Skip to Content

07. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் மதர் ஸ்ரீ அன்னை!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே!

அன்னையின் பொற்பாதங்களுக்குச் சமர்ப்பணம்.

தவத்திரு ஸ்ரீஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கு எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையின் ஆசி வேண்டி நானும் என் பேரன் சித்தார்த் வெங்கடேஷும் எழுதிய கடிதத்திற்கு பதில் கிடைத்தது.

என் பேரன் சித்தார்த் வெங்கடேஷ் CBSE Xth Board Examஇல் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமென்றும், cityயிலுள்ள famousஆன schoolஇல் (D.A.V.) seat கிடைக்க வேண்டுமென்றும் அன்னையிடம் மனமார பிரார்த்தித்துக் கொண்டேன். அதன்படியே அன்னையின் அருளால் 93% எடுத்து நாங்கள் எதிர்பாராத விதத்தில் ஒவ்வொரு பாடத்திலும் schoolஇல் 2வது வந்து, எங்கள் விருப்பப்படியே நாங்கள் நினைத்த schoolஇல் இப்பொழுது சேர்ந்துள்ளான். எல்லாம் அன்னையின் அருளாலும் உங்கள் ஆசியாலும்தான். எந்த கஷ்டமோ, துன்பமோ வந்தாலும் அன்னையை நினைத்து பிரார்த்தித்தால் உடன் தீர்த்து வைத்து அருள் புரிபவர் அன்னை. தாங்கள் தங்கள் கடிதத்தில் "பிரசாதம், ஆசி, அன்பு, பாதுகாப்பு, சந்தோஷம் ஆகியவற்றைத் தாங்கி வருவது'' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது போலவே, எங்கள் குடும்பத்தில் அன்னையின் அருளால் எல்லாம் நடந்து வருகின்றன.

அன்னைக்கும், பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கும் கோடானு கோடி நன்றியை, பொற்பாதங்களில் உரித்தாக்குகிறேன். எனது பணிவான நன்றியையும், வணக்கத்தையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-- N.சங்கரி, ஆதம்பாக்கம், சென்னை

******



book | by Dr. Radut