13.செல்வம் - பணம்
செல்வம் - பணம்
- நாட்டில் சுபிட்சம் உற்பத்தியாகி, பணப்புழக்கம் வளர்வதைக் காண்கிறோம்.
- எப்படி இந்த வளர்ச்சி வருகிறதுஎன இதுவரை எவரும் விளக்கியதாகத் தெரியவில்லை.
- வளர்ச்சி மிகச்சிறியதானாலும், ஆமை நகர்ந்தால் முயலை ஜெயிக்கும்.
- பொருளாதாரரீதியில் விளங்காவிட்டாலும், அன்பர்கள் தங்கள் அனுபவத்தை நம்பினால், மனதார ஏற்றால், அது விளங்கும். சிறு வளர்ச்சி, பெரு வளர்ச்சியாகும்.
-அடிப்படையில் சிருஷ்டி ஏற்பட்ட வழியும், பணம் பெருகும் சட்டமும் ஒன்றே.
-தம் சொந்த வாழ்வில் பணம் உபரியாகப் பெருகிய நேரம் மனம் எப்படியிருந்ததுஎன அன்பர் நினைவுகூர்ந்தால், மனம் மலரும் பொழுது பணம் பெருகுகிறதுஎனத் தெரியும். அதனால் பணம் எந்த அளவு பெருகவேண்டுமோ அந்த அளவுக்கு மனம் மலர்வது அவசியம்என்பது தெளிவு. இது புரியாமல் ஏற்பது.
-புரிவதுஎன்பது பொருளாதாரரீதியில் பணப்பெருக்கம் சட்டமாகப் புரிவது.
-தெளிவாகப் புரிந்து, முழுமையாக ஏற்றால், மலரும் மனம், பெருகும் பணம்எனக் காணலாம்.
- புரியாமல் மனம் மலர்ந்தாலும், பலன் அபரிமிதமாக இருக்கும்.
- புரியும்படி எழுதிய கட்டுரை ஆங்கிலத்தில் நூலாக வெளிவர இருக்கிறது. சாரம் தெளிவாக இருந்தாலும் மேல்நாட்டார் மனநிலை ஏற்குமாறு அதை எழுத நாளாகும். அதன்பின் தமிழன்பர்கள் சூழ்நிலை ஆமோதிக்கும்படியும் மனநிலை மகிழ்வோடு ஏற்கும்படியும் எழுத மேலும் கொஞ்ச நாளாகும். அதுவும் நூலாக அப்பொழுது வெளிவரும்.
-அந்நூல்கள் வெளிவரும்வரை, தற்காலிகமாக, அன்பர்கள் மனத்தை சற்று (1% - 5%) எந்த வகையில் உயர்த்தினாலும் - மெய், நிதானம், பொறுமை,நல்லெண்ணம், பொறுப்பு - அந்த அளவு வரவு உயர்வதைக் காணலாம். இது ஆன்மீக சக்தி என்பதால் 1% உயர்ந்த தூய்மைக்கு 10% வரவு உயர்வது அதே சமயம் நடக்கும். சிறு உயர்வை பேர் உயர்வாக மாற்றலாம் (1% முதல் 95% அல்லது 99%). 100% தூய்மை என்ற எல்லைக்கு வரும்பொழுது மனம் பழைய நிலையை விரும்புமேதவிர புதிய ஆன்மீக சுபிட்சத்தை ஏற்க மறுக்கும். மறுக்காதவர் அருளுக்குரிய அன்பர். மறுப்பவரும் பெறுவது பெறற்கரிய பேறு.
****
- Login to post comments