10.லைப் டிவைன் - கருத்து
லைப் டிவைன் - கருத்து
The spiritual being in us which is of the Supreme Existence can know the Supreme Reality. It is self-evident to it.
மனம் ஆத்மாவை அறியவல்லதன்று. ஜீவன் சத்தைச்
சேர்ந்தது என்பதால் அது சத்தியத்தை அறியும்.
. சிருஷ்டியின் ஆதி பிரம்மம்.
. சிருஷ்டியின் முதற்படி "சத்" எனப்படும்.
. "சத்" ஏற்பட்டவுடன் "அசத்" ஏற்படுகிறது.
. "சத்" என்பது சத்புருஷனாகிறது.
. சத்தியம் சத்புருஷனின் புறவெளிப்பாடு.
. சச்சிதானந்தம் என்பதே முடிவு என்ற ரிஷிகள், அதை "சத்" எனவும், "சித்"எனவும், "ஆனந்த"மெனவும் கண்டனர்.
. "சத்" முதற்கட்டம். "சித்" இரண்டாம் கட்டம். "ஆனந்தம்" மூன்றாம் கட்டம்.
. சச்சிதானந்தம் அகம் எனவும், சத்தியஜீவியம் புறம் எனவும் கூறினர்.
. சத்தியஜீவியம் மீண்டும் இரண்டாகப் பிரிகிறது.
. அது அகம், புறம் எனப்படும். காலத்தைக்கடந்த நிலை, காலம் எனவும் பிரிகிறது.
. காலம் இரண்டாகப் பிரியுமிடத்தில் மனம் உற்பத்தியாகிறது.
. மனம் காலத்திற்குட்பட்டது.
. நாம் என நாம் அறிவது சத்புருஷனுடைய சத்தியம்.
. நம்மை நாம் மனம் எனத் தவறாக அறிகிறோம்.
. மனத்தால் நம்மை அறிய முயல்வது பகுதி முழுமையை அறிய முயல்வதாகும்.
. நாம் என்ற முழுமை பிரம்மம்.
. பிரம்மம் என்ற முழுமையை மனம் என்ற பகுதி அறிய முடியாது. சத்தியம் அறிய முடியும்.
. மாணவன் ஆசிரியரை அறிவின் உறைவிடமாகக் கருதலாம். அது உண்மையன்று.
. ஆசிரியர் மொழி, கணிதம், விஞ்ஞானம், சரித்திரம், போன்ற பாடங்களைப் போதிக்கிறார்.
. பாடம் என்பது ஞானத்தின் ஒரு பகுதி. மொழி, கணிதம், விஞ்ஞானம்,சரித்திரம் சேர்ந்தது பாடம்.
. பாடத்தைக் கண்டது பெரிய ஆத்மா.
. ஐன்ஸ்டீன், வால்மீகி, பாஸ்கராச்சாரியார், ஸ்மித் போன்றவர்கள் பாடங்களைக் கண்டுபிடித்தனர்.
. பாடத்தை அறிந்தவர்கள் பேராசிரியர்கள். அவர்கள் பாடத்தைக் கண்டுபிடித்தவரில்லை. பாடத்தை அறிந்து போதிப்பவர்கள். அவர்களில் சிலர் பாடபுத்தகத்தை எழுதுகின்றனர். புத்தகத்தை எழுதுபவர் பாடத்தைக் கண்டுபிடிக்கவில்லை. எப்படி பாடத்தைப் போதிப்பதுஎன அறிந்தவர்.
. பாடபுத்தக ஆசிரியர் எழுதியதை நமக்கு - மாணவனுக்கு - போதிப்பவர் வகுப்பு ஆசிரியர்.
. வகுப்பு ஆசிரியருக்கும், பாடத்தின் ஆதிக்கும் வெகுதூரம். ஐன்ஸ்டீன் போன்றவர் பாடத்தை அறிவர். வகுப்பு ஆசிரியர் பாடத்தை அறிய முடியாது.
. மனம் வகுப்பு ஆசிரியரைப் போன்றது. ஐன்ஸ்டீன் போன்றவர் சத்தியம் போன்றவர்.
. மாணவன் வகுப்பு ஆசிரியரை முடிவாகக் கருதி, அவரால் பாடத்தின் ஆதியைக் காண முனைவதுபோல் மனம் சத்தியத்தை - பிரம்மத்தை - அறிய முயல்கிறது. அதனால் முடியாது.
. நாம் மனத்தைக்கடந்து சத்தியத்தை அடைந்து அதன்மூலம் பிரம்மத்தை அறிய முனைந்தால், அது பலிக்கும். ஏனெனில் சத்தியம் பிரம்மத்தை தானென உணரவல்லது.
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
அதிர்ஷ்டம் எல்லா நிலைகளுக்கும் உண்டு:
ஜடம், உணர்வு, மனம், ஆன்மீகம், சத்தியஜீவியம்.
- Login to post comments