12.ஆசை வெட்கமின்றிக் கேட்கும்
ஆசை வெட்கமின்றிக் கேட்கும்
-ஆசையென உள்ளே எழுந்தால் அதனுடன் அவசரம் வரும்.
-ஆசைக்கும், அவசரத்திற்கும் வெட்கமோ, பொறுமையோ இருக்காது.
-அறிவற்றவனுக்குத் தேவையெழுவது ஆசையாகும்.
-தேவை தெளிவற்றவனுக்கு வந்தால் ஆசையால் பூர்த்தி செய்ய முயல்வான்.
-ஆசை பூர்த்தியானால், பூர்த்தி செய்தவர் நினைவுக்கு வாராது.
-அவரை நினைவுபடுத்தினால் எரிச்சல் வரும்.
-நினைவு வந்தால் அவர் தனக்குத் தொந்தரவு செய்தவர் என நினைவு கூறும்.
-நன்றியைக் கேட்கும் சமயம் வந்தால் துரோகம் தோன்றும்.
-அந்த துரோகத்திற்கு ஆசைக்குண்டான அவசரம் உண்டு.
-அவசரப்பட்டு ஆசையைப் பூர்த்தி செய்தவரைத் துரோகத்தால் அழிக்க முனைந்து செயல்படுவான்.
-அவன் எண்ணம் விரைவில் பூர்த்தியாகும்.
-அவன் எண்ணம் அவனில் பூர்த்தியாகும் - அவன் தன்னை விரைந்து அழித்துக்கொள்வான்.
*******
- Login to post comments