06. சாவித்ரி
சாவித்ரி
P.82 A greater Force than the earthly held his limbs.
பூமியைவிடப் பெரிய சக்தி அவனைத் தாங்கிப் பிடித்தது.
. அவனது காணாத லோகங்களைப் பெருஞ்சக்திகள் கண்டுகொண்டன.
. வினோதமான சக்திகள் செயல்பட்டு வலுவான கரங்களைத் திரையிட்டு மூடின.
. மனமெனும் முப்புரிநூலை அவிழ்த்து விடுதலை செய்தன.
. ஆண்டவனின் பார்வை அகல விரியும் மோட்சலோகம்.
. உடை உணர்த்தும் உடலுருவம்.
. ரூபத்தை கடந்து மறைந்துறையும் பிரம்மம்.
. பிரபஞ்சம் உணர்ந்து பெற்ற பிரம்ம திருஷ்டி.
. கருவிகள் பெருகிச் சிறந்தன.
. அகல விரியும் பூதக்கண்ணாடி மாயையைக் கரைத்தது.
. நழுவும் கையின் தவறும் செயல்.
. பிரம்மாண்டமான தோற்றம் அணுவாகச் சுருங்கியது.
. சிறிய அகந்தை சேர முடியாமற்போயிற்று.
. பிரம்மத்தின் பிரம்மாண்டமான லோகத்தில்,
. உடலே உடையும் ஓடாயிற்று.
. மனம் பல வண்ண ராஜ்யசபையாயிற்று.
. அழியாத அமரன் அரச கொலுவீற்றிருக்கும் சபை.
. அவன் ஆத்மா தெய்வச் சூழலை நுகர்ந்தது.
. இடியோசையும் அதனுடன் இசையும் அலையோசையும்.
. மாயவேலியைக் கடக்கும் சிறைப்பட்ட தெய்வம்.
. பெருந்தடைகள் அழியப் போட்டியிட்டன.
. அசைவற்ற அஸ்திவாரத்தில் உலகத்துடன் ஒன்றி நின்றன.
. வேலையின் நம்பிக்கை வீழ்ந்து மாய்ந்தன.
. எண்ணமும், செயலும் மையமாகி மறுக்கமுடியாதபடிக் கவர்ந்தன.
. அசையாத நிலையான எண்ணங்கள்.
. எடுத்த பிறவியின் நடையில் தம்மை அழித்துக்கொண்டன.
. ஆழ்ந்த இரகஸ்யத்தின் கசந்த வேர்கள்.
. எண்ணமும், செயலும் அவற்றிடையே உலவின.
. பயங்கர எல்லையைக் கடப்பதைத் தடை செய்தன.
. ஊமை இருள் பெருங்காவலனாயிற்று.
. சிறகற்ற ஆத்மாவைச் சூழும் திறன் பெற்றது.
. மனத்தின் அஞ்ஞான எல்லை எனும் அரங்கம்.
. காலத்தைக் கடந்து இரட்டையைக் காக்க மறுத்தது.
. தம் பெருங்கடமையைவிட்டு மறைந்தன.
. சிருஷ்டியின் பெருமை நிறைந்தபின் சின்னமாக இருந்தது.
. சூன்யம் விரிந்து தன் அசுர வளைவை இழந்தது.
****
ஸ்ரீ அரவிந்த சுடர் நாம், பிறந்த மண்ணின் பகுதி. நம் உடல் உறையும் ஆன்மாவின் பகுதியாகவும் நாமிருக்கின்றோம். ஆன்மாவைக் கண்டு சித்தி பெறுபவன் யோகி. உடல் பிறந்த மண்ணின் ஆன்மீகத்தைக் காண்பவன், பூரண யோகி. உடல் பிறந்த மண்ணின் ஆன்மீகம். |
- Login to post comments