Skip to Content

13. பிரார்த்தனை பலிக்க வேண்டும்

 

தம்பி - மீண்டும் மனம் அதையே நாடுகிறது. நேற்று என் B.A. கிளாஸ்மேட் வந்தார். அவர் பிரச்சினையைக் கூறினார்.

அண்ணன் - அதுவே பெரிய உதாரணமாயிற்றே. 1 கோடி உபரி லாபம் சம்பாதித்தார்கள் அவருடைய நண்பர்கள். அதன்பின் ஒரே ஆட்டம் ஆடினார்கள். கடனாயிற்று, உன்னால்தான் கெட்டோம் என இவர் மீது திரும்பினார்கள்.

தம்பி - அதைக் கேட்கத்தான் வந்தார். நான் தெளிவாகக் கூறிவிட்டேன். உன் சிபார்சால் 1 கோடி சம்பாதித்து விட்டு, உனக்கு இன்னும் அவர்கள் மீது பாசம்.

இப்பொழுது நீ சிரமப்படுகிறாய். உனக்குக் கெடுதல் செய்த அவர்கள் எப்படியாவது கடனைத் தீர்த்து நல்லபடியாக இருக்கவேண்டும் என நீ நினைப்பதால் அவர்கள் கடையை மூடவில்லை. அது உனக்குத் தவறான எண்ணம். அது உள்ளவரை உனக்கு ஆபத்து. வந்த 5 பெரும் ஆபத்தும் அவர்களால்தான் என்று கூறினேன்.

கேட்டுக் கொண்டு போய்விட்டார். அவர் போனபின் நம் மாமா நினைவு வந்தது. இவர் விஷயம் தெளிவானது. கெட்ட எண்ணப் பையனுக்குச் செல்லம் கொடுக்கிறார். அது அவர் விஷயம். நம் பேச்சை அவர் கேட்கப்போவதில்லை. வயதில் பெரியவர். புத்திமதி சொல்ல முடியாது. ஆனாலும் அவரைப் போய்ப் பார்க்க நினைத்தேன். அவர் தவறு செய்ய ஆரம்பித்ததிலிருந்து அவரைப் போய்ப் பார்த்தால் நமக்குக் கெட்ட செய்தி வருகிறது எனத் தெரியும்.

நான் எப்படிப் பிறருக்கு சொல்லமுடியும்? அப்படித் தோன்றியவுடன் ஒரு புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன். தண்டனைக்குரியவரிடம் மனம் இதமாக இருப்பது ஆபத்தை விளைவிக்கும் என்றிருந்தது. அத்தோடு அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். சரி, பணத்தைப் பற்றிச் சொல்லுங்கள். என்வரைக்கும் கேட்டுக் கொள்கிறேன். பிறருக்குச் சொல்ல வேண்டும் என்பதை விட்டுவிடுகிறேன்.

அண்ணன் - 1945இல் மேற்கு ஐரோப்பா (பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹாலண்டு, போர்ச்சுகல், பெல்ஜியம்) தரைமட்டமாயிற்று. U.S.A.17 பில்லியன் டாலர் கொடுத்து அந்த நாடுகளைப் புதுப்பித்தார்கள். World Bank ஏற்பட்டதே அதற்காகத்தான். அந்த 17 பில்லியன் இன்று அவர்கள் கணக்குப்படி 100 பில்லியனாகும். (இன்று 1 பில்லியன் டாலர் 4000 கோடி ரூபாய். இன்று இந்தியாவிலுள்ள அத்தனை பாங்கு டெப்பாசிட்டும் சேர்ந்த தொகை) அமெரிக்கா அதைச் சாதித்தது. உலகம் இன்றுவரை அதை மட்டுமே அறியும்.

தம்பி -இது economics படித்தவர்கட்கெல்லாம் தெரியுமே!

அண்ணன் - அதில் ஓர் விசேஷம் உண்டு. உலகம் 100 பில்லியன் டாலரால் ஐரோப்பா புதுப்பிக்கப்பட்டது என இன்று வரை நம்பினாலும், மேலும் ஒரு 100 பில்லியன் பணம் கொசுறாக வந்ததை உலகம் அறியாது.

தம்பி - அது எப்படி அவ்வளவு பணம் வந்தது தெரியாமற் போகும்? கொசுறு என்றால் 100க்கு 1 அல்லது 1½ தான். நீங்கள் முதல் 100 ஆனால் கொசுறு 200 என்கிறீர்களே?

அண்ணன் - ஏராளமான பணத்தை மனம் உற்பத்தி செய்ய முடியும் என்று நான் அதனால்தான் கூறுகிறேன். கொசுறு முதலைவிட அதிகம்!

தம்பி - சொல்லுங்க.

அண்ணன் - செட்டியார் வீட்டில் 1960இல் பாகப் பிரிவினை. 3 பேர் உடன்பிறந்தவர்கள். ஆளுக்கு 12 கோடி பிரித்துக் கொண்டனர்.

தம்பி - தெரியும்.

அண்ணன் - மூத்தவருக்கு P.A. இருந்தார். அவர் 85இல் காலமானார். அவருக்குச் சம்பளம் 500/-ரூபாய். இறக்கும்பொழுது அவருக்கு என்ன சொத்து தெரியுமா?

தம்பி - என்ன 1 லட்சமிருக்குமா?

அண்ணன் - 50 லட்சம் எனக் கேள்வி.

தம்பி - அவ்வளவு திருட முடியுமா?

அண்ணன் - P.A. நல்லவர், திருடமாட்டார், செட்டியாரிடம் திருடவும் முடியாது. செட்டியார் தமக்கு நஷ்டமில்லாமல் எவரும் பயன்படுத்த முடியாத சௌகரியங்களை P.A.க்குக் கொடுப்பார். அது 50 லட்சமாயிற்று.

தம்பி - பெரிய இடம், கொசுறு பெரியது, நீங்கள் கொசுறே முதலைவிட இரண்டு மடங்கு என்கிறீர்களே.

அண்ணன் - வெள்ளைக்கார ஆலையை 10 கோடிக்கு வாங்கியது உனக்குத் தெரியுமல்லவா?

தம்பி - சேலத்தார் வாங்கினார், அது நஷ்டமான ஆலையல்லவா?

அண்ணன் - ஆலையில் உள்ள மனையிடம் இன்று 500 கோடி பெறும். ஆலை நஷ்டமானால் என்ன?

தம்பி - கொசுறு 50 மடங்கா?

அண்ணன் - இன்று monetary system பணம் நடமாடும் இடத்தில் நேர்மையான முறையில் உபரி பணம் உற்பத்தி செய்ய ஏராளமான வழிகளுண்டு.

தம்பி - எப்படி 200 பில்லியன் வந்தது எனக் கூறவில்லையே.

அண்ணன் - பணம் உள்ள இடத்திலுள்ள எல்லாமே பணம்தான். நம் கண்ணுக்குத் தெரியாது. தெரிந்து நேர்மையான முறையில் அதைப் பெற முயன்றால் அளவு கடந்த பலன் உண்டு.

தம்பி - மனிதனுக்கு நேர்மையான முறை தெரியாது.

அண்ணன் - அதனால்தான் அவனுக்குத் தெரிவதில்லை. மேலும் இந்தத் தவணை முறை வந்தபிறகு பணம் அதிகமாகப் புரள்கிறது அல்லவா? அதுபோல் சொத்து -பணமில்லை -உள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான பணம் இருக்கிறது. அதுவும் தெரிவதில்லை.

தம்பி - எப்படி economist எல்லாம் சும்மாயிருக்கிறார்கள்?

அண்ணன் - எல்லாரும் புத்திசாலிகள்தான். அபாரப் புத்திசாலிகள் தான். அவர்கள் போகிற வழியில் இது கண்ணுக்குப் படாது.

தம்பி - கொஞ்சம் புரிகிறமாதிரி சொல்லவேண்டும்.

அண்ணன் - நம்மூர் ஆலை தெரியுமில்லையா? 170 வருஷமாக இருக்கிறது. முதல் 100 வருஷத்தில் போட்ட முதலைப் போல் 100 மடங்கு சம்பாதித்தார்கள். இன்று கரும்பு 1 டன்னுக்கு 600 ரூபாய் அன்று 10 ரூபாய். ஆலை 100 மடங்கு சம்பாதித்தது உண்மை. சுரண்டுகிறான் என நாமெல்லாம் கோஷம் போட்டோம். ஊரில் என்ன பழமொழி, கிராமத்தில் கல் வீடு என்றால் கரும்பு குடித்தனக்காரன் என்று பழமொழி. 1950இல் தமிழ்நாட்டில் 1500 மோட்டார்கள் உண்டு. (நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் மோட்டார்) அவற்றில் இந்த ஆலையைச் சுற்றி 1200 மோட்டார்கள். அந்த நாளில் பணக்காரர்கள்தான் மோட்டார் போட முடியும். 20,000 ஏக்கர் கரும்பு பயிராயிற்று. ஆலை சம்பாதித்தது எவ்வளவு? இந்த 20,000 ஏக்கர் சம்பாதித்தது எவ்வளவு எனப் பார்.

தம்பி - விவசாயிகள் அதிகமாகச் சம்பாதித்திருப்பார்களே.

அண்ணன் - இன்று உலக பாங்கிகளிலெல்லாம் பணம் உபரியாக இருக்கிறது. நம்மூரில் பாங்க் 12% வட்டி தரும். அமெரிக்காவில் 3% தான் தரும். பணம் ஏராளமாக இருக்கிறது. இதைவிட பாங்க், சர்க்கார், கம்பெனிகளைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத பணம் பெருவாரியாக இருக்கிறது. சுமார் 2000 ஊர்களில் கரன்சிபோல சிறு அளவில் உலகில் நடத்துகிறார்கள். அது பரவுகிறது.

தம்பி - 200 பில்லியன் எப்படி வந்தது?

அண்ணன் - பாங்க்கைச் சுற்றியுள்ள பணமுள்ளஇடங்களை சர்க்கார் அனுமதித்ததன் பேரில் இலாபகரமாகச் செயல்பட்டால் பணம் உபரியாக உற்பத்தியாகும்.

தம்பி - அது புரியவில்லை. நமக்கு புரிந்த இடங்களைச் சொல்லுங்கள்.

அண்ணன் - 10,000 ஏக்கர் பண்ணை, பெரிய ஆலை, பாங்க், சர்க்கார், ஹைகோர்ட் இதைச் சுற்றி ஏராளமான குடும்பங்கள் சம்பாதிப்பது தெரியுமா?

தம்பி - ஹைகோர்ட் கிளார்க்குக்கு மாதம் 120ரூபாய் சம்பளமிருக்கும்பொழுது, வராந்தாவில் அவசர கேஸுக்கு டைப் அடித்துக் கொடுப்பவன் தினமும் 100ரூபாய் சம்பாதிப்பான்.

அண்ணன் - இன்று உலகில் புழங்கும் பணம், மொத்தம் உள்ள பணத்தில் 10% தான் என்பது ஒரு கணக்கு. அதனால் அதிகப் பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.

தம்பி - அதெல்லாம் போகட்டும். நம்ம விஷயத்தைப் பேசுவோம்.

அண்ணன் - எல்லாருக்கும் உண்டானது, நமக்கும் உண்டு. நம் வருமானத்தைப் பல மடங்கு உயர்த்த முடியும். நம்மைச் சுற்றிப் பணமிருக்கிறது. நேரம் பணம், பொருள் பணம், ஒழுங்கு பணம், யோசனை பணம், குணம் பணம், நம்மைச் சார்ந்தது எதுவும் பணம் தான் என நாம் அறிவதில்லை. பணம் எப்படி உற்பத்தியாயிற்று, பணத்தினுள் என்னென்ன இருக்கிறது என்று விவரமாக அறிந்தால் நம்மிடம் ஏராளமான பணம் உற்பத்தியாக வழியுள்ளது எனப் புரியும். மனம் சாதிக்கும் என்பதுபோல் மனம் பணத்தை உற்பத்தி செய்யும் என்று கூறலாம். இதுவரை யாரும் செய்யவில்லை, எவரும் இப்படிப் புரிந்து கொள்ளவில்லை என்பதால் புதிராக இருக்கிறது. யாராவது முதல் செய்யவேண்டும். பிறகு பலர் செய்தால், அனைவரும் ஏற்பார்கள். இப்பொழுது எவரும் கேட்டுக் கொள்ளமாட்டார்கள்.

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் இப்படி எழுதியுள்ளாரா?

அண்ணன் - ஸ்ரீ அரவிந்தர் இதைப் பற்றி எழுதவில்லை. மற்றதைப் பற்றி எழுதியுள்ளார். அடிப்படைத் தத்துவத்தை எழுதியுள்ளார். நாம் எந்தத் துறையிலும் செய்து பார்க்க முடியும். முதல் நிபந்தனை, பிறரை வாழவைக்கும் மனம்" பெரியது. அதைக் கடந்தவர்க்குரியது இது.

  • தம்பி - சிறியது பெரியதாகும்.
  • சிறியதும் பெரியதும் ஒன்று.
  • மனிதன் மறைபொருளான தெய்வம்.
  • உலகம் மனிதனில் உள்ளது, போன்ற தத்துவங்களைக் கூறுகிறீர்களா?

அண்ணன் - ஆமாம். இன்று உன் கம்பெனியில் 5 கோடி வியாபாரமாகிறது. ஆனால் திடீரென 5 லட்சம் பணம் அதிலிருந்து எடுக்க முடியாது. 50 லட்சம் எடுக்க முடியும் எனில் அது உன் கம்பெனிக்கு பெரிய விஷயமாயிற்றே.

தம்பி - அதை நான் செய்யவில்லை. ஆனால் முடியும் எனத் தெரிகிறது.

அண்ணன் - அதைச் சாதித்த பின் என் விளக்கம் புரியும். நம் அறிவில் 1/10 % கூட நாம் பயன்படுத்துவது இல்லை. நம் உடற் சக்தியில் 1/100 % கூட நாம் அறிவதில்லைஎன்று நாம் கேள்விப்பட்டால் நம்புவதில்லை.

தம்பி - நான் நம்புகிறேன்.

அண்ணன் - நம்புவது சரி. போதாது. செய்தால் அடுத்ததைச் சொல்லலாம். நம் சம்பாதிக்கும் திறமையில் நாம் 1% தான் பயன்படுத்துகிறோம் என்பது உண்மை.

தம்பி -நமக்கு நோய் தேவையில்லை, பிரச்சினை தேவையில்லை, கவலை தேவையில்லை, சிக்கல் தேவையில்லை என்பதுபோல் பணத்தட்டுப்பாடும் தேவையில்லையா?

அண்ணன் - இன்றைய தினம் குழந்தையைப் படிக்க வைக்க மறுப்பவர் உண்டு. உலகம் எங்கிருக்கிறது? இவர்கள் எங்கிருக்கிறார்கள்? நாம் பணம் விஷயத்தில் அவர்களைப் போலிருக்கிறோம். அறிவு உயர்ந்தது, ஆன்மீகம் உன்னதமானது, அன்னை அவற்றைத் தாண்டியது. அன்னையின் ஆன்மீக அறிவை நாம் பெற்றுக் கொண்டோமா? நாமெல்லாம் ஆங்கிலம் படித்தவர்கள். அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் 60 வால்யூம் எழுதியிருக்கிறார்கள். நாம் எத்தனைப் படித்திருக்கிறோம்?  உயர்வையும், உன்னதத்தையும் கடந்த அறிவு புத்தகமாக அலமாரியில் இருக்கிறது. நாம் ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறோம். 1% என்று கூற முடியுமா? அதேபோல் நம் வாழ்வுக்குரிய திறமையில் சிறுபகுதியையே நாம் அறிவோம். முழுவதையும் நாம் முதலில் அறிய வேண்டும். அறிவது முதல், பெறுவது பிறகு.

தம்பி - நான் 50 லட்சத்தை என் கம்பெனியில் எடுத்துவிட்டு பிறகு கேட்கிறேன்.

அண்ணன் - அதைச் செய்தால், பணம் என்ன என்று புரிய உதவும். எல்லோரும் ஒரு தொழில் செய்கிறார்கள். அன்னையை ஏற்றபின் அதை 10 மடங்கு சிறப்பாகச் செய்ய முடியும். அதைச் செய்தவர்க்குப் பணத்தைப் பற்றிப் பேசினால் விளங்கும். அந்த அனுபவத்தில் காலம், நேரம், பொருள், சத்தம், சுத்தம், கணக்கு, ரிஜிஸ்டர், லாபம், நஷ்டம், விரயம் எல்லாம் விளங்கும். எல்லோரைப் போலவுமிருப்பவர்க்குரிய அறிவு இல்லை இது. சிறப்பானவர்க்குரியது. சொந்த வேலையில் சிறப்பெய்திய பின் பேசினால் விளங்கும்.

அண்ணன் - நம் வீட்டில் பல பொருள்களிருக்கின்றன. அவை எல்லாம் பணத்தோடு தொடர்புள்ளன. பணத்தொடர்பு இல்லாத பொருளோ, செயலோ இல்லை. நாம் பொருள்களைப் பயன்படுத்தும்பொழுது பணக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. கரண்ட் வீணாகிறது என்று பார்ப்பதுபோல், பைப்பில் தண்ணீர் வீணாகிறது என்று நினைப்பதில்லை. அதைக் கருதுபவர்களும், அலமாரியில் உள்ள புத்தகம் 350ரூபாய்க்கு வாங்கினோம். 10 பக்கம்தான் படித்தேன். அதனால் 300 ரூபாய் விரயம். 50 ரூபாய் பலன் வந்தது எனக் கருதுவதில்லை.

ஒரு வீட்டில் குழந்தை செல்லமாக இருந்தால் ஒருவருக்குத்தான் செல்லமாக இருக்கும். அத்தனை பேருக்கும் செல்லமான குழந்தை அற்புதமாக வளரும். பணம் தவிர வேறு எந்தப் பொருளும் எல்லாவற்றுடனும் தொடர்பு கொண்டிருப்பதில்லை. துணி என்றால் அதற்குக் குறிப்பிட்ட உபயோகம், சாப்பாடும் அப்படியே, கடிகாரமும் அப்படியே, எந்தப் பொருளும் சிலவற்றோடு மட்டும் தொடர்புள்ளதாக இருக்கும். பணம் மட்டும் எல்லாப் பொருள்களுடனும், நிகழ்ச்சிகளுடனும் தொடர்புள்ளது. பணத்திற்கு நாம் முழுக் கவனம் செலுத்துவதில்லை. தாயாரோ, தகப்பனாரோ, குழந்தைகட்கே முழுக் கவனம் செலுத்துவதில்லை. ஒரு சோதனையாகப் பணத்திற்கு முழுக் கவனம் செலுத்தினால், அதாவது எந்தப் பொருளையும், நிகழ்ச்சியையும், பண நோக்கில் கவனித்தால் நம் கவனம் பணத்திற்கு 10, 20 மடங்கு அதிகமாகும். இந்தக் கவனத்திற்கே பணம் பெருகும். முழுக் கவனம் செலுத்திய பின், கவனத்தை organise செய்ய வேண்டும். கவனம் சக்தி வாய்ந்தது. Organisationis power itself. முறை ஏராளமான சக்தி வாய்ந்தது. கவனமும், organisation உம் பணத்தைப் பேரளவில் பெருக்கும் திறனுடையவை.

தம்பி - பெரும் பணத்தை மனம் உற்பத்தி செய்ய முடியும் என இப்பொழுது நம்பமுடிகிறது. மனத்தை ஓரளவு தயார் செய்து கொண்டு பிறகு வருகிறேன். Life Divineலிருந்து இதற்குப் பொருத்தமான கருத்துகளை எடுக்கமுடியுமா?

அண்ணன் - 56 அத்தியாயங்களில் 56 கருத்துண்டு. எல்லாவற்றையும் finite சிறியது infinite பெரியதாகிறது எனக் கூறலாம். அதனால் சிறு வருமானத்தைப் பெரு வருமானமாக மாற்றலாம் என்று கொள்ளலாம். ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கொண்டுள்ள தொடர்பையும் ((Eternal and the Individual என்ற அத்தியாயத்தில் கூறுவது) பெரும் பணம் உற்பத்தி செய்யும் வகையாகக் கூறலாம்.

தம்பி - பணத்தைப் பணமாகக் கருதாமல் இறைவனுடைய சக்தியாகக் கருதவேண்டும் அல்லவா?

அண்ணன் - இந்திய யோக மரபு ஜீவாத்மா, பரமாத்மாவில் கலந்து கரைகிறது என்கிறது. ஜீவாத்மாவுக்குத் தனியான இடம் தருவதில்லை. அதனால் உலகம் மாயை என்றது. உலகத்தை மாயையாக மனம் சிருஷ்டித்தது, ஜீவாத்மா சிருஷ்டித்தது, அதாவது அகங்காரம் சிருஷ்டித்தது என்ற கருத்துகள் பல வடிவங்களில் நிலவுகின்றன. ஸ்ரீ அரவிந்தம் இங்கு மாறுபடுவதை அறிய வேண்டும். ஸ்ரீ அரவிந்தம் தெளிவாக ஜீவாத்மாவே பரமாத்மா எனக் கூறுகிறது. இக்கருத்தைத் தெளிவாக ஏற்றால், அளவு கடந்த பணத்தை மனம் உற்பத்தி செய்யலாம் என்பது விளங்க உதவும்.

தம்பி - ஜீவாத்மாவுக்கும், பணத்திற்கும் என்ன சம்பந்தம்?

அண்ணன் - நம் அபிப்பிராயம் என்ன? பணம் அளவோடு கூடியது என நினைக்கிறோம். பணம் மட்டுமன்று மற்ற எத்தனையோ விஷயங்களை நாம் அப்படி நினைக்கிறோம். ஸ்ரீ அரவிந்தம், ஜீவாத்மா என்பது அகந்தையன்று, புருஷனே ஜீவாத்மா, புருஷன் அகந்தை அழிந்தபின் அழிவதில்லை, எல்லா ஜீவராசிகளின் புருஷன் ஒன்றே, அவனைப் புறத்திலும் காணலாம், அகத்திலும் காணலாம், அவனே பிரபஞ்சத்தின் ஆத்மா, உள்ளே சென்று பார்த்தால் ஜீவாத்மா, பிரபஞ்சத்தின் ஆத்மாவினுடைய பகுதி எனத் தெரியும். மேலும் தொடர்ந்தால் அவையிரண்டும் பரமாத்மாவின் பகுதிகளாகும்.

பரமாத்மா என்பது ஜீவாத்மாவாக நமக்குத் தெரிகிறது எனக் கூறுகிறது. இது ஆன்மிக உண்மை. இது சித்தித்தால், அவர் சித்தி பெற்றவராவார். இந்த ஞானத்தை

மனம் ஏற்றுக்கொண்டால், மனம் விசாலமடைகிறது. பிரபஞ்சத்தின் அளவு விசாலமடைகிறது. மனம் விசாலமடைந்தால் மனம் உற்பத்தி செய்பவையும் பிரபஞ்சத்தினளவுக்கு விசாலமடையும். அளவு கடந்து பெருகும். மனம் பணத்தை உற்பத்தி செய்யும் என்பதை விளங்கிக் கொள்பவர்க்கு, பணத்தை அளவு கடந்து உற்பத்தி செய்யலாம் எனப் புரியும். இது ஞானம். சக்தியன்று, சக்தியே சாதிக்கும்.

தம்பி - நல்லது செய்தால் மனிதர்கள் கோபப்படுகிறார்கள். செய்யாவிட்டால் நல்லபடியாகப் பழகுகிறார்கள். ஏன்?

அண்ணன் - தராதரம் தெரியாமல் பழகுகிறோம் எனப் பொருள். யாருக்கு எது நல்லது என நமக்குத் தெரியவில்லை (strategy தெரியவில்லை) எனப் பொருள். குறைவாகச் செய்தாலும், அதிகமாகச் செய்தாலும் தவறு.

தம்பி - எதிர்த்த வீட்டுக்காரர் முதலாளி சம்பளம் தாராவிட்டால் நல்லபடியாக இருக்கிறார். சம்பளப் பாக்கி வந்துவிட்டால் பழைய குணம் வந்துவிடுகிறது.

அண்ணன் - பாரம் இருந்தால் கட்டுப்பாடிருக்கிறது. பாரம் இல்லாவிட்டால் கட்டுப்பாடு போய்விடுகிறது. இடம் கொடுக்கக் கூடாது என்பார்கள்.

தம்பி - நமக்கு இடம் கொடுத்தால் மடம் பிடுங்குகிறோம். அன்னை ஆயிரம் மடங்கு இடம் கொடுப்பதை முறையாகக் கொண்டுள்ளார்கள். அந்த இடம் வந்தபின் சொந்தமாகக் கட்டுபாடிருந்தால் அருள் செயல்படும்.

இது பெரிய இரகஸ்யம்

ஏன் கொடுப்பதை அன்னை நம்மால் ஏற்க முடியாத அளவுக்குக் கொடுக்கிறார்கள்?

அண்ணன் - மரம் 1 பழம் தரமுடியாது, 100 அல்லது 1000தான் அதனால் தரமுடியும் என்பது ஒரு விளக்கம். நம்மால் ஏற்பது போல் கொடுக்க வேண்டுமானால் ஏன் முடியாது என்பதற்கு அடுத்த காரணம் உண்டு. நம் பயிருக்கு மழைவேண்டுமானால் அன்னை எல்லோருடைய பயிருக்கும் மழையை தருகிறார். நம் கொல்லையில் மட்டும் பெய்ய முடியாது. நம் பிரார்த்தனையால் எல்லோருடைய பயிரும் மழை பெறுகிறது என சந்தோஷப்படும் மனம் நமக்கு வேண்டும். அதேபோல அதிகமாக வரும்பொழுது அதை அடக்கத்துடன் பெற்று அனுபவிக்கும் தன்மை வேண்டும்.

தம்பி - இந்தக் கதையில் டார்சி எலிசபெத்தை விரும்புவது அவளுக்குத் தெரியாது. டார்சி அவளுக்கு எட்டாக் கனி. அதே சமயம் வாழ்வு அவ்வூருக்கு விக்காமை கொண்டு வருகிறது. எலிசபெத் இரண்டில் ஒன்றை ஏற்கவேண்டும். அவள் மனம் அழகை நாடி ஆபத்தை வரவழைக்கிறது. Human choice என்பது எல்லா இடங்களுக்கும் உண்டு போலிருக்கிறது.

அண்ணன் - ஒவ்வொரு செயலும் human choice உண்டு. ஒவ்வொரு முறையும் அது Mother's choiceஆக இருந்தால் நாம் பக்தராவோம். பெருஞ்செல்வம் மனம் உற்பத்தி செய்ய தேவையானவற்றுள் இதுவும் ஒன்று.

தம்பி - மனம் நல்லெண்ணத்தாலும், சந்தோஷத்தாலும் பொங்கி வழிந்து ஒரு காரியத்தை - அன்னை காரியமாகச் செய்தால் -அதன் எல்லாப் பகுதிகளிலும் Mother's choice இருந்தால், அதனால் நாம் சாதாரணமாகப் பெறக்கூடிய ரூ.1000/- பலன் பத்தாயிரமாகவோ, ஒரு லட்சமாகவோ இருக்கும் என்பதுதான் அந்த இரகஸ்யமா?

அண்ணன் - இரகஸ்யத்தை பல்வேறு வகைகளாகக் கூறலாம்.

  1. நல்லெண்ணம், சந்தோஷம்.
  2. ஜீவன் நிறைந்த செயல்.
  3. பலன் பெற்றபின் எழும் சந்தோஷம், பெறுவதற்கு முன் வரவேண்டும்.
  4. முழுச் சுதந்திரம் உள்ளபொழுது முழு அடக்கம் தேவை.
  5. சமர்ப்பணம்.
  6. சிறியதும், பெரியதும் ஒன்றே.
  7. ஜீவாத்மாவே பரமாத்மா என அறிவது.
  8. பணம் உற்பத்தியாகும் எல்லா வழிகளையும் அறிவது.
  9. சோதனை செய்யாமல் நம்பும் மனப்பான்மை.
  10. பக்குவம் தேவை.
  11. பணத்தைவிட மனிதன் முக்கியம் என அறிவது.
  12. பணத்தின் மீது முழுக் கவனம், முறை.

எந்த ரூபத்தில் அன்னை ஜீவனிருந்தாலும் பணம் உபரியாகப் பெருகும். நம் மனம் நமக்கு அடங்க வேண்டும். மனம் அடங்கினால் காரியம் பெரியதாகும் (infinite).

..........

- தொடரும்.

Comments

13. பிரார்த்தனை பலிக்க

13. பிரார்த்தனை பலிக்க வேண்டும்

para 3, after line 2 - extra space.

 do.  4, after line 6 - extra space

 do.   6 :       -இது       -       - இது

 do.   13, line 2 - 500/-ரூபாய் - 500/- ரூபாய்

  do.   27, line 3 - பணமில்லை -உள்ள - பணமில்லை - உள்ள

  do.   35, line 1 - பணமுள்ளஇடங்களை - 'பணமுள்ள' இடங்களை

   do.   41,  do. 9 - முதல் - முதலில்

   do.   43,  do. 3 - பிறரை - "பிறரை

   do.   44 - 1st point - bullet should be after தம்பி & -

   do.    47 - After line 1 - from நம் to இல்லை.          -   1st bullet point

                                    from நம் to நம்புவதில்லை.-   2nd    do. 

   do.          2nd bullet point - line 3 - அறிவதில்லைஎன்று - அறிவதில்லை என்று

   do.   50, line 1 -         -நமக்கு  -    - நமக்கு

   do.    51, line 10 -  from முழுவதையும் to வேண்டும். - bold letters

   do.    51,   do.    -  முதல் -  முதலில்

para 55, line 6 - from பணம் to தொடர்புள்ளது. - bold letters.

  do.       do. 12 - Organisationis - Organisation is

  do.       do.  13 - from கவனமும் to திறனுடையவை.- separate para and bold letters.

  do. 62, line 3 - After ஸ்ரீ அரவிந்தம் - 10 bullet points are there and the bullets are missing.

ஜீவாத்மா என்பது அகந்தையன்று,                          1st bullet point

புருஷனே ஜீவாத்மா,                                                   2nd    do.

from புருஷன் to அழிவதில்லை,                                  3rd      do.

from எல்லா to ஒன்றே,                                                 4th      do.

அவனைப் புறத்திலும் காணலாம்,                            5th      do.

அகத்திலும் காணலாம்,                                               6th      do.

அவனே பிரபஞ்சத்தின் ஆத்மா,                                 7th      do.

from உள்ளே to தெரியும்.                                              8th       do.

from மேலும் to பகுதிகளாகும்.                                     9th       do.

from பரமாத்மா to  சாதிக்கும்                                        10th      do.

In the above 10th bullet point, after line 2 - extra space is there.

para 64, line 1 -  from தராதரம் to பொருள். - bold letters

 do.  67,  do. 1 - from அன்னை to கொண்டுள்ளார்கள் - bold letters

 do.  69,  do. 3 - மழைவேண்டுமானால் - மழை வேண்டுமானால்

para 71, line 1 - செயலும் - செயலிலும் 

  do.       do.  2 -  Mother's choiceஆக - Mother's choice ஆக

  do. 72,  do.  2 -       -அதன் -          - அதன்

After the above article

ஸ்ரீ அரவிந்த சுடர் - missing

two articles from the inner cover pages - missing

 

 

 



book | by Dr. Radut