Skip to Content

04.சாவித்ரி

"சாவித்ரி"

P.44 All now suppressed in us began to emerge.

அமிழ்ந்தவை ஆழத்திலிருந்து எழுகின்றன.

. ஆத்மா அஞ்ஞானத்தினின்று பெற்ற விடுதலை.

. மனமும், உடலும் பெற்ற முதல் ஆத்மீக மாற்றம்.

. பரந்த பிரம்ம-ஞானம் பரவெளியின்று பொழிந்தது.

. புதிய விவேகம் புத்துயிராக உருவம் பெற்றது.

. சத்தியத்தை ஏகனாக நோக்கி எழுந்த ஏழாயிரம் எண்ணங்கள்.

. அகத்தின் ஜோதியின் ஆயிரம் அறிவிப்பு.

. இயற்கையின் மரவுரியை எழிலாகக் கண்டனர்.

. நம்மைக் கடந்த நடனம் நாட்டியச் சிறப்பு.

. உள்ளடங்கிய உலகத்துடன் ஒன்றிய வாழ்வு.

. பெருந்திறன் பெற்ற பேறும், வியக்கும் அரவணைப்பும்.

. உலகைக் காக்கும் உயர்ந்தவருடன் உரையாடல்.

. ஊனக்கண் காணாத ரூபங்கள் அவன் முன் எழுந்தன.

. சூட்சுமத் தேவதைகளின் ஸ்தூல உருவங்கள்.

. பிரபஞ்ச சக்திகளின் பிணைப்பிலெழுந்த பின்னணி.

. மனித முயற்சிக்குப் பின்னாலுள்ள மறைந்த உலகம்.

. காலத்தின் இரகஸ்யம் கண்ணில் படும் பொக்கிஷம்.

. கடந்ததும், கற்பனைக்குரியதும் கணித்த கணிப்பு.

. பரவெளியின் பாதுகாப்பில் எழும் சிந்தனைக் கருவூலம்.

. ஏகனின் சுமுகம், இறைவனின் இயல்பு.

. மனிதனும், தெய்வமும் மனம் ஒத்த செயல்.

. அகத்தின் தழல் எழாத அவன் செயல்.

. புவியில் அவன் மகிமை பொக்கிஷமாய் எழுந்தது.

. உடலின் அணுக்களில் எழுந்த உலக மேதை.

. கர்மத்தால் கட்டுண்ட காலம் கருவை விளக்கியது.

. வித்தான சொத்து விரைவாக நடக்கின்றது.

. வாழ்வின் எல்லையைக் கடந்த வளமான ஆத்மீகம்.

. மனம் எனும் கோவில் மறைந்தெழுந்த மகிமை.

. மனித வாழ்வுக்கு மகிமை தரும் மணாளன்.

*******
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

சரித்திரத்திலும், குடும்பத்திலும் பெருஞ்சாதனைகட்குப் பின் பெருங்கொடுமைகளும், அவற்றைப் பொறுத்துக்கொண்ட தியாகங்களும் நிறைந்துள்ளன. கஷ்டங்களைப் பட்டவர் அவற்றைப் பொருட்படுத்தாமல், அந்தச் சாதனைகளைப் போற்றுவதே வாழ்வின் சூட்சும இரகஸ்யம். இதை, மக்களின் ஒத்துழைப்பு, தியாகம் என்கிறோம். எந்தக் குடும்பம் அல்லது நாடு இந்த நோக்கத்தை விரும்பி ஏற்கிறதோ, அவர்கள் எந்த உயர்வையும் எட்டலாம்.


 


 



book | by Dr. Radut