07.லைப் டிவைன் - கருத்து
The Life Divine - கருத்து
The Knowledge of the self in the Non-birth and Non-becoming and the changeless spirit within us is immortality.
அக்ஷர பிரம்மத்திலும், க்ஷர பிரம்மத்திலும் ஆத்மாவை அறிவது அமரத்துவம்
. மோட்சம் பெறும் தவசி அக்ஷரப் பிரம்மத்தில் தன் ஆத்மாவை அடைக்கலம் செய்கிறார்.
. கிருகஸ்தன் க்ஷரப் பிரம்மத்தைத் தன் ஆத்மாவாகக் காண்கிறான்.
. வேத ரிஷிகள் கண்ட மோட்சம் மேற்சொன்னவாறு அக்ஷர, க்ஷரப்
பிரம்மங்களில் தங்கள் ஆன்மாவைக் கண்டதாகும்.
. அதுவே இயற்கையோடு இணைந்த வாழ்வு.
. ரிஷிகள் அதை உடலில் கண்டனர்.
. பகவான் அதையே சத்தியஜீவியத்தில் காணவேண்டும் என்கிறார்.
உதாரணம்:
. கோபம் வாராதபொழுது நிதானமாக இருக்கலாம்.
. கோபம் வரும்பொழுது நிதானம் தவறும்.
. நிதானத்தை இழக்காதவர்க்கு உள்ளும் நிதானமிருக்கும்.
. கோபமே வாராதவருக்கு உள்ளும், புறமும் நிதானமிருக்கும்.
. அவருக்கு வேத ரிஷிகள் பெற்றதைப் பெறும் தகுதியுண்டு.
. பணமில்லாதபொழுது மனம் தாராளமாக இருப்பது, பணம் வந்தபின்
இருக்காது. பணம் வந்தபின் முந்தைய தாராளம் அந்நிலையைக் குறிக்கும்.
. போலீஸ்காரனைப் பிச்சைக்காரன் வம்புக்கு இழுத்தால், போலீஸ்காரனுடைய நிதானம் அதுபோன்றது.
. கணவனை மனைவி அதிகாரம் செய்யும்பொழுது எரிச்சல் வாராமலிருப்பது கணவனுக்கு நிதானம்.
. நேருவுக்குப் பொறாமை என M.P..யின் குற்றச்சாட்டு நேருவுக்கு சிரிப்பு மூட்டுவது, அதுபோன்றது.
. ஈராக் அமெரிக்காவுக்குச் சவால் விட்டால், அமெரிக்கா கொதித்து எழாதது, அதுபோன்றது.
. புயல் அடிக்க ஆரம்பித்தால், ஒருவர் மனம் நிதானத்தை நாடிப் போனால், புயல் அந்த நிதானத்தால் அடங்கும்.
. சுத்தமான அதிகாரிக்கு கறுப்புப் பண முதலாளி அவர் சுத்தத்தால் மனம் மாறிப் பணம் தர முன்வாராமல் விஷயத்தைப் பேசுவது வேத ரிஷிகள் பெற்ற யோகத் தகுதிக்கு இவர் உரியவர் எனப் பொருள்.
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் தன் பழக்கங்களையும், உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் விடுவதே சிரமம். அன்னையை அழைப்பது அத்தனை சிரமம் இல்லை என்பதை அவர் காண்பார். அன்னை எளிது. மாற்றம் எளிதன்று. |
ஸ்ரீ அரவிந்த சுடர் நம் நிலை, காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. நிலையை மாற்றவோ, காலத்தைச் சுருக்கவோ, நாம் காலத்தைக் கடக்க வேண்டும். மனத்தையே கடப்பது சிறந்தது. நிலையை மாற்றுவதற்குப் பதிலாக காலத்தைக் கடப்பது நல்லது. |
- Login to post comments