Skip to Content

10.அன்னையை அறிந்தபின்....

அன்னையை அறிந்தபின்....

ஒரு பக்தர் 1995இல் அன்னையை அறிந்தார். அறிந்ததில் சந்தோஷம். வணங்குவதில் பெருமகிழ்ச்சி. குறிப்பாகப் பிரச்சினைஎன்பது எதுவுமில்லை. சம்பளம் குறைவாக இருப்பதால் வீடுவாங்க நினைக்கவில்லை. நம் நினைவில்லாத விஷயங்கட்கும் அன்னையிடம் உயிருண்டு. குறிப்பான நினைவு, பிரார்த்தனை, ஆசை என எதுவுமில்லாவிட்டாலும், ஊரில் அனைவரும் பெறுவதை நாமும் பெற நம்மையறியாத ஆசையிருக்கும். அதை subconscious desire, ஆழ்மன ஆசை எனக் கூறுவர். நமக்கு ஆசையிலிருந்து முடியாமல் மறந்துபோனது ஆழ்மனத்திலிருக்கும். அதேபோல் நாம் ஆசைப்படமுடியாதவை நம் ஆழ்மனத்திலிருக்கும். இந்த அன்பர் வீடுவாங்க நினைக்கவில்லை. அவர் கூறுவது,

-"எதிர்பாராமல் ஒரு நல்ல வேலை கிடைத்தது. அதனால் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்க முடிந்தது''.

-"வீடு வாங்க நாங்கள் நகை விற்கவில்லை. ஆனால், பழைய கடன் ஒன்று தானாக வசூலாயிற்று. நகை வாங்கினோம்".

-"எல்லோருக்கும் பிரச்சினையாக உள்ள பள்ளி அட்மிஷன் எங்கட்கு எந்தப் பிரச்சினையுமின்றி எளிதாக எல்லாக் குழந்தைகட்கும் கிடைத்தது''.

-"எனக்கு கார் வாங்க பயம். அதற்கும் பணம் கட்டவேண்டும். கார் வாங்கும் எண்ணம் நிறைவேறவில்லை''.

-"நூறு பேர்கள் என்ற நூலில் இதுவரை உனக்கு கிடைத்தவை உன் தகுதிக்கா கிடைத்தது" என்பதை பார்த்தபின்.....கார் வாங்கும் எண்ணத்தை சமர்ப்பணம் செய்தேன்.... ஒரே மாதத்தில் சொந்தக் கார் வாங்கியாகிவிட்டது.

அன்னையை வணங்கும் சர்க்கார் ஊழியர் ஒருவர் கூறுவதாவது, "நாம் எதைக் கேட்டாலும் அன்னை தருகிறார். நம் குறைகளுக்காக அவர் எதையும் மறுப்பதில்லை. அவர் தருவதும் நம் தகுதிக்கன்று, நாம் கேட்பதற்காக. அன்னை சாதாரண சக்தியில்லை. எதனுடனும் அன்னையை ஒப்பிடமுடியாது. சர்க்கார் எடுத்த முடிவை சர்க்காரே மாற்றி நான் கேட்டவற்றை எனக்கும், என்போன்ற எல்லா ஊழியர்கட்கும் அன்னை வழங்கியது என் அனுபவம்''.

*******


 



book | by Dr. Radut