Skip to Content

8. ஆன்மா நிகழ்த்தும் அற்புதம்

ஆன்மா நிகழ்த்தும் அற்புதம்

N. அசோகன்

ஆண்டுக்கு ரூ.58 லட்சம் விற்பனை கொண்ட ஒரு கம்பெனியின் முதலாளி அவ்விற்பனையை மேலும் உயர்த்துவதற்குக் கடின முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தார். அவர் திறமைசாலி,மற்றும் உழைப்பாளியும்கூட. விற்பனையை அதிகரிக்க எந்த முறை உதவினாலும் அதைப் பின்பற்றத் தயாராக இருந்தார். அவருக்குத் தெரிந்தவர் ஒருவர் உள்ளுறையும் ஆன்மாவைச் செயல்பட வைத்தால்,அது விற்பனை உயர்வு என்ற அற்புதத்தை நிகழ்த்தும் என்று தெரிவித்தார். அத்தகைய அணுகுமுறையை அவர் அதுவரையில் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருந்தாலும் ஆன்மாவை எப்படி அழைப்பது என்று தெரிந்தால், அதையும் முயற்சி செய்து பார்ப்பதாகச் சொன்னார்.
ஆன்மாவை அழைப்பதில் முக்கிய அம்சம் என்னவென்றால் திட்டமிடும் நம் அறிவு மற்றும் உழைக்கும் நம்முடைய உடல் இவற்றை விட உள்ளுறையும் நம் ஆன்மா அதிகமாகச் சாதிக்கும் என்று திடமாக நம்ப வேண்டும். இவ்வணுகுமுறையை மேற்கொள்பவர்கள் ஒரு வியாபார ஸ்தாபனத்தின் எல்லாப் பிரிவுகட்கும் பொருந்தும் வகையில் சீர்திருத்தத் திட்டங்கள் தீட்டினார்கள். இத்திட்டங்களை மேற்கண்ட நிறுவனத்தின் உரிமையாளரிடம் விவரமாகச் சொன்னார்கள். இவ்வணுகுமுறையில் அவருக்கு நம்பிக்கை வந்ததால், அவருக்குச் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் கடைப்பிடிப்பது என்று தீர்மானித்தார்.விற்பனையை ரூ.580 லட்சமாக உயர்த்த முடியுமா என்றுகூட அவருக்கு ஆசை வந்தது. ஆனால் அந்த அளவிற்குப் போவது பேராசையாக இருக்குமோ என்று தயங்கினார். ஆகவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் விற்பனையை இரண்டு மடங்கு ஆக்கினால் போதும் என்ற முடிவுக்கு வந்தார். இந்த இரட்டிப்பை ஒன்றரை ஆண்டு அல்லது ஓர் ஆண்டிலேயே பார்த்துவிட்டால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ஒரு பக்கம் நினைத்தார்
1998ஆம் ஆண்டு இறுதியில் இப்புதிய முயற்சியைத் தன்னுடைய கம்பெனியில் தொடங்கினார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே பொங்கல் சமயத்தில் ரூ.90 லட்சத்திற்கு அவருக்கு ஓர் ஆர்டர் கிடைத்தது. தொடர்ந்து 20 மாதங்களுக்கு ஆர்டர்கள் வந்தபடியிருந்தன. இந்த 20 மாத இறுதியில் கையிலிருந்த மொத்த ஆர்டர்களின் மதிப்பு ஒன்பது கோடியை எட்டியது. இப்பொழுது வந்துள்ள ஆர்டர்களுக்கு ஏற்றாற்போல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு வந்தது.
ஆன்மாவைப் பொருத்தவரை சிறிய கம்பெனி, பெரிய கம்பெனி என்ற வித்தியாசம் அதற்கில்லை. இம்மாதிரியான ஆர்டர் பெருக்கத்தை ரூ.40 கோடி, ரூ.260 கோடி ஆண்டு விற்பனை உள்ள கம்பெனிகளிலும் பார்த்திருக்கிறோம். ஆன்மாவின் செயல்பாடு தொடரும் வரை வியாபார அபிவிருத்தி என்பது நிற்பது இல்லை.
மேற்கண்ட உண்மை, விற்பனைக்கு எந்த அளவு பொருந்துமோ அதே அளவிற்கு உடல்நலம், படிப்பு, அரசியல் என்று எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். ஆன்மா என்பது அறிவையும், உடம்பையும் விடச் சக்தி வாய்ந்தது. ஆன்மாவின் சக்தியைத் தொழில் வளத்திற்குப் பயன்படுத்துவதைப் போலக் கல்வித் துறையிலும் மற்றும் அரசியலிலும் தாராளமாகப் பயன்படுத்தலாம். மேற்கண்ட கம்பெனியில் ஆன்ம சக்தி செயல்பட ஆரம்பித்தவுடனேயே வருகின்ற ஆர்டரில் நூறு சதவிகிதம் பெருக்கம் தெரிந்தது. இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் ஆர்டரில் 15 மடங்கு அபிவிருத்தி தெரிந்தது. இம்மாதிரி தன்னுடைய ஆன்மாவின் சக்தியைத் தூண்டி எழுப்பக்கூடிய திறமை படைத்தவர்கள் தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலும் இப்பரிசோதனையைச் செய்து பார்க்கலாம். இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பதை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டத்தான் வியாபாரத் துறையில் அதனுடைய செயல்பாட்டை உதாரணமாகக் காட்டி, இக்கட்டுரையை எழுதியுள்ளேன். உதாரணத்தை வியாபாரத்திலிருந்து எடுத்திருந்தாலும் எத்துறையிலும் இத்தகைய அபிவிருத்தியை ஆன்மசக்தி உறுதியாகக் கொண்டுவர வல்லது என்பதை மீண்டும் வயுறுத்துகிறேன்.


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

ஸ்ரீ அரவிந்தர் நெப்போலியனாக இருந்தார்; அன்னை லிசபெத் மகாராணியாக இருந்தார் என்பதை அன்னை விவரிக்கின்றார். அவர்கள் தாங்கி வரும் சக்தி நெப்போலினில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இருந்தது; வாழ்நாள் முழுவதும் அல்ல என்கிறார் அன்னை. காதரீன், லூயி, லிசபெத் இவர்களில் ஒரு குறுகிய காலமே அன்னை சக்தியிருந்தது. சக்தி தன் காரியத்திற்கு உரியவரைத் தேர்ந்தெடுத்து, அவர் மூலம் வந்த வேலையைப் பூர்த்தி செய்து, விலகுகிறது. அந்தச் சக்தியுள்ள காலம், அவர்கள் வாழ்வில் பொற்காலமாகும்.
கருவியின் வாழ்வில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படுவதைச் சமூகக் கண்ணோட்டத்தினாலோ, மனத்தின் பார்வையாலோ நாம் கணிக்க முடியாது. பொதுவாக அவற்றிற்கு எதிராகவும் இருக்கும். பரிணாம வளர்ச்சிக்கு உதவும் காரியங்கள் அவை.

(e.g. Louis of France played such a role in the life of Louis XIV).

நெப்போலியன், லிசபெத்,லூயி போல் செயல்பட மனத்தால் சமூகத்தைக் கடக்க வேண்டும்.


 


 


 


 



book | by Dr. Radut