05.அஜெண்டா
"Agenda"
The world of Delight is waiting, not for us to be ready.
But for us to accept.
ஆனந்த லோகம் நமக்காகக் காத்திருக்கிறது,
நாம் தயாராக வேண்டியதில்லை,
ஏற்றுக்கொண்டால் போதும்.
- தன்னைத் தன்னுள் ஒளித்து மறந்த பிரம்மம், மறந்ததை நினைவுபடுத்துவது அருள். நினைவுபடுத்தாமல் மறந்தது வெளிவாராது.
- நினைவுபடுத்தி, வெளிவந்து, ஆனந்தம் அனுபவிப்பதையும் பிரம்மமே செய்வதில்லை.
- லீலைக்கு இடமளிக்க வேண்டியது அவசியம்.
- ஆசிரியர் மாணவனுக்குத் தரும் பயிற்சி, ஒர்க்ஷாப்பில் மெக்கானிக் புதுப்பையனுக்குத் தரும் பயிற்சி, டென்னீஸ்கோச் கொடுக்கும் பயிற்சி, பெரியவர்கள் குழந்தைக்குத் தரும் பயிற்சி, மேல்நாடுகள் இந்தியாவுக்குத் தரும் டெக்னாலஜி ஆகியவற்றுள் நாம் காண்பவை,
- கொடுப்பவர் கொடுக்காவிட்டால், பெறுபவருக்கு ஒன்றுமில்லை.
- கொடுப்பவரே பயிற்சியைக் கொடுப்பதற்குப் பதிலாக பலனையும் கொடுத்துவிட்டால், பெறுபவர் எதையும் நிரந்தரமாகப் பெறமுடியாது. அது பயிற்சியாக இருக்காது. பெறுபவர் கடைசிவரை கொடுப்பவரை எதிர்பார்க்க வேண்டும்.
- ஆசிரியர் மாணவனுக்குத் தரும் பயிற்சி, ஒர்க்ஷாப்பில் மெக்கானிக் புதுப்பையனுக்குத் தரும் பயிற்சி, டென்னீஸ்கோச் கொடுக்கும் பயிற்சி, பெரியவர்கள் குழந்தைக்குத் தரும் பயிற்சி, மேல்நாடுகள் இந்தியாவுக்குத் தரும் டெக்னாலஜி ஆகியவற்றுள் நாம் காண்பவை,
- ஆன்மீக லோகத்தில் மனிதன் மோட்சம் பெறக் கற்றுக்கொண்டான்.
- தான் பெற்ற மோட்சத்தைப் பிறருக்குக் கொடுக்க முடியாது. பிறருக்கு அது வழிகாட்டியாக இருக்கும்.
- T.V. கண்டுபிடித்தவர், கண்டுபிடித்தது பெரிய இரகஸ்யம். அதை நம்போன்ற ஒருவருக்குக் கொடுத்தால், அதைப் பெற நமக்குத் தகுதியில்லை. நாம் ஒரு தொழிலதிபராகி, பாக்டரி வைத்து, அதன்பின் T.V. டெக்னாலஜியைப் பெறவேண்டும்.
T.V. டெக்னாலஜியைப் பெறத் தகுதி வேண்டும்; நேரடியாகப் பெற முடியாது.
- அது T.V.யாக மார்க்கட்டில் விற்றால், நாம் எந்தத் தகுதியும் பெறாமல், T.V.யை வாங்கி, நேரடியாகப் பயன்படுத்தலாம்.
- அதை வாங்கும் தகுதியும், போட்டுப்பார்க்கும் தகுதியும் நாம் பெறவேண்டும்.
- மோட்சம் பெற்றவர், அடுத்தவருக்கு மோட்சம் தரமுடியாது; மோட்சம் பெறும் மார்க்கத்தைத் தரலாம். அவர் அதைப் பெற்று தவமிருந்து மோட்சம் பெறலாம்.
- மோட்சம் பகுதியான பிரம்மம் சமாதியில் பெறுவது. முழுமையான பிரம்மம் விழிப்பில் பெறுவது பூலோகச்சுவர்க்கம், ஆனந்த லோகம்.அந்த ஆனந்தலோகம் நமக்காகக் காத்திருக்கிறது. நாம் அதைப் பெற நம்மைத் தயார் செய்வதும் அவசியமில்லை; ஏற்றுக்கொண்டால் போதும். ஏற்றுக்கொள்ளும் தகுதி தேவை.
- இது இறைவன் வரும் தருணம் என உலகுக்கு அறிவிக்க வந்தவர் பகவான் ஸ்ரீ அரவிந்தர். அவரை ஏற்பது அதிர்ஷ்டம், அருள்.
*******
- Login to post comments
Comments
05.அஜெண்டா Please highlight