08.கவிதாஞ்சலி
கவிதாஞ்சலி 1. அழைக்குங்கால் அமுதஊற்றாகும் அன்னையின் நாமமே. 2. உரைக்குங்கால் ஓடிவரும் உவகைப்பெருக்கு. 3. உன்னுங்கால் ஒளிர்விடும் நம்பிக்கைச்சுடர். 4. எண்ணுங்கால் எதிர்வரும் இன்பங்கள் பல கோடி. 5. பேணுங்கால் பெருகிவரும் வாய்ப்புகள். 6. வணங்குங்கால் வளர்ந்துவரும் வசதிகள். 7. படிக்குங்கால் பற்பல ஞானங்கள் புலப்படுமே. 8. பாடுங்கால் பரவசம் பொங்கி இலயித்திடுமே. 9. நினைக்குங்கால் நெஞ்சம்தான் நெகிழ்ந்திடுமே. 10. உணருங்கால் ஊனும், உயிரும் உருகிடுமே. 11. உறங்குங்கால் உன்னுள்ளே ஓர் அமைதி உறைந்திடக் காண்பாயே. - சுந்தரவதனி |
- Login to post comments