10.சாவித்ரி
சாவித்ரி
P.67He puts on joy and sorrow like a robe.
சந்தோஷமும் கவலையும் அவன் அணியும் ஆடை.
. அனுபவம் அவனுக்கு ஆனந்தம் தரும் மதுபானம்.
. கனத்த பரப்பு அவன் கடந்த நிலைக்குக் கட்டுப்பட்டது.
. ஆழ்ந்த மனத்துள் அனைத்தும் அறிபவனாக உறைகிறான்.
. ஜோதிமயமான மனிதன், தனித்தவன் ஏற்ற தலைமை.
. பிரம்மம், பூரணன், ஏகன்.
. மௌனமெனும் மலையை நகர்த்தும் சக்தியை அறை கூவியழைக்கிறது.
. ரூபமற்ற அமைதி குணமிழந்த நிலையில் அவளை அணைத்துப் பிடிக்கிறது.
. காலனுக்குக் கரையான நிச்சலன நித்திரை.
. அவன் தனிமையின் வலிமை சொல்லைக் கடந்தது.
. பிரம்மம், பூரணன், ஏகன்.
. காலத்தின் பரப்புக்குள் மௌனமென காலடி எடுத்து வைத்தான்.
. ஏகன் அநேகன் ஆனதை சிருஷ்டித்தது அவனே.
. அகண்டத்தின் தனிமை அனைவருள்ளும் நுழைந்தது.
. காலமும் அவனே, அது பரந்து விரியும் பரப்பும் அவனே.
. பிரம்மம், பூரணன், அசைவற்ற வமை.
. நம் ஆத்மா என உறையும் அவன்.
. நம் குறை எனும் முகமூடியை அவன் ஏற்றான்.
. தசை எனும் இப்பாசறையை தனதென ஏற்றான்.
. அவனுடைய ரூபம் மனிதனளவில் வார்க்கப்பட்டது.
. நாமும் தெய்வத் திருக்கோலம் பூண்பது அவன் திருவுள்ளம்.
. இறைவன் ஏற்ற இசைவான ரூபம்.
. படைத்தவன் நம்மை மீண்டும் படைத்து நடத்த
. தெய்வமிட்ட திட்டம் அழியும் மனிதனுள் அமையும்.
. கண்டம் அகண்டத்தை நாடி உயரும்.
. காலம் கடந்ததைத் தொடும்.
. திருவுருமாற்றம் பூமி சொர்க்கத்திற்குப் பட்ட கடன்.
. இறைவனுக்கு மனிதன் கூட்டாளி.
. நம்மை ஏற்றவனை நாம் ஏற்க வேண்டும்.
. நாம் இறைவனின் புத்திரர்கள். நாமும் அவனாக வேண்டும்.
. நாம் இறைவனின் மனிதன். நாமும் தெய்வமாக வேண்டும்.
. வாழ்வின் புதிருக்குக் கடவுள் என்பது விடை.
****
ஸ்ரீ அரவிந்த சுடர்
படைப்பான ஒவ்வொரு செயலும் நாம் ஆரம்பித்ததிலிருந்து நாமே மறைந்து செயலை வெளியிலிருந்து இரண்டாம் பேர் வழியாகப் பார்க்கலாம். அது பேரானந்தம் தரவல்லது. இரண்டாம் நபரால் இதையும் சாதிக்கலாம். |
ஸ்ரீ அரவிந்த சுடர் நம் கரணங்கள் பதப்படுத்தப்பட்டவை. ஒரு பழக்கத்தாலோ,ஒரு திறனாலோ அவை செயல்படுகின்றன. பழக்கத்தை விட்டால்,திறனைக் கடந்து வந்தால், கரணத்தின் முழுமையால் செயல்பட முடியும். மனிதன் பரம்பொருளை வெளிப்படுத்த அதுபோன்ற விழிப்பு, தேவை. மனிதனின் பிரம்ம விழிப்பு பரம்பொருளை வெளிப்படுத்தும். |
- Login to post comments