03.சாவித்ரி
"சாவித்ரி"
P.48 A wider consciousness open then its doors..
அகண்ட ஜீவியம் அதன் வாயிலைத் திறந்தது.
. ஆன்மீக மௌனம் படையெடுத்து வந்தது.
. காலத்தைக் கடந்த சிறப்பின் கதிர் கனிந்து வந்தது.
. மின்னும் களிமண்ணான நம்மை உய்விக்க அது வருகிறது.
. அதன் வெண்ணிற முத்திரை நம்மில் பதிந்தது.
. மனித மனம் மறதியின் அரங்கம்.
. சமாதியின் விழிப்பு சத்திய ஜீவியச் சிறப்பு.
. ஆழ்ந்த அகத்தின் தனிமை.
. உருவமற்ற உணர்வும் உணரும் நேரம்.
. அகண்டத்தின் காலம் அதிர்ந்தெழுந்தது.
. அறிவுக்கெட்டாத ஞானத்தின் முன்னுள்ள திரை விலகியது.
. காதில் விழாத கானம் கேட்கிறது.
. புவியறியாத புலன் உணர்வு எழுகிறது.
. இதயம் கண்டு நடுங்கும் நிலை நமக்கு இனிக்கும்.
. பிரபஞ்ச ஞான ஒளிக்கு அடங்கும் மனம்.
. ஆத்மாவின் அந்தரங்கம் அழைக்கும் ஒலி.
. இறைவனின் ஸ்பர்சத்தின் இதமான பூரிப்பு.
. அமர வாழ்வின் தழலென எழும் பொன்னான இரகஸ்யம்.
. பெரிய ஆத்மாவின் பெருநெறிகள் இவை.
. நாமறியாமல் நம்முள் வதியும் நல்லவை.
. ஏதோ ஒரு நேரம் எழும் புனித உணர்வு.
. புனிதனின் சாந்நித்தியம் புதுமையை எழுப்பும்.
. மண்ணின் மடமை மடிந்து விலகும்.
. ஆத்ம ஜோதியின் அருளின் அழகு.
. சொர்க்கக் கனலின் முணுமுணுப்பு.
. நம்மை நாம் வேறாக அறியும் நேரம்.
. இல்லாதது இருப்பதுபோல் செயல்படும் வகை.
. பிரபஞ்ச ஜனனத்தைப் பின்பற்றும் போக்கு.
. மண்ணான உடலின் மடியும் நேரம்.
. புது உலகம் பிறக்கும் தீர்க்க தரிசனம்.
. காலத்தைக் கண்டுகொள்ளாத இறைவனின் இனிமை.
. யுகம் நகர்வதைக் காணும் பெரியதின் பொறுமை.
. அற்புதத்தை எதிர்நோக்கும் பாங்கு.
. ஊன்றி நின்று செயல்படும் உலகத்தின் சக்திகள்.
*******
- Login to post comments