Skip to Content

09.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

அன்னைக்குக் கோடி நன்றிகள்:

நான் அன்னையை 99ஆம் ஆண்டு முதல் வணங்கிவருகிறேன். அதனால் நானும் எனது குடும்பமும் பெற்ற பலன்கள் ஏராளம். முக்கியமானவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன்.

குழந்தையில்லாமல் ஏழு வருடம் கஷ்டப்பட்ட என் தங்கைக்கு அன்னையின் அருளால் குழந்தை பிறந்தது. 26 வயதுவரை திருமணம் நடைபெறாத என் இரண்டாவது தங்கைக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடைபெற்றது. அடுத்த ஒரு வருடத்தில் குழந்தை பிறந்தது. அன்னையின் அருளால் ஒரு சொத்து வாங்கி, அவற்றைத் தக்க தருணத்தில் விற்று, அதன் மூலம் எங்களை கோடீஸ்வரராக ஆக்கியது. இவற்றிற்கெல்லாம் மகுடம் சூட்டியது போல் அன்னையிடம் வந்ததால், தீராமல் நீண்டநாள் இருந்த என் உடல் குறை பிரச்சினையை சற்றும் எதிர்பார்க்காத வகையில் புதிய வழியில் நிரந்தரமாக தீர்க்க அன்னை அருள் செய்தார். இவை அனைத்தையும் முடித்துக் கொடுத்தது அன்னையின் அருள். மேலும் அன்னையை ஏற்றபின் நடப்பவை அனைத்தும் நல்லவையே. அன்னையிடம் நம்பிக்கையுடன் சரண் அடைந்தால் தக்க தருணத்தில் கைதூக்கிவிடுவார் என்பது உறுதி.

நாம் அருகிலுள்ள தியானமையம் சென்று வரவேண்டும். அங்குள்ள புத்தகங்கள் மூலம் அன்னை எனக்குத் தொடர்ந்து வழிகாட்டி அருள் புரிந்தார். நமக்கு வழி தெரியாதபொழுது, மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டிக்குக் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு அன்னையின் அருளைப் பெற வழியை நாடலாம். மேலும் அன்னையின் அருள் தொடர்ந்து செயல்பட நாம் அதிக விழிப்புடன் நம் குறைகளை வலியுறுத்தாமல் மனதை உண்மையால் நிரப்பி வழிபடவேண்டும். நாம் அன்னையை அடையவேண்டுமானால் சத்தியம் மட்டும் தேவை. அன்னை என்றால் சத்தியம் என்பது உண்மை.

****



book | by Dr. Radut