05. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
கர்மயோகி
118. எதிரி மனம் மாறி மாலையிட்டால் அவருக்குப் பூரண யோகம் பலிக்கும்.
- மனம் மாறாமல் செயல் மாறுவது உலக இயல்பு.
- தினமும் மிரட்டி அதிகாரிக்கு மொட்டைக் கடிதம் எழுதுபவன் காரியம் ஆக வேண்டும் என்ற நேரம் அவருக்கு ஆபீஸில் மாலையிட்டு வணங்கினான்.
அதிகாரி கண்களில் நீர் வழிந்தது. இது கயவனின் காரிய வாதம். - மகன் சம்பாதிக்கிறான் என்றால் கணவனுக்கு மரியாதையிருக்காது.
மனைவி மகன் தைரியத்தில் தாழ்ந்த குடும்பங்களில் கணவனை அதிகாரம் செய்வாள். கணவன் பணவரவு உயர்ந்தால் மனைவிக்குக் கணவனிடம் மரியாதை வரும். எலிசபெத் பெம்பர்லியைக் கண்டு டார்சியை ஏற்றதைப் போன்றது. - அன்பர் மனநிலை உயர்ந்து ஆத்ம நிலையானால், அதைக் கண்ட எதிரி மனம் மாறினால், அன்பருக்குப் பூரணயோகம் பலிக்கும்.
- அன்னை முறைகளை மட்டும் பின்பற்றும் அன்பரை கூட்டாளி அல்பமாகக் கருதினார். எழுத்தில் ஏமாற்றினார், உரிமையை மறுத்தார், பணம் போட்டவன் செய்யக்கூடிய அத்தனையையும் செய்தார். பணம் போட்டவர் எவருமே செய்யாத அட்டூழியத்தை அசிங்கமாக, ஆபாசமாகச் செய்து பொய்க் கேஸ் போட்டார். ஜட்ஜுக்கு கேஸ் பொய் என்று புரிந்தது. அதைத் தீர்ப்பாக முதலில் கூறினார். ஒரு பொய் கோர்ட்டில் அம்பலமாயிற்று. அடுத்த பொய் சொன்னார். அதுவும் உடைந்தது. மூன்றாம் பொய் சொன்னார். ஜட்ஜுக்கு மூன்றும் பொய் எனப் புரிந்தது. அவர் ‘நீங்கள் கூறிய மூன்று விஷயங்களில் எதை நான் நம்புவது?’ என வாதியைக் கேட்டார். அதே பார்ட்னர், அன்பர் மனம் மாறியதால் “நான் என்னால் முடிந்ததெல்லாம் செய்து பார்த்தேன். எதுவும் பலிக்கவில்லை. உங்கள் உரிமையை நானே எழுதிக் கொடுக்கிறேன்” என்றார். இது எதிரியின் மனமாற்றம்.
அன்பரின் மனம் உண்மையில் மாறியதால், எதிரியின் மனம் மாறியது.
அன்பர் மூன்றில் ஒரு பங்கு உரிமை கோரினார். முழு உரிமை வந்தது. அன்பர்கட்கு வீட்டிலும், நண்பர்களிடமும், பார்ட்னரிடமும், ஆபீஸிலும் எதிரிகள் உண்டு. அன்பரின் உண்மையான மாற்றத்தால் எதிரி மாறுவது பூரணயோக வாயில் திறப்பதாகும். - அன்பர் நிலை உலகில் இதுவரை எவரும் பெறாத நிலை.
- சக்ரவர்த்தியானாலும் 500 வருஷத்தின் முன் காரில் போயிருக்க முடியாது.
- AC-யின் குளிர் வாசம் கிடைத்திருக்காது. கம்ப்யூட்டர், email கிடையாது.
- காலம் வேறு. இன்று காலம் மாறியதால் எளியவர்க்கும் அன்று ராஜாக்களுக்கும் கிட்டாத பலனுண்டு.
- அன்பர் முன்னோடி.
- அவர் குறைந்தபட்சம் பெறுவது குபேர செல்வம்.
- அதிகபட்சம் பெறக்கூடியது இறைவன் பெற்ற ஆனந்தம்.
********
ஜீவிய மணி
மனவளம் வளமான வாழ்வு.
வளமான வாழ்வு கனமான அஸ்திவாரம்.
********
- Login to post comments