07.தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
51. அஞ்சியவனை குஞ்சும் விரட்டும்.
→அஞ்சியவனையும் ஆதரிக்கும் அன்னைச் சூழல்.
52. காயாகக் காய்த்துப் பூவாகப் பூத்ததாம்.
→காய்ப்பதன் முன், பூப்பதன் முன், பழுப்பது சமர்ப்பணம்.
53. காரிகை கற்றுக் கவி பாடாதவன்
பேரிகை கொட்டி பிழைப்பது மேல்.
(காரிகை = யாப்பிலக்கண நூல்)
→அன்னைச் சூழலில் மகிழாதவன், உலகில் மகிழும் இடமில்லை.
54. காய்ந்த மரம் வளைந்து நிற்கும்.
நற்குணம் உடையோர் பணிந்து நிற்பர்.
→அன்பு அமிர்தமாகி, அது அருளாவது
அன்னைக்குரிய அடக்கம்.
55. காய்ந்து கெடுத்தது வெயில்,
பெய்து கெடுத்தது மழை.
→காய்ந்தாலும், பெய்தாலும் அன்பர் மகசூல் பெருகும்.
தொடரும்...
****
- Login to post comments