1. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும், ஸ்ரீ அரவிந்தமும்
(மார்ச் 2008 இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
31. கற்றன் கேட்டலே நன்று.
- கேள்வியைவிட ஞானம் உயர்ந்தது.
32. குலவிச்சை கல்லாமல் பாகம்படும்.
- பயில வேண்டிய பகுதியை எடுத்து மௌனத்திற்கு சமர்ப்பித்தால் பலன் இதை விளக்கும்.
33. பாம்பறியும் பாம்பின் கால்.
சமர்ப்பணம் பிரச்சினையின் வழியையும், மூலத்தையும் அறியும்.
34. அறிவில்லாதவர்களுக்கு நகரமும் காடு போன்றதே.
ஆர்வமற்றவர்க்கு அன்னைச் சூழலும் அர்த்தமற்றதாகும்.
35. பரிசழிந்தாரோடு தேவரும் ஆற்றல் இலர்.
(கொடை கொடுப்பவர்முன் தேவரும் தங்கள் ஆற்றலை இழப்பார்கள்).
தம்மை அர்ப்பணம் செய்பவர் (Self-giving) முன் தலைவரும் பணிய வரும்.
தொடரும்....
************
-
ஸ்ரீ அரவிந்த சுடர்
கண்ணுக்குத் தெரிந்த சேவை நம்மை உயர்த்தும்.
தெரியாமல் செய்யும் சேவை புனிதப்படுத்தும்.
-
ஜீவியத்தின் ஓசை
எண்ணம் எழுந்து வெளி வரும் பொழுது மீண்டும் அதை உள்ளே அனுப்ப முடிவது மௌனம்.
எண்ணம் எழாத மௌனம் மனதைக் கடந்த மௌனம்.
தானே வருவதைத் தவிர்க்கக் கூடாது என்பது அன்னை சட்டம்.
எப்படிப் போனாலும் அன்னை சம்பந்தப்பட்ட விஷயம் நல்லதாகவே முடியும்.
- Login to post comments