02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- நாய் காணின் கல் காணாவாறு.
[நாயைக் கண்டால் கல்லை காணோம்.
கல்லைக் கண்டால் நாயை காணோம். (வழக்கிலுள்ள பழமொழி).]- பிரச்சினை வரும் பொழுது அன்னை மறந்துவிடுகிறது.
- புறஞ் செய்ய செல்வம் பெருகும்.
அறஞ் செய்ய அல்லவை நீங்கிவிடும்.
(அல்லவை - தீமை)- திறமை பலன் தரும்.
சமர்ப்பணம் தோல்வியை அகற்றி வெற்றி தரும்.
- திறமை பலன் தரும்.
- பசு கறுப்பானால் பாலும் கறுப்பா.
- மனிதன் சிறியவனானால் பிரார்த்தனை சிறியது ஆகாது.
- தோல்வி வெற்றியைத் தருகிறது.
- தோல்வி ரூபத்தில் வரும் வெற்றி அல்லது
தோல்வியாக எழும் பெரும்வெற்றி.
(இயல்பாக வரும் வெற்றியைவிட தோல்வியில் ஆரம்பிப்பது பெரிய வெற்றியில் முடியும். முடிவில் வெற்றி பெறாத தோல்வி உலகில் இல்லை. அன்னை அதை உடனே அல்லது முதலேயே செய்து விடுகிறார்).
- தோல்வி ரூபத்தில் வரும் வெற்றி அல்லது
- அனுபவம் மிகச்சிறந்த ஆசான்.
- ஆசான் கொடுத்த அறிவுரை தவறலாம்.
அனுபவம் தருவது தவறாது.
அனுபவம் வாழ்வு. கையால் செய்த காரியம் தவறினால் மனம் படிப்பினை பெறுகிறது. மனம் உடடமிருந்து அறிகிறது. அது உடல் பரிணாமத்தால் உயர்ந்து மனத்தை அடைவது தவறாது.
- ஆசான் கொடுத்த அறிவுரை தவறலாம்.
தொடரும்....
*****
- Login to post comments