6. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
36. கல் தேயும், தேயாது சொல்.
- ஞாபகம் பொய்க்கும்; சமர்ப்பணமான செயலை மனதால் மறக்க முடியாது.
37. பிறருக்கு முற்பகல் கேடு செய்தால்,
பிற்பகல் தனக்குக் கேடு வரும்.
- திருவுருமாற்றம் முற்பகல் கேட்டை, பிற்பகல் நன்மையாக்கும்.
38. ஈனுமோ வாழை இரு கால் குலை.
- கருமியும் அன்பரிடம் தாராளமாக நடந்துகொள்வான்.
39. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
- தேவை பெரியதாயினும் கறுப்புப் பணம் சேவைக்குதவாது.
40. கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?
- அன்பருக்கு உதவும் ஆத்மா உலகிலுண்டோ?
அன்பரல்லாதவரால் அன்பருக்கு உதவ முடியாது.
தொடரும்....
- Login to post comments