10. சாவித்ரி
சாவித்ரி
P.110 Only when we have climbed above ourselves
நம்மை நாம் கடந்தபின்
- பிரம்மம் நம் யாத்திரையைச் சந்திக்கிறது
- காலத்தைக் கடந்த சத்தியத்துடன் நம்மை இணைக்கிறது
- விதிக்கப்பட்ட கதியைச் சொல்லாக எழுப்புகிறது
- அது தெய்வமான செயல், மரணமறியாத எண்ணம்
- ஒளியின்கதிர் மூளையைப் பெருமையாகச் சூழ்கிறது
- க்ஷணமழியும் பாதையில் இழிந்துவரும் போக்கு
- காலத்தைக் கடந்த ரூபங்கள் வருகின்றன
- அவை அறிவு பெறும் விருந்து, இதயம் அழைக்கும் உறவு
- அழியும் சுருக்கத்தை அவை போற்றிப் பாராட்டும்
- விடுதலைக்குரிய மின்னல் அரிதாக எழுந்தது
- திருஷ்டியின் மென்மை கொண்ட ஐயம் பிடித்துக்கொண்டது
- இங்குமங்கும் புவியில் நாமென்னஎன்ற பிம்பம்
- நம்மைத் தொட்டுத் தொடர்கிறது
- பூமியின் குறையே நாம் வாழ்ந்து வளரும் லோகம்
- இயற்கையெனும் கண்ணாடி நம் உண்மை சொரூபத்தைக் காட்டுவதில்லை
- அதன் பெருமை மறைவில் உறைகிறது
- புவியின் ஐயம் நம் பிதிராஜ்ஜியத்தை மறக்கிறது
- தூரத்து ஜோதி சொந்த சூரியனாகும்
- இன்று வரும் பலம் அன்று நட்புள்ள சக்தியாகும்
- சொல்லைக் கடந்தது குரலெழுப்பும் இரகஸ்யம்
- ஜடமெனும் திரையில் அழியாதது எரிந்து சாம்பலாகும்
- அழியுமுடல் தெய்வத்தின் ஆடையாகி மாற்றமுறும்
- ஆத்மபெருமை நம் அழியாத ஊற்று
- முடிவில்லாத காலத்தில் அது நம் முடிவாகும்
- அறிவையும் புலனையும் அளவுகடந்து கடந்த பெரியது
- நம்மைச் சூழ்ந்து ஊடுருவுகிறது
- எழுச்சி பெற்ற ஏகன் நம்மை ஆடையாகச் சூழ்கிறான்
- வாழ்வின் அம்சங்கள் சூட்சுமமாகச் சந்திக்கின்றன
- சிருஷ்டியனைத்தும் ஒரே தொடர்சங்கிலி
- மூடிய வாழ்வில் நம்மைத் தனித்து நிறுத்தவில்லை
- ஜடமான சக்தி இருளான வேகமாக ஓடுகிறது
- அறிய முடியாத பிரம்மம் அங்கு அரியாசனம் பெறுகிறது
- ஆத்மசெயலில் வாழ்வு புனிதமான ஓட்டம்
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் உலகில் அவதாரமாக நடமாடிய பொழுதும், மனிதனை தீவிரமாக நெருங்க அன்னை விரும்பினால் தோல்வி முதலியவற்றால் நெருங்குவதே அன்னை வழக்கம். உடனிருந்தபொழுதும் அன்னை முறை மாறவில்லை. |
*****
- Login to post comments