12. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
(32) முடிவான பலன் முதலிலேயே கிடைப்பது
மனிதவாழ்வு அனுபவத்தால், திறமையால் சாதிக்கிறது. அந்தச் சாதனை அவனுடைய குடும்ப சந்தர்ப்பத்திற்குட்பட்டது. அடுத்த கட்டத்தில் ஊர், உலக சந்தர்ப்பத்திற்குட்பட்டது. அதனால்
மனித சாதனை அவனது சமூகத்திற்குட்பட்டது.
பெரிய சாதனையைச் செய்பவர் அனைவரும் சமூகத்தைக் கடந்து சாதிப்பவரே.
- அவர்களும் அவர்கள் நம்பிக்கைக்குட்பட்டவரே.
- மனித நம்பிக்கையில் தலையாயது கர்மம்.
- இந்தியமரபு கர்மத்தைக் கடக்க முடியாது என்கிறது.
- தெய்வ நம்பிக்கையுள்ளவரைக் கர்மம் கட்டுப்படுத்தாது.
அவர்கள் பெருஞ்சாதனையாளர்.
1947இல் சுதந்திரம் வந்தது - ஆனால் ஆட்சி 1946 செப்டம்பரில் நம் கைக்கு வந்துவிட்டது. அன்று தலையாய பிரச்சினை உணவு உற்பத்தி. 1943இல் வங்காளப் பஞ்சம் வந்து போனவுடன், நாட்டுஆட்சி நம் கைக்கு வந்தபின் பஞ்சம் அன்னியராட்சியால் வந்ததுஎனக் கூற முடியாது. எனவே உணவு இலாக்கா பிரதம மந்திரிக்கு அடுத்த முக்கியத்துவம் பெற்றது. பெருந்தலைவர்கள் அதை நடத்தினர். அவர்களுள் ராஜேந்திர பிரசாத், ஜெகஜீவன் ராம், ரவி அகமத் கித்வாய், ராஜாஜி ஆகியோரிருந்தனர். எவராலும் உணவு பற்றாக்குறையைத் தீர்க்க முடியவில்லை. நெருக்கடி 1964 வரை நீடித்தது. 1964இல் சுப்ரமணியம் வந்தார். அவருக்கு நாட்டில் நம்பிக்கையுண்டு. பாரதமாதா காப்பாற்றுவாள்என்று நம்பினார். அது தெய்வ நம்பிக்கை. பசுமைப்புரட்சி வந்து பற்றாக்குறையை அடியோடு நீக்கியது. நாட்டின் திறமை பலன் பெற்றது. திறமை மீதுள்ள இருளான கர்மம் - இந்தியா பஞ்சத்திலடிபட்ட நாடுஎன்ற கர்மம் - விலகி,
- தெய்வ நம்பிக்கை கர்மத்தை விலக்கி, திறமைக்குரிய பலனை அதற்குரிய காலத்தில் தரும். அது அருள்.
- அதற்கடுத்த கட்டம் பேரருள்.
- மனிதன் தன் திறமையை நம்பாமல் ஆண்டவனை நம்பினால் திறமை விலகும். அருள் பேரருளாகும்.
- திறமையை நாம் நம்புவதால் திறமை செயல்பட்டுப் பலன் தருகிறது. திறமை பலன்தர காலம் தேவை.
- திறமை விலகினால், காலம் விலகும். அதே நேரம் பலன் வரும்.
முடிவான பலன் முதலிலேயே வரும்.
அன்பர்கள் வாழ்வில் இது அடிக்கடி நடக்கும். அது யோக வாயிலாகும். 1989இல் சர்வதேசக்கமிஷன் முதற்கூட்டம் இத்தாலியில் நடந்தது. அணுஆயுத ஒழிப்புக்காக ஏற்பட்டது இக்கமிஷன். கூட்டம் ஆரம்பிக்கும் 10 நாளைக்குமுன் வல்லரசுகள் ஒழிப்பை ஏற்றுக் கொண்டன. பிராண்ட்கமிஷன் பிரசித்தி பெற்றது. அதன் டைரக்டர் நம் கமிஷன்மெம்பர். முதற் கூட்டம் முடிந்த அன்று அவர், "பிராண்ட் கமிஷனில் 1 வருஷத்தில் சாதித்ததை நீங்கள் ஒரே கூட்டத்தில் முடித்துவிட்டீர்கள்'' என்றார்.
- கர்மம் விலகுவது அருள், திறமை விலகுவது பேரருள்.
- பேரருள் செயல்படுவது யோகவாயில்.
- நாம் அதை முடிவான பலன் முதலிலேயே பெறுவது என்கிறோம்.
தொடரும்.....
******
- Login to post comments