்.
- முடிவான சாதனை மூலத்திற்கு வகுத்த வழி.
- மூலத்தின் முடிவு ஊனக்கண்ணுக்கு எட்டாதது.
- தவறி நடந்தது; தவிர்க்கக்கூடிய தலைவிதி.
- அறியாமை மூலம் தெரியாததை நாடுகிறோம்.
- காலத்தின் துளியைச் சூழ்ந்துள்ள சூழல்.
- பதிலற்ற கேள்வியின் ஒளியற்ற நிழல்.
- இருண்ட ஜடத்தின் சுவடற்ற புதிர்.
- விதியின் கதிக்குப் பின்னால் நிற்கும் விவரமற்ற தெளிவு.
- இருளின் கடுமையில் எழும் ஆர்வம்.
- அழியும் உடலின்வித்து, அறியாமையின் அரைகுறை விளக்கம்.
- விழித்தெழும் கனலின் தனித்துறையும் நாக்கு.
- அழியாத ஜோதியை நாடும் தன்னையிழந்த எழுச்சி.
- தன் குரலின் எதிரொலியே தான் பெற்ற பேறு.
- மருண்ட இதயத்தின் மிரண்ட குரல்.
- ஏனென அறியாத இதயத்தின் இருண்ட இனிமை.
- காரணமற்ற கருமையின் கொடுமை.
- வாழ்வின் புதிருக்கு ஆண்டவன் அளித்த உத்தரவு.
- காலத்தில் பிறந்த அமரனின் புதிர்.
- பாம்பென எழுந்த யுகங்களின் பாதை.
- கறுத்து, சுருண்ட இருளின்பாதை.
- காலத்தின் துளிகளில் உழலும் பூமாதேவி.
- உள்ளுறை ஜீவனை உணரும் நம்பிக்கை.
- செவிக்கெட்டாத சொல்லின் ஒலி.
- கடுமைப்படுத்தும் விதியின்கையைக் காண முடியவில்லை.
- சூன்யத்துள் செல்லும் மயங்கிய நெறி.
- விளக்கமற்ற ஆழத்தைவிட்டு விரைந்தெழும் முயற்சி.
- தடுமாறும் வாழ்வின் தத்தளிக்கும் இன்பம்.
- சுட்டிக்காட்டும் எட்டாத அறிவு.
- அசைந்தெழுந்து நெளியும் சிருஷ்டி.
- ஒளியை மிஞ்சிய எண்ணத்தின் சொல்.
- ஆனந்தத்தை நாடும் பதட்டமான சந்தோஷம்.
- அழியும்அழகு, பணியும் பக்குவம்.
- கவலையின் எச்சரிக்கை காலைப் பின்னுகிறது.
*******
- Login to post comments
Comments
03.சாவித்ரி Point 25 -