Skip to Content

09. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

(35) Seeing the Force Conscious

       சக்தியை ஜீவனுள்ளதாக அறிவது

டென்னீஸைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினால் அதில் பந்து, ராக்கட் எப்படியிருக்கும் என விளக்கப்பட்டிருக்கும். வலை, கோர்ட் அளவுகள் தரப்பட்டிருக்கும். அதனுடைய ரூல்ஸ் வரிசையாக எழுதப்பட்டிருக்கும். அதில் எதுவும் புரியாமலிருக்காது. என்னஎன மனதில் தட்டுப்படாது. டென்னீஸ் கற்றுக் கொள்ள அது பெருமளவுக்குப் பயன்படாது.

அதைப் படித்தபின் டென்னீஸ் விளையாடுவதைப் பார்த்தால் உடனே அனைத்தும் புரியும். எந்தச் சந்தேகமுமிருக்காது. படித்ததும், படிக்காததும் மனதில் படும். அதனால் டென்னீஸ் ஆட வாராது. ஆடுவது வேறு. ஆடுவதில் (1) கற்றுக் கொள்வது, (2) ஜெயிப்பது, (3) பந்தயத்தில் ஜெயிப்பது, (4) மாவட்டம், மாநிலம், இந்தியா, விம்பிள்டனில் ஜெயிப்பதுஎன்ற கட்டங்களுண்டு. The Life Divine யோகத்தைப்பற்றிய நூல். டென்னீஸைப் பற்றி படித்து அறிவதுபோல் யோகத்தைப்பற்றி அறியலாம். புரிந்தால் அந்த அறிவு ஏற்படும். அன்பராக அன்னையை ஏற்பது, ஏற்றபின் The Life Divine படிப்பது, டென்னீஸ் ஆடுவதைப் பார்ப்பதுபோல். நாமே அன்னையை ஏற்றதால் புத்தகம் கூறுபவை புரியும். ஆட்டத்தைப் பார்த்தால் ஆட முடியாது என்பதுபோல், அன்பராவதால் யோகம் புரியாது, செய்ய முடியாது. அதற்கு யோகத்தை மேற்கொள்ள வேண்டும். அதன் கட்டங்கள் பல. (1) ஏற்பது, (2) பலிப்பது, (3) ஞானத்தில் பலிப்பது, (4) வாழ்வில் பலிப்பது மற்றும் (5) உடலில் பலிப்பது.

  • ஏற்பது அன்பராவது.
  • பலிப்பது, ஒரு பிரார்த்தனை தவறாமல் பலிப்பது.
  • ஞானத்தில் பலிப்பது The Life Divineஇல் உள்ள 1452 பாராக்களில் உள்ள 1452 கருத்துகளும் தெளிவாகப் புரிவது.
    அத்துடன்
    • புத்தகத்தின் மையக் கருத்து.
    • அத்தியாயங்கட்குள்ள தொடர்பு.
    • பரம்பரையிலிருந்து ஸ்ரீ அரவிந்தம் மாறிய இடங்களின் சூட்சுமம், இரகஸ்யம்.
    • ஞானம் சித்தியாகும் பாதை (insight, intuition) மூலம் திறந்து வழிவிடுவது ஆகியவை பலிப்பது.
    • ஆரம்ப சித்திகள் அனைத்தும் பலிப்பது (சென்ற 34ஆம் நம்பர் கட்டுரையில் உள்ள 10 கருத்துகள்)
      ஸ்ரீ அரவிந்தம் வாழ்வில் பலிப்பதாகும்.
  • உடலில் பலிப்பது அன்னை செய்த யோகத்தை மேற்கொள்வது.
  • சக்தி ஜீவனுள்ளதாக ஒருவர் அனுபவித்தால் அவருக்குப் பூரணயோக வாயில் திறந்து மேற்சொன்னவற்றில் அவருக்குரியது பலிக்கும்.
  • சக்தி ஜீவனுள்ளதுஎன்றால் Silent Will பலிப்பது, நினைத்தது நடப்பது, உடல் புல்லரிப்பது போன்றவையாகும்.
  • பள்ளிக்கூடமில்லாத நம் கிராமத்திற்குப் பள்ளிக்கூடம் வரும்பொழுது அதேபோன்ற கிராமங்கள் அனைத்தும் பள்ளி பெறுவது, நமக்குக் கிடைப்பது நம்போன்ற அனைவர்க்கும் கிடைப்பது சக்தி ஜீவனாவதற்கு அடையாளம்.

தொடரும்.....

********



book | by Dr. Radut