Life Divine - கருத்து
These are finer ranges behind the gross body as there are behind the subliminal, the subconscient behind mind
மனத்திற்குப் பின்னால் அடிமனமும் ஆழ்மனமும் இருப்பதைப்போல் உடலுக்குப் பின்னாலும் பல நுண்ணிய நிலைகள் உள்ளன
பொதுவாக நாம் அறியும் சில நிகழ்ச்சிகள்:-
- நாம் ஒருவரை நினைத்தால் அவரிடமிருந்து செய்திவருவது,
- மாட்டின் முதுகில் உள்ள புண்ணை நோக்கி வரும் பூச்சியை வாலால் மாடு விரட்டுவது,
- எதிர்காலத்தில் - ஓரிரு நாளில் - வரப் போகும் செய்திகள் நமக்குச் சூசகமாகத் தெரிவது,
- உறவினர் உடல்நிலை மோசமானால் அதைச் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சிகள் தெரிவது,
- நம்மையறியாமல் வரப் போகும் நிகழ்ச்சிகள் சம்பந்தமாக மனம் பேசுவது,
- பூர்வஜென்ம ஞானம்,
- சகுனங்கள்.
உடல், உணர்வு, மனம், ஆன்மா ஆகிய நான்கு பகுதிகட்கும் சூட்சுமத் தேகம் உண்டு. முதுகின் மேல் பறக்கும் வண்டு மாட்டின் பார்வைக்குத் தெரியாது. ஆனால் உடலுக்குத் தெரிந்து வாலால் ஓட்டுகிறது. இது உடலின் சூட்சுமப்பகுதி. காலில் ஒருவருக்குக் காயம் பட்டுவிட்டது, ஆறி வருகிறது. ஆறும்வரை அவர் தம் கையைக் காலுக்கு 3'' தூரத்தில் கொண்டுவந்தால் காலைத் தொடுவது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டு வலிக்கிறதாகச் சொன்னார்.
நெடுநாளைய பக்தர். அன்னைக்கு நெருக்கமானவர். அன்னை சமாதியானபின் அவருக்கு மனம் மாறிவிட்டது கடுமையான கட்டுப்பாட்டை உயர்ந்த முறையில் ஏற்றவர் எனப் பெயர் வாங்கியவர். ஏனோ அவருக்கு அதுவரை பாராட்டாத ஆசைகளை அனுபவிக்க மனம் துடித்தது. வயதாகிவிட்டதாலும், அவர் வாழ்வுக்குப் பணமே தேவையில்லை என்பதாலும், பிரம்மச்சாரி என்பதாலும், அவருக்குப் பணமோ, பதவியோ, பெண்ணோ பிரச்சினையில்லை. செயலால் அவரால் எந்தத் தவறும் செய்ய முடியவில்லை. பழைய நெடுநாளையக் கட்டுப்பாடு தடுத்தது. ஆனால் மனத்தால், செயலால் விலக்கிய அத்தனை ஆசைகளையும் அனுபவித்தார். யாரைப் பார்த்தாலும் பணத்தைப் பற்றிப் பேசுவார். "பணம், பணம், பணம்'' என்பார். அவருடைய அறைக்கு வெளியேயும், உள்ளேயும் துர்நாற்றம் எழுந்தது. சூட்சுமமானவர்கட்கு ஆசை துர்நாற்றமுடையது, கட்டுப்பாடு நறுமண முடையது எனத் தெரியும். இது உணர்வின் சூட்சுமம் subtle vital.
ஐன்ஸ்டீனுக்கு மனதில் E=MC2 என்ற சூத்திரம் தெரிந்தது. அது மனத்தின் சூட்சுமம். அன்னைக்கு Mantra of life வாழ்வின் மந்திரம் சமஸ்கிருதத்தில் தெரிந்தது ஆன்மீகச் சூட்சுமம்.
ஜடம், சூட்சுமம், காரண தேகம் gross, subtle, causal bodies என்ற 3 பிரிவுகளுண்டு, காரணத் தேகம் சத்திய ஜீவியத்திற்குரியது.
கனவு வருவது ஆழ்மனம், அடிமனத்திலிருந்து எழுகின்றது. ஆழ்மனத்திலிருந்து வரும் கனவுகள் அர்த்தமற்றவை. அடிமனத்திலிருந்து எழுபவை நடக்க இருப்பவைகளைக் காட்டும்.
இரட்டைப்பிள்ளைகள் சூட்சும உடலால் பிணைக்கப்பட்டிருப்பார்கள். ஒருவருக்கு நேர்வது அடுத்தவருக்கு உடனே தெரியும். Corsican Brothers என்ற பிரெஞ்சு நாவல் இரட்டையரின் ஒரே உணர்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
- Login to post comments
Comments
Life Divine - கருத்துPara
Life Divine - கருத்து
Para No.3, Line No. 1 - மனதில்E=MC2 - மனதில் E = MC2
Para No.3, Line No. 4 -casual bodiesஎன்ற - causal bodies என்ற
Last Para No.- Line No. 1 - பிணைக்கப்பட்டிருப் பார்கள்.-
பிணைக்கப்பட்டிருப்பார்கள்.
Last Para, Line No. 2 - Corsicon Brothers - Corsican Brothers