08.சாவித்ரி
சாவித்ரி
P.78 There is a provider for mind's satiety
மனம் திகட்டும் மணியான பொருள்.
. தசை தாளம் போடுகிறது; ஆனால் ஆத்மா கீதம் எழுப்பவில்லை.
. காலம் தரும் கனிந்த இனிமை அனுபவித்தறியாத ஆனந்தம்.
. பெருவாரியின் அர்த்தமற்ற அனுகூலம்.
. பூரிப்பின் சிலை புதுமையை இழந்துள்ளது.
. புண்பட்ட புன்னகையின் ஜீவனற்ற கதிர்.
. மனமோ, உணர்வோ பெற்ற சிறு தென்றல்.
. லோகத்தின் அதிபதி உடலின் அடிமைக்கு வீசிய எலும்புத்துண்டு.
. ஆனந்தக் கட்டுப்பாட்டின் அடிச்சுவடு.
. அறியாமையின் அரியாசனமுள்ள அரண்மனை.
. பெற்றனவெல்லாம் உடனே பேற்றை இழந்தன.
. காலமெனும் கருவூலத்தில் காதறுத்த காசோலை.
. இருண்ட ஜடத்தின் அரைகுறையான ஆணவம்.
. செய்த முயற்சிகளெல்லாம் செய்யவில்லைஎனக் கூறும்,
. புதிய பிரபஞ்சத்தின் குழப்பமான அட்டூழியம்.
. வெற்றியெல்லாம் பெற்ற தோல்வியின் வித்து.
. காண்பதெல்லாம் கரையேறாக் காட்சியெனத் தோன்றும்.
. எழுந்து நிற்கும் ஏற்றமிகு எண்ணத்தின் அவநம்பிக்கை.
. சாதனையின் நிலையாமை.
. சிந்தனை ஜனிக்காத உலகின் சிந்தனைச் சிற்பி.
. கருத்தைக் கடந்த கடலுள் உள்ள தீவு.
. சிறுமையாய்ப் பிறந்து பெருமையை நாடும் பிறவி.
. தெய்வாம்சம் உள்ள விலங்கு.
. எவரும் வாழும் ஏற்றமற்ற வாழ்வு.
. அவன் செயல்களை எண்ணிக் கூட்டினால் எழும் சூன்யம்.
. கொளுத்திய தீவர்த்தியை அணைத்தது அவன் ஜீவியம்.
. தொட்டிலுக்கும், சுடுகாட்டுக்கும் மேலே சுடர்விடும் நட்சத்திரம் அவன் நம்பிக்கை.
. அவன் ஆத்ம-இலக்கு அவற்றைக் கடந்தது.
. அழியாத அமரத்துவமுள்ள ஆத்ம சத்தியம் அவன் உண்மை.
. தன்னையும், தமரையும் புதுப்பிக்கும் தனயன்.
. புது உலகை சமைத்ததில் வாழ்வான்.
. அறிவற்ற அவன் காலத்தைக் கடந்து அறிவான்.
. இயற்கையையும், விதியையும் கடந்த பிரம்மம் அவன்.
****
. அவன் செயல் நிறைந்த வாழ்வினின்று அவன் பெற்ற ஓய்வு.
. மனித மாச்சரியம் அழிந்து அடங்கியது.
****
ஸ்ரீ அரவிந்த சுடர்
அறியாமை மனம் இருண்டது. உணர்வு மனம் ஓரளவு சூட்சமானது. சிந்தனைக்குரிய மனம் முழுவதும் சூட்சுமமானது. தன் கருமையை விட்டு, பாரபட்சத்தையும் இது விட முன்வந்தால், சத்தியஜீவியத் தொடர்பை இது மீண்டும் பெறலாம்.
- Login to post comments